ETV Bharat / bharat

விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவு - மோசமான நிலையின் பிரதிபலிப்பு

author img

By

Published : May 11, 2020, 11:30 AM IST

ஹைதராபாத்: உள்நாட்டு ரசாயனத் தொழிலில், கடந்த 3 ஆண்டுகளில் சராசரியாக நான்கு பெரிய விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இவை ரசாயனங்கள் உற்பத்தி மற்றும் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் விரிவான சட்டத்தின் மோசமான நிலையைப் பிரதிபலிப்பதாக உள்ளது.

Visakha gas disaster  gas disaster  விசாகப்பட்டினம் விஷவாயு விபத்து  விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு  விசாகப்பட்டினம் துயரம்  விஷவாயு கசிவு  Gas Leak  Gas tragedy
Visakha gas disaster gas disaster விசாகப்பட்டினம் விஷவாயு விபத்து விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு விசாகப்பட்டினம் துயரம் விஷவாயு கசிவு Gas Leak Gas tragedy

மக்கள் மூச்சுத் திணறி உயிரிழப்பதை விட பெரிய சோகம் எதுவும் இருக்க முடியாது. விசாகப்பட்டினத்தில் உள்ள பாலிமர் தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சு வாயுக்கசிவில் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 11 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பயங்கர சம்பவம் 1984ஆம் ஆண்டின் போபால் விஷவாயுக் கசிவு சோகத்தை அனைவருக்கும் நினைவூட்டியது. சில மருந்துகளைத் தயாரிப்பதற்கான வேதியியல் பொருள்கள் இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படுவதால் ஏப்ரல் இரண்டாம் வாரம், இந்த தொழிற்சாலைக்கு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்குமாறு இந்திய வேதியியல் கவுன்சில் கேட்டுக்கொண்டது.
ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதால், எல்ஜி பாலிமர்ஸ் ஆலை உற்பத்தியைத் தொடங்கியது. இது அபாயகரமான ஸ்டைரீன் நீராவிகளின் கசிவுக்கு வழிவகுத்தது. பல கால்நடைகளும், செல்லப்பிராணிகளும் நச்சுவாயுக் கசிவால் கொல்லப்பட்டன. அதேநேரத்தில், பல பெரியவர்களும், குழந்தைகளும் வாழும்போதே நரகத்தை அனுபவித்து உயிரிழந்தனர்.
நிலையான பராமரிப்பு தேவைப்படும் ஒரு ஆலையில், நாடு தழுவிய ஊரடங்குதான் இந்த விபத்து ஏற்பட்டதற்கு காரணமானது. கடந்த ஜனவரி மாதம், சுகாதாரம் இல்லாததால், 100 ஆண்டுகள் பழமையான சர்க்கரை ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக எல்ஜி பாலிமர்ஸ் கார்ப்பரேட் செய்தி அறிக்கையில் தெரிவித்திருந்தது.

மேலும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும், சமூகப் பொறுப்பை மேம்படுத்துவதிலும் சிறந்த நடைமுறைகளைக் கடைப்பிடித்து வருவதாக அந்நிறுவனம் உறுதியளித்தது. அந்நிறுவனம் உண்மையிலேயே அந்த நடைமுறைகளைச் செயல்படுத்தியிருந்தால் இத்தகைய வாயுக்கசிவை தவிர்த்திருக்கலாம். இந்த விபத்துக்கு ஆந்திர அரசு நியாயமான பதிலளித்து இழப்பீடும் அறிவித்துள்ளது.

Visakha gas disaster  gas disaster  விசாகப்பட்டினம் விஷவாயு விபத்து  விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு  விசாகப்பட்டினம் துயரம்  விஷவாயு கசிவு  Gas Leak  Gas tragedy
விசாகப்பட்டினம் விஷவாயு துயரம்
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 விழுக்காட்டைக் கொண்டுள்ள இந்த ரசாயனத் தொழிற்சாலைகளின் உற்பத்திப் பொருள்கள், பெட்ரோ கெமிக்கல்ஸ், உரங்கள், பெயிண்ட்டுகள், கிருமி நாசினிகள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஐந்து சட்டங்களும், 19 விதிகளும், இந்திய ரசாயனத் தொழிற்துறையை ஒழுங்குபடுத்தினாலும், அவை எதுவும் உள்ளபடியே நேரடியாக தொழில்துறையில் கவனம் செலுத்தவில்லை.

