ETV Bharat / bharat

இந்தியாவில் கோவிட்-19 கட்டுக்குள் இருக்கிறதா? ஹர்ஷ் வர்தன் பிரத்யேக பேட்டி

author img

By

Published : May 11, 2020, 8:03 PM IST

Updated : May 11, 2020, 10:04 PM IST

ஹைதராபாத்: இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்று கட்டுக்குள் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன், நாட்டில் தினந்தோறும் மூன்று லட்சம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ கிட்ஸ்) தயாரிக்கப்படுவதாகவும் ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறினார்.

Harsh Vardhan  COVID-19  Testing kits  Hotspots  Lockdown  இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு  மத்திய சுகாதார அமைச்சகம்  சுகாதார புள்ளி விவரங்களில் வேறுபாடு  ஹர்ஷ வர்தன்  தனி நபர் பாதுகாப்பு உபகரணங்கள்  கரோனா வைரஸ்
Harsh Vardhan COVID-19 Testing kits Hotspots Lockdown இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு மத்திய சுகாதார அமைச்சகம் சுகாதார புள்ளி விவரங்களில் வேறுபாடு ஹர்ஷ வர்தன் தனி நபர் பாதுகாப்பு உபகரணங்கள் கரோனா வைரஸ்

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஈடிவி பாரத்துக்கு காணொலி வாயிலாக அளித்த சிறப்பு நேர்காணலில், “இந்தியாவில் சுகாதார முன்னணி வீரர்களை பாதுகாக்கும் வகையில், தினந்தோறும் மூன்று லட்சம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ கிட்ஸ்) தயாரிக்கப்படுகிறது. 450 ஆய்வகங்கள் வாயிலாக 95 ஆயிரம் பேருக்கு தினந்தோறும் கரோனா பரிசோதனை நடத்த முடியும்” என்று கூறினார்.

ஈடிவி பாரத் ஆசிரியரின் கேள்விக்கு மத்திய அமைச்சர் அளித்த பதில்கள் வருமாறு:-

1) கேள்வி: இது அனைவருக்கும் கடினமான காலம். இந்தியாவின் நிலையை அறிந்து கொள்ள அனைவரும் விரும்புகின்றனர். நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று உங்கள் அரசாங்கம் உறுதியாக நம்புகிறதா?

பதில்: கரோனா வைரஸ் பரவலுக்கு முன்பே அரசாங்கம் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. எல்லைப் பகுதியில் கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் சோதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சம் மக்கள் சமூக கண்காணிப்பில் உள்ளனர். ஒரு நாள் மக்கள் ஊரடங்கு மற்றும் முழு பொதுஅடைப்பு (லாக்டவுன்) உள்ளிட்ட நடவடிக்கைகளை தைரியமாக எடுத்தோம்.

இந்தியாவில் கரோனா வைரஸின் நிலை என்ன?

இந்தச் செயல்திறன்மிக்க திட்டங்களால், மற்ற நாடுகளுடன் ஒப்பீடும் போது இந்தியா நன்றாகவே உள்ளது. நாங்கள் உலகம் முழுவதும் பார்க்கிறோம். இந்தியாவில் குறைந்த இறப்பு விகிதம் உள்ளது. அடுத்த 11-12 நாள்களுக்குள் பாதிப்பாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். நமது நாட்டில் 30 விழுக்காட்டினர் குணமடைந்துவருகின்றனர். அடுத்த நான்கு மாதங்களுக்குள் நாட்டில் 450-க்கும் மேற்பட்ட ஆய்வகங்கள் விரிவுப்படுத்தப்படும். அதன்மூலம் தினசரி 95 ஆயிரம் பேருக்கு சோதனை நடத்தலாம்.

2) கேள்வி: நாட்டில் கோவிட்-19 பாதிப்புகள் மற்றும் பரவல் அதிகரித்துவருகின்றன. வருங்காலங்களில் சோதனைகள் அதிகரிக்கும் போது பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதா?

பதில்: இந்தியாவில் கோவிட்-19 பாதிப்புகள் குறிப்பிடத்தக்க அதிகரிப்புகள் இல்லை. நமது பாதிப்பாளர்கள் குறித்த வரைப்படம் தெளிவாக உள்ளது. ஒரு நாளில் இரண்டாயிரம் பேருடன் சோதனை செய்ய தொடங்கினோம். தற்போது கடந்த 24 மணி நேரத்தில் 85 ஆயிரம் பேரை சோதித்துள்ளோம்.

