ETV Bharat / bharat

குளிர்கால கூட்டத்தொடர்: நவம்பர் 18இல் கூடுகிறது நாடாளுமன்றம்!

டெல்லி: நவம்பர் 18ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது.

author img

By

Published : Oct 21, 2019, 4:55 PM IST

Updated : Oct 21, 2019, 5:58 PM IST

Winter session of Parliament to begin from November 18

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வரும் 18ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 13ஆம் தேதிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சகம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தகவல் அனுப்பியுள்ளது.

இந்தக் குளிர்கால கூட்டத் தொடரில் பல மசோதாக்களைத் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மோடி தலைமையில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தபோது, முதல்முறையாக நடைபெற்ற கோடைகால கூட்டத் தொடரில்,

  • மோட்டார் வாகன சட்டதிருத்த மசோதா
  • முத்தலாக் சட்டத் திருத்த மசோதா
  • தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட 38 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையும் படிங்க..இடைத்தேர்தல் வாக்குப்பதிவு - களநிலவரங்கள் உடனுக்குடன்!

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வரும் 18ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 13ஆம் தேதிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சகம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தகவல் அனுப்பியுள்ளது.

இந்தக் குளிர்கால கூட்டத் தொடரில் பல மசோதாக்களைத் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மோடி தலைமையில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தபோது, முதல்முறையாக நடைபெற்ற கோடைகால கூட்டத் தொடரில்,

  • மோட்டார் வாகன சட்டதிருத்த மசோதா
  • முத்தலாக் சட்டத் திருத்த மசோதா
  • தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட 38 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையும் படிங்க..இடைத்தேர்தல் வாக்குப்பதிவு - களநிலவரங்கள் உடனுக்குடன்!

Intro:பசுவின் வயிற்றில் இருந்த 52 கிலோ
பிளாஸ்டிக் பை கழிவுகள் அகற்றும்


Body:பசுவின் வயிற்றில் இருந்த 52 கிலோ
பிளாஸ்டிக் பை கழிவுகள் அகற்றும்

சென்னை,
சென்னையில் பசு மாட்டின் வயிற்றில் இருந்த 52 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சிகிச்சை இயல் துறை மருத்துவர்கள் அகற்றி சாதனை புரிந்துள்ளனர்.

சென்னை திருமுல்லைவாயில் சேர்ந்த முனிரத்தினம் பசுமாடு ஒன்றினை 6 மாதங்களுக்கு முன்பு வேலூரில் இருந்து வாங்கி வந்து வளர்த்து வருகிறார். இந்த மாட்டினை அவர் வாங்கி வரும்போது சினையாக இருந்துள்ளது. வேலூரில் இருந்து வாங்கி வந்த மாட்டினை திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள தனது வீட்டில் வைக்கோல்,, தீவனங்கள் கொடுத்து வளர்த்து வந்துள்ளார்.
திடிரென பசு மாடு சிறுநீர் கழிக்க முடியாமலும், சாணம் போட முடியாமல் அவதிப்பட்டு உள்ளது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கால்நடை மருத்துவரிடம் சிகிச்சைக்காக பசுமாட்டை அழைத்து சென்றுள்ளார். அஸ்வினி சோதித்த மருத்துவர் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும்படி அறிவுறுத்தியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு பசு மாட்டினை முனிரத்தினம் அழைத்து வந்துள்ளார்.

பசு மாட்டினை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவற்றின் வயிற்றில் பிளாஸ்டிக் பைகள், ஆனி போன்றவை இருப்பதை கண்டறிந்தனர். அதனைத்தொடர்ந்து மாட்டிற்கு சிகிச்சை செய்வதற்கு திட்டமிட்டனர். அதன்படி கடந்த 18ஆம் தேதி மாட்டிற்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து குடலில் சிக்கியிருந்த 52 கிலோ பிளாஸ்டிக் பைகள் கழிவினை அகற்றியுள்ளனர்.

இதுகுறித்து சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை இயல் துறை இயக்குனர் பலசுப்ரமனியம் கூறும்போது, சிறுநீர் கழிக்க முடியாமலும் ,சாணம் போட முடியாமலும் பசுமாடு அவதிப்பட்ட நிலையில் திருமுல்லைவாயில் சார்ந்த அதன் உரிமையாளர் முனிரத்தினம் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.
பசுமாட்டிற்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்த பொழுது அவற்றின் வயிற்றில் சிறு ஆணிகள் மட்டுமே இருப்பது தெரிந்தது. அதனைத் தொடர்ந்து பசுமாட்டின் வயிற்றினை ஸ்கேன் செய்தபோது வயிற்றில் பிளாஸ்டிக் குப்பைகள் இருப்பது கண்டறியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கால்நடை மருத்துவக் கல்லூரியின் மருத்துவர் குழு பசு மாட்டின் வயிற்றுப் பகுதியில் இருந்த பிளாஸ்டிக் குப்பைகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். முதல் முறையாக 52 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் பசுமாட்டின் வயிற்றில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.
இந்தப் பசு மாட்டினை 6 மாதத்திற்கு முன்பு வேலூரில் இருந்து அதன் உரிமையாளர் வாங்கி வந்துள்ளார். அங்கு என்ன உணவினை உண்டது என்பது நமக்கு தெரியாது. ஆனால் இங்கு வைக்கோல், மாட்டுத்தீவனம் போன்றவற்றை உணவாக அளித்து உள்ளார்.
பசு மாட்டின்வயிற்றில் 52 கிலோ பிளாஸ்டிக் குப்பை, கன்றுகுட்டி நடை 18 கிலோ உட்பட சுமார் 80 கிலோவுக்கு மேல் எடை யை தாங்கியிருந்தது. பசுமாடு கன்று ஈன்றவுடன் பிளாஸ்டிக் பைகளால் ஏற்பட்ட பிரச்சினையால் சிறுநீர் கழிக்கவும்,சாணம் போடவும் சிரமப்பட்டு உள்ளது.

பசுமாடு ஐந்தறிவு உடன் பகுத்தறிந்து உணவு உண்ணும் திறன் இல்லாதது. குப்பைகளில் உள்ள உணவினை அப்படியே உண்டு விடும். எனவே பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளில் உணவுப்பொருட்களை கட்டி குப்பைத்தொட்டியில் போட கூடாது. தமிழக அரசு பிளாஸ்டிக் பைகளை தடை செய்துள்ளது. எனவே பொதுமக்கள் உணவுகளை பிளாஸ்டிக் பைகளில் கட்டி குப்பைத்தொட்டியில் போட வேண்டாம் என தெரிவித்தார்.
பசு மாட்டின் உரிமையாளர் முணிரத்னம், பொதுமக்கள் யாரும் உணவுப்பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் கட்டி குப்பைத்தொட்டியில் போட வேண்டாம் எனவும், இதனால் பசுமாடுகள் உணவை உண்டு பாதிக்கப்படுகிறது என தெரிவித்தார்.




Conclusion:
Last Updated : Oct 21, 2019, 5:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.