மேலும், இந்தியாவின் வரைவு தேசிய வேதியியல் கொள்கையானது 2014ஆம் ஆண்டு முதல் இன்றுவரை ஒப்புதலின் இறுதிக் கட்டத்தில் உள்ளது. பேரழிவை ஏற்படுத்திய போபால் விஷவாயு கசிவினால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். மேலும், லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு விதமான உடல்பாதிப்புகளுக்கு உள்ளாகினர். இது தலைமுறைகளையும் தாண்டி அனைவரையும் பாதித்து வருகிறது. இதனால் ரசாயனத் துறைக்கு எதிராக மத்திய அரசு கடுமையான நிலைப்பாட்டை எடுத்தது.


ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நிலைப்பாடு மென்மையாக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு ரசாயனத் தொழிலில், கடந்த 3 ஆண்டுகளில் சராசரியாக நான்கு பெரிய விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இவை ரசாயனங்கள் உற்பத்தி மற்றும் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் விரிவான சட்டத்தின் மோசமான நிலையை பிரதிபலிப்பதாக உள்ளது.


இந்தியாவில் ரசாயனத் தொழிலின் சந்தை அளவு 178 பில்லியன் அமெரிக்க டாலராக (இந்திய மதிப்பில் சுமார் பதிமூன்றரை லட்சம் கோடி ரூபாய்) உள்ளது. இது 2025 ஆம் ஆண்டில் இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தஹேஜ் (குஜராத்), பரதீப் (ஒடிசா), கடலூர் (தமிழ்நாடு) மற்றும் விசாகப்பட்டினம் (ஆந்திரா) போன்றவை உற்பத்தி மையங்களாக உருவாக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. எப்போதும் மோசமானதான விளைவுகள் ஏற்படுவதால், இத்தகைய தொழிற்சாலைகளின் பின்விளைவுகள் புறக்கணிக்கப்படக் கூடாது.

இந்த தொழிற்சாலைகள் மக்கள் வாழும் இடங்களுக்கு வெளியில் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். மேம்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அவை கட்டப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4ஆம் தேதி ரசாயனப் பேரழிவு தடுப்பு தினத்தை அனுசரிப்பது மட்டும் போதாது. அரசுகளும், தொழிற்சாலைகளும் பாதுகாப்பான பணி நிலைமைகளை உறுதிப்படுத்த வேண்டும். அப்போதுதான், தொழில்துறை பாதுகாப்பு என்பது இந்தியாவில் ஒரு முக்கியமான ஒன்றாக மாறும்.

இதையும் படிங்க: விஷ வாயு கசிவுகள் ஒரு பார்வை!

மக்கள் மூச்சுத் திணறி உயிரிழப்பதை விட பெரிய சோகம் எதுவும் இருக்க முடியாது. விசாகப்பட்டினத்தில் உள்ள பாலிமர் தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சு வாயுக்கசிவில் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 11 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பயங்கர சம்பவம் 1984ஆம் ஆண்டின் போபால் விஷவாயுக் கசிவு சோகத்தை அனைவருக்கும் நினைவூட்டியது. சில மருந்துகளைத் தயாரிப்பதற்கான வேதியியல் பொருள்கள் இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படுவதால் ஏப்ரல் இரண்டாம் வாரம், இந்த தொழிற்சாலைக்கு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்குமாறு இந்திய வேதியியல் கவுன்சில் கேட்டுக்கொண்டது.
ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதால், எல்ஜி பாலிமர்ஸ் ஆலை உற்பத்தியைத் தொடங்கியது. இது அபாயகரமான ஸ்டைரீன் நீராவிகளின் கசிவுக்கு வழிவகுத்தது. பல கால்நடைகளும், செல்லப்பிராணிகளும் நச்சுவாயுக் கசிவால் கொல்லப்பட்டன. அதேநேரத்தில், பல பெரியவர்களும், குழந்தைகளும் வாழும்போதே நரகத்தை அனுபவித்து உயிரிழந்தனர்.
நிலையான பராமரிப்பு தேவைப்படும் ஒரு ஆலையில், நாடு தழுவிய ஊரடங்குதான் இந்த விபத்து ஏற்பட்டதற்கு காரணமானது. கடந்த ஜனவரி மாதம், சுகாதாரம் இல்லாததால், 100 ஆண்டுகள் பழமையான சர்க்கரை ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக எல்ஜி பாலிமர்ஸ் கார்ப்பரேட் செய்தி அறிக்கையில் தெரிவித்திருந்தது.