கடந்த மூன்று மாதங்களில் நாட்டில் சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை பாதிப்பாளர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையை சிறிய நாடுகளுடன் ஒப்பிடுகிறோம். அங்கு லட்சக்கணக்கில் பாதிப்பாளர்கள் உள்ளனர். மேலும், நமது நாட்டில் இறப்பு விகிதம் 3 விழுக்காடு ஆக உள்ளது. ஆனால் உலகளவில் 7 முதல் 7.5 விழுக்காடு ஆக உள்ளது.

3) கேள்வி: கரோனா பரிசோதனை மையங்கள் தொடர்பாக அரசின் திட்டம் என்ன? இந்த மாத இறுதிக்குள் எத்தனை சோதனை மையங்கள் கைவசம் இருக்கும்? தற்போதைய சோதனை திட்டத்தின் பின்னணி என்ன? சோதனை கூடங்கள் போதுமானதாக உள்ளதா?

பதில்: வைரலாஜி சோதனைக்காக நாங்கள் மாதிரிகளை அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளோம். வைரஸின் முதல் பாதிப்பு அறிவிக்கப்பட்டபோது ஜனவரி மாதத்தில் நம்மிடம் ஒரு ஆய்வகம் மட்டுமே இருந்தது. தற்போது, (மே இரண்டாவது வாரத்தில்) நாடு முழுவதிலும் 472 ஆய்வகங்கள் விரிவுப்படுத்தியுள்ளோம்.

(மத்திய அமைச்சரின் நேர்காணலை ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே சொடுக்கவும்)

இதில் 275 ஆய்வகங்கள் அரசுத் துறையைச் சேர்ந்தவை. இதுவரை 95 ஆயிரம் சோதனை திறனை உருவாக்கியுள்ளோம். இந்தத் திட்டம் ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதலின்பேரில், நிபுணர் குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் அமைந்துள்ளது. யார் சோதிக்கப்பட வேண்டும் என்பதற்கான தெளிவான ஆலோசனையும் வழிகாட்டுதலும் அதில் உள்ளன.

4) கேள்வி. மத்திய அரசு அல்லது சுகாதார அமைச்சகம் சார்பில் வெளியிடப்படும் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது சில மாநிலங்களால் வழங்கப்படும் புள்ளிவிவரங்களில் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளதே?

பதில்: கோவிட்-19 பாதிப்பாளர்களின் எண்களில் வேறுபாடு இல்லை. இந்தத் தகவல்கள் மாநிலங்கள், ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டம், ஐசிஎம்ஆர் ஆகிய தரவுகளிடம் அடிப்படையில் சுகாதார அமைச்சகத்தால் சேகரிக்கப்படுகின்றன.

மாநில-மத்திய புள்ளி விவர தகவல்கள் வேறுபாடு ஏன்?

ஆனால் பாதிப்புகள் மாறும் தன்மை கொண்டதால் ஒவ்வொரு போர்ட்டல்களில் ஒவ்வொரு விதமாக காணப்படலாம். ஆனால் ஒருங்கிணைந்து அனைத்தையும் சேகரிப்பதில் எந்த முரண்பாடோ, வித்தியாசமோ இல்லை. இதில் முற்றிலும் வெளிப்படைதன்மை கடைப்பிடிக்கப்படுகிறது.

5) கேள்வி. நீங்கள் கவனம் செலுத்தும் தற்போதைய, 'ஹாட்ஸ்பாட்கள்' (நோய் பரப்பும் இடங்கள்) யாவை?

பதில்: முழு நாடும் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. நாட்டை மாவட்டங்களாக வகைப்படுத்தினால், சுமார் 130 மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் மாவட்டங்களாக இருக்கின்றன. ஹாட்ஸ்பாட் அல்லாத 284 மாவட்டங்கள் உள்ளன. மேலும் 319 க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிக்கப்படாமல் உள்ளன. பாதிக்கப்படாத மாவட்டங்களிலும் கவனம் செலுத்துகிறோம்.

