ETV Bharat / bharat

வாய்ச்சொல் வீரர்கள்… செயலில்? மத்திய அரசை சாடிய ப.சிதம்பரம்

டெல்லி: இந்திய நிலப்பரப்பில் ஒரு அங்குலத்தை கூட யாரும் தொட முடியாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருப்பது வெறும் வாய்ச்சொல் மட்டும் என்றும், சீன ராணுவத்தினர் இன்னும் இந்தியாவிற்கு சொந்தமான எல்லைக் கட்டுப்பாட்டுக் பகுதியிலேயே இருப்பதாக பாதுகாப்பு அமைப்புகளின் மதிப்பீட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Jul 19, 2020, 1:18 AM IST

  வாய்ச்சொல் வீரர்கள்… செயலில்? மத்திய அரசை சாடிய ப.சிதம்பரம்
வாய்ச்சொல் வீரர்கள்… செயலில்? மத்திய அரசை சாடிய ப.சிதம்பரம்

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் , “ இந்தியாவிற்கு சொந்தமான எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில், ” சீன ராணுவத்தினர் 1.5 கி.மீ வரை ஆக்கிரமைத்திருப்பதாக இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் மதிப்பிட்டுள்ளன (இந்தியாவின் கருத்துப்படி), மே மாதத்தில், சீன ராணுவத்தினர், இந்தியாவிற்கு சொந்தமான எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சுமார் ஐந்து கி.மீ வரை ஊடுருவியிருந்தன," என்று தெரிவித்துள்ளார்.

மேலும், " யாரும் இந்திய எல்லைக்குள் ஊடுருவவில்லை, இந்திய எல்லைக்குள் யாரும் இல்லை" என்று மத்திய அரசு கூறிவருவது வெறும் வாய்ச்சொல் மட்டுமே என்றும், "இந்தியாவின் ஒரு அங்குலத்தை யாரும் தொட முடியாது" என்ற பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கை வசீகர வாய்ச்சொல் பேச்சு கலை" என்று மற்றொரு ட்வீடில் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து மத்திய அரசை கடுமையாக சாடியுள்ள ப. சிதம்பரம், "மத்திய அரசு யதார்த்தத்தை ஒத்துக் கொள்ளாதவரை, நிலைமை ஒரு மழுப்பலான இலக்காக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் , “ இந்தியாவிற்கு சொந்தமான எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில், ” சீன ராணுவத்தினர் 1.5 கி.மீ வரை ஆக்கிரமைத்திருப்பதாக இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் மதிப்பிட்டுள்ளன (இந்தியாவின் கருத்துப்படி), மே மாதத்தில், சீன ராணுவத்தினர், இந்தியாவிற்கு சொந்தமான எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சுமார் ஐந்து கி.மீ வரை ஊடுருவியிருந்தன," என்று தெரிவித்துள்ளார்.

மேலும், " யாரும் இந்திய எல்லைக்குள் ஊடுருவவில்லை, இந்திய எல்லைக்குள் யாரும் இல்லை" என்று மத்திய அரசு கூறிவருவது வெறும் வாய்ச்சொல் மட்டுமே என்றும், "இந்தியாவின் ஒரு அங்குலத்தை யாரும் தொட முடியாது" என்ற பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கை வசீகர வாய்ச்சொல் பேச்சு கலை" என்று மற்றொரு ட்வீடில் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து மத்திய அரசை கடுமையாக சாடியுள்ள ப. சிதம்பரம், "மத்திய அரசு யதார்த்தத்தை ஒத்துக் கொள்ளாதவரை, நிலைமை ஒரு மழுப்பலான இலக்காக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.