ETV Bharat / bharat

கோவிட்-19 நிலவரம்: இந்தியாவில் புதிதாக 10,064 பேருக்கு பாதிப்பு - இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 10 ஆயிரத்து 64 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 137 பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர்.

COVID-19
கோவிட்-19
author img

By

Published : Jan 19, 2021, 2:18 PM IST

நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 10 ஆயிரத்து 64 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 137 பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர். நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 50 ஆயிரத்து 473 பேர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் 12 ஆயிரத்து 272 பேரும், கர்நாடகாவில் 12 ஆயிரத்து 175 பேரும் உயிரிழந்தனர்.

கோவிட் - 19 நிலவரம்

இந்தியாவில், இதுவரை ஒரு கோடியே ஐந்து லட்சத்து 81 ஆயிரத்து 837 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டு லட்சத்து 528 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 556 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.

பரிசோதனை நிலவரம்

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இன்று (ஜன. 19) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 7 லட்சத்து 9 ஆயிரத்து 791 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை மொத்தம் 18 கோடியே 78 லட்சத்து 2 ஆயிரத்து 827 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நேதாஜி பிறந்தநாளை அரசு விழாவை கொண்டாட மத்திய அரசு முடிவு!

நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 10 ஆயிரத்து 64 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 137 பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர். நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 50 ஆயிரத்து 473 பேர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் 12 ஆயிரத்து 272 பேரும், கர்நாடகாவில் 12 ஆயிரத்து 175 பேரும் உயிரிழந்தனர்.

கோவிட் - 19 நிலவரம்

இந்தியாவில், இதுவரை ஒரு கோடியே ஐந்து லட்சத்து 81 ஆயிரத்து 837 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டு லட்சத்து 528 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 556 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.

பரிசோதனை நிலவரம்

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இன்று (ஜன. 19) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 7 லட்சத்து 9 ஆயிரத்து 791 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை மொத்தம் 18 கோடியே 78 லட்சத்து 2 ஆயிரத்து 827 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நேதாஜி பிறந்தநாளை அரசு விழாவை கொண்டாட மத்திய அரசு முடிவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.