நோய் தீவிரமாக அறியப்படும் பகுதிகளும், சிறிய, பெரிய, அதீத பரவல் என்ற அடிப்படை திட்டத்தின் கீழ் வேறுபடுத்தப்பட்டுள்ளது. வீடு வீடாக கணக்கெடுக்கும் பணிகளும் நடந்துவருகின்றன. கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் மைக்ரோ திட்டங்களும் உள்ளன. நிபுணர்களின் வழிகாட்டுதலின் கீழ் பணிகள் விரைந்து செயல்படுகின்றன. இத்தகைய இடங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அரசாங்கம் தெளிவாக உள்ளது.

6) கேள்வி: பொது சுகாதார நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் அழைப்புக்கு மாநிலங்கள் எவ்வாறு பதிலளிக்கின்றன? அதிலுள்ள சவால்கள் என்னென்ன?

பதில்: மத்திய அரசு அவ்வப்போது வழங்கும் வழிகாட்டுதல்களை மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. தவறாமல் நாங்களும் கண்காணித்து வருகிறோம். அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களிடமும் பேசுகிறோம். தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ கிட்கள்), மருந்துகள், என்-95 ரக முகக்கவசங்கள், வென்டிலேட்டர் வசதிகள் போன்றவற்றை வழங்கவும், நிபுணர்களின் ஆலோசனையை கொடுக்கவும், சாத்தியமான அனைத்து வழிகளையும் முயற்சித்துவருகிறோம்.

அதீத பாதிப்பு பகுதிகளில் (ஹாட்ஸ்பார்ட்) கண்காணிப்பு குழுக்களை அனுப்பி மாநிலங்களுக்கு ஆதரவை உறுதி செய்கிறோம். சவால்கள் என்றால் பெரிய நகரங்கள், மக்கள் அதிகம் வசிக்கும் குடிசைப்பகுதிகள், வெளிநாட்டு பயணிகள் வருகை, தகுந்த இடைவெளி கடைப்பிடிப்பு மற்றும் பொதுஅடைப்பு (லாக்டவுன்) உள்ளிட்டவைகள் உள்ளன.

7) கேள்வி: விரைவான சோதனைக் கருவிகளின் தரம் தொடர்பாக சில சிக்கல்கள் எழுப்பப்பட்ட பின்னர் சமீபத்தில் மருத்துவமனைகளில் இருந்து திரும்பப் பெறப்பட்டது. இந்த கருவிகளுக்கு மாற்று வழி என்ன?

பதில்: சோதனை கருவிகளை விரைவான வேகத்தில் வாங்க முயற்சித்தோம். அவை பயனற்றவை என்பதைக் கண்டறிந்ததும், அவற்றின் பயன்பாட்டை உடனடியாக நிராகரித்தோம். இப்போது தற்போதைய நிலைமை என்னவென்றால், நாங்கள் சுதேச சோதனை கருவிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

ரேபிட் கிட் சோதனை கருவிகளுக்கு மாற்று என்ன?

ஐ.சி.எம்.ஆர் எலிசா டெஸ்ட் கிட்டையும் உருவாக்கியுள்ளது. இது ஆன்டிபாடி டெஸ்ட் கிட்களுக்கு மாற்றாக அல்லது கூடுதலாக இருக்கும். ஆன்டிபாடி குறித்த சோதனையையும் செய்துவருகிறோம். அதற்கான முயற்சிகளும் நடந்துவருகிறது.

இவ்வாறு ஈடிவி பாரத் ஆசிரியரின் கேள்விக்கு மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பதிலளித்தார்.

இதையும் படிங்க: தேசிய தொழில்நுட்ப தினம்: தொழில்நுட்ப பாதையில் பயணிக்கும் இந்தியா!

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஈடிவி பாரத்துக்கு காணொலி வாயிலாக அளித்த சிறப்பு நேர்காணலில், “இந்தியாவில் சுகாதார முன்னணி வீரர்களை பாதுகாக்கும் வகையில், தினந்தோறும் மூன்று லட்சம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ கிட்ஸ்) தயாரிக்கப்படுகிறது. 450 ஆய்வகங்கள் வாயிலாக 95 ஆயிரம் பேருக்கு தினந்தோறும் கரோனா பரிசோதனை நடத்த முடியும்” என்று கூறினார்.

