ETV Bharat / bharat

தாஜ்மஹாலில் தாய்ப்பால் புகட்ட தனியறை! - allocated for mother

டெல்லி: குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதற்கென பிரத்யேக தனியறையைக் கொண்ட நாட்டின் முதல் நினைவுச் சின்னம் என்னும் பெருமையை தாஜ்மஹால் பெறவுள்ளது.

தாஜ்மகால்
author img

By

Published : May 28, 2019, 11:27 AM IST

உலக அதிசயங்களில் ஒன்றாக தாஜ்மஹால் விளங்குகிறது. காதலின் நினைவுச்சின்னமாக இருக்கும் தாஜ்மஹால் கட்டடக்கலையின் சிறந்த உதாரணமாகவும், மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பெற்றிருக்கிறது. ஆக்ரா நதிக்கரையை அழுகுபடுத்தி சுற்றுலாப் பயணிகளை பிரமித்து பார்க்க வைக்கிறது. தாஜ்மஹால் உருவான கதை கதையல்ல காதலின் வரலாறு.

இந்நிலையில், லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் சுற்றுலாத் தலமாக விளங்கும் தாஜ்மஹாலில், குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்ட பெண்கள் மிகவும் சிரமப்பட்டுவருவதாக கூறப்படுகிறது. இதனால் இந்திய தொல்பொருளியல் ஆய்வுத்துறை அறிவுறுத்தலின்படி தாய்ப்பால் புகட்டுவதற்கான பிரத்யேக அறை கட்டும் பணி தொடங்கி நடைபெற்றுவருகிறது.

கட்டடம் கட்டும் பணிகள் முடிந்து, ஜூலை மாதத்திலிருந்து இந்த அறையானது பயன்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தாய்ப்பால் தனியறைக் கொண்ட இந்தியாவின் நினைவுச் சின்னம் என்ற பெருமையை தாஜ்மஹால் பெற இருக்கிறது.

உலக அதிசயங்களில் ஒன்றாக தாஜ்மஹால் விளங்குகிறது. காதலின் நினைவுச்சின்னமாக இருக்கும் தாஜ்மஹால் கட்டடக்கலையின் சிறந்த உதாரணமாகவும், மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பெற்றிருக்கிறது. ஆக்ரா நதிக்கரையை அழுகுபடுத்தி சுற்றுலாப் பயணிகளை பிரமித்து பார்க்க வைக்கிறது. தாஜ்மஹால் உருவான கதை கதையல்ல காதலின் வரலாறு.

இந்நிலையில், லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் சுற்றுலாத் தலமாக விளங்கும் தாஜ்மஹாலில், குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்ட பெண்கள் மிகவும் சிரமப்பட்டுவருவதாக கூறப்படுகிறது. இதனால் இந்திய தொல்பொருளியல் ஆய்வுத்துறை அறிவுறுத்தலின்படி தாய்ப்பால் புகட்டுவதற்கான பிரத்யேக அறை கட்டும் பணி தொடங்கி நடைபெற்றுவருகிறது.

கட்டடம் கட்டும் பணிகள் முடிந்து, ஜூலை மாதத்திலிருந்து இந்த அறையானது பயன்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தாய்ப்பால் தனியறைக் கொண்ட இந்தியாவின் நினைவுச் சின்னம் என்ற பெருமையை தாஜ்மஹால் பெற இருக்கிறது.

Intro:Body:

*தாய்ப்பால் புகட்ட தாஜ்மகாலில் தனியறை:*



*குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதற்கான தனியறையைக் கொண்ட இந்தியாவின் முதல் நினைவுச் சின்னம் எனும் பெருமையை தாஜ்மகால் பெறவுள்ளது.*



*ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து பார்வையிட்டு செல்லும் முன்னணி சுற்றுலா தலமான தாஜ்மகாலில், குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்ட பெண்கள் மிகவும் சிரமப்பட்டுவருவதாக கூறப்படுகிறது.*



*இதையடுத்து, இந்திய தொல்பொருளியல் ஆய்வு துறை அறிவுறுத்தலின் பேரில் தாய்ப்பால் புகட்டுவதற்கான பிரத்யேக அறை கட்டும் பணி தொடங்கியுள்ளது. கட்டிடம் கட்டும் பணிகள் முடிந்து, ஜூலை மாதத்திலிருந்து இந்த அறையானது பயன்பாட்டுக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.*


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.