மேலும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும், சமூகப் பொறுப்பை மேம்படுத்துவதிலும் சிறந்த நடைமுறைகளைக் கடைப்பிடித்து வருவதாக அந்நிறுவனம் உறுதியளித்தது. அந்நிறுவனம் உண்மையிலேயே அந்த நடைமுறைகளைச் செயல்படுத்தியிருந்தால் இத்தகைய வாயுக்கசிவை தவிர்த்திருக்கலாம். இந்த விபத்துக்கு ஆந்திர அரசு நியாயமான பதிலளித்து இழப்பீடும் அறிவித்துள்ளது.

Visakha gas disaster  gas disaster  விசாகப்பட்டினம் விஷவாயு விபத்து  விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு  விசாகப்பட்டினம் துயரம்  விஷவாயு கசிவு  Gas Leak  Gas tragedy
விசாகப்பட்டினம் விஷவாயு துயரம்
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 விழுக்காட்டைக் கொண்டுள்ள இந்த ரசாயனத் தொழிற்சாலைகளின் உற்பத்திப் பொருள்கள், பெட்ரோ கெமிக்கல்ஸ், உரங்கள், பெயிண்ட்டுகள், கிருமி நாசினிகள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஐந்து சட்டங்களும், 19 விதிகளும், இந்திய ரசாயனத் தொழிற்துறையை ஒழுங்குபடுத்தினாலும், அவை எதுவும் உள்ளபடியே நேரடியாக தொழில்துறையில் கவனம் செலுத்தவில்லை.

மேலும், இந்தியாவின் வரைவு தேசிய வேதியியல் கொள்கையானது 2014ஆம் ஆண்டு முதல் இன்றுவரை ஒப்புதலின் இறுதிக் கட்டத்தில் உள்ளது. பேரழிவை ஏற்படுத்திய போபால் விஷவாயு கசிவினால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். மேலும், லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு விதமான உடல்பாதிப்புகளுக்கு உள்ளாகினர். இது தலைமுறைகளையும் தாண்டி அனைவரையும் பாதித்து வருகிறது. இதனால் ரசாயனத் துறைக்கு எதிராக மத்திய அரசு கடுமையான நிலைப்பாட்டை எடுத்தது.


ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நிலைப்பாடு மென்மையாக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு ரசாயனத் தொழிலில், கடந்த 3 ஆண்டுகளில் சராசரியாக நான்கு பெரிய விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இவை ரசாயனங்கள் உற்பத்தி மற்றும் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் விரிவான சட்டத்தின் மோசமான நிலையை பிரதிபலிப்பதாக உள்ளது.


இந்தியாவில் ரசாயனத் தொழிலின் சந்தை அளவு 178 பில்லியன் அமெரிக்க டாலராக (இந்திய மதிப்பில் சுமார் பதிமூன்றரை லட்சம் கோடி ரூபாய்) உள்ளது. இது 2025 ஆம் ஆண்டில் இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தஹேஜ் (குஜராத்), பரதீப் (ஒடிசா), கடலூர் (தமிழ்நாடு) மற்றும் விசாகப்பட்டினம் (ஆந்திரா) போன்றவை உற்பத்தி மையங்களாக உருவாக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. எப்போதும் மோசமானதான விளைவுகள் ஏற்படுவதால், இத்தகைய தொழிற்சாலைகளின் பின்விளைவுகள் புறக்கணிக்கப்படக் கூடாது.

இந்த தொழிற்சாலைகள் மக்கள் வாழும் இடங்களுக்கு வெளியில் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். மேம்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அவை கட்டப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4ஆம் தேதி ரசாயனப் பேரழிவு தடுப்பு தினத்தை அனுசரிப்பது மட்டும் போதாது. அரசுகளும், தொழிற்சாலைகளும் பாதுகாப்பான பணி நிலைமைகளை உறுதிப்படுத்த வேண்டும். அப்போதுதான், தொழில்துறை பாதுகாப்பு என்பது இந்தியாவில் ஒரு முக்கியமான ஒன்றாக மாறும்.

இதையும் படிங்க: விஷ வாயு கசிவுகள் ஒரு பார்வை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.