ஈடிவி பாரத் ஆசிரியரின் கேள்விக்கு மத்திய அமைச்சர் அளித்த பதில்கள் வருமாறு:-

1) கேள்வி: இது அனைவருக்கும் கடினமான காலம். இந்தியாவின் நிலையை அறிந்து கொள்ள அனைவரும் விரும்புகின்றனர். நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று உங்கள் அரசாங்கம் உறுதியாக நம்புகிறதா?

பதில்: கரோனா வைரஸ் பரவலுக்கு முன்பே அரசாங்கம் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. எல்லைப் பகுதியில் கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் சோதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சம் மக்கள் சமூக கண்காணிப்பில் உள்ளனர். ஒரு நாள் மக்கள் ஊரடங்கு மற்றும் முழு பொதுஅடைப்பு (லாக்டவுன்) உள்ளிட்ட நடவடிக்கைகளை தைரியமாக எடுத்தோம்.

இந்தியாவில் கரோனா வைரஸின் நிலை என்ன?

இந்தச் செயல்திறன்மிக்க திட்டங்களால், மற்ற நாடுகளுடன் ஒப்பீடும் போது இந்தியா நன்றாகவே உள்ளது. நாங்கள் உலகம் முழுவதும் பார்க்கிறோம். இந்தியாவில் குறைந்த இறப்பு விகிதம் உள்ளது. அடுத்த 11-12 நாள்களுக்குள் பாதிப்பாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். நமது நாட்டில் 30 விழுக்காட்டினர் குணமடைந்துவருகின்றனர். அடுத்த நான்கு மாதங்களுக்குள் நாட்டில் 450-க்கும் மேற்பட்ட ஆய்வகங்கள் விரிவுப்படுத்தப்படும். அதன்மூலம் தினசரி 95 ஆயிரம் பேருக்கு சோதனை நடத்தலாம்.

2) கேள்வி: நாட்டில் கோவிட்-19 பாதிப்புகள் மற்றும் பரவல் அதிகரித்துவருகின்றன. வருங்காலங்களில் சோதனைகள் அதிகரிக்கும் போது பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதா?

பதில்: இந்தியாவில் கோவிட்-19 பாதிப்புகள் குறிப்பிடத்தக்க அதிகரிப்புகள் இல்லை. நமது பாதிப்பாளர்கள் குறித்த வரைப்படம் தெளிவாக உள்ளது. ஒரு நாளில் இரண்டாயிரம் பேருடன் சோதனை செய்ய தொடங்கினோம். தற்போது கடந்த 24 மணி நேரத்தில் 85 ஆயிரம் பேரை சோதித்துள்ளோம்.

கடந்த மூன்று மாதங்களில் நாட்டில் சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை பாதிப்பாளர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையை சிறிய நாடுகளுடன் ஒப்பிடுகிறோம். அங்கு லட்சக்கணக்கில் பாதிப்பாளர்கள் உள்ளனர். மேலும், நமது நாட்டில் இறப்பு விகிதம் 3 விழுக்காடு ஆக உள்ளது. ஆனால் உலகளவில் 7 முதல் 7.5 விழுக்காடு ஆக உள்ளது.

3) கேள்வி: கரோனா பரிசோதனை மையங்கள் தொடர்பாக அரசின் திட்டம் என்ன? இந்த மாத இறுதிக்குள் எத்தனை சோதனை மையங்கள் கைவசம் இருக்கும்? தற்போதைய சோதனை திட்டத்தின் பின்னணி என்ன? சோதனை கூடங்கள் போதுமானதாக உள்ளதா?

பதில்: வைரலாஜி சோதனைக்காக நாங்கள் மாதிரிகளை அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளோம். வைரஸின் முதல் பாதிப்பு அறிவிக்கப்பட்டபோது ஜனவரி மாதத்தில் நம்மிடம் ஒரு ஆய்வகம் மட்டுமே இருந்தது. தற்போது, (மே இரண்டாவது வாரத்தில்) நாடு முழுவதிலும் 472 ஆய்வகங்கள் விரிவுப்படுத்தியுள்ளோம்.

(மத்திய அமைச்சரின் நேர்காணலை ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே சொடுக்கவும்)

இதில் 275 ஆய்வகங்கள் அரசுத் துறையைச் சேர்ந்தவை. இதுவரை 95 