நாட்டின் தலைநகர் டெல்லியின் மையப்பகுதியில் இன்று மாலை 5.45 மணிக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வானது ரிக்டர் அளவுகோலில் 3.5 என பதிவாகியிருந்தது.
இந்தப் பூமி அதிர்ச்சி காரணமாக குடியிருப்புகளில் தங்கியிருந்த மக்கள் பதற்றத்துடன் வெளியே வந்தனர். டெல்லியில் 8 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மைய தகவல்கள் கூறுகின்றன.
கோவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், இந்த நிலநடுக்கம் அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
வட இந்தியாவில் கடந்த சில நாள்களாக லேசான பூமி அதிர்ச்சி மக்களால் உணரப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்டப் பகுதிகளிலும் லேசான பூமி அதிர்வுகள் ஏற்பட்டது நினைவுக் கூரத்தக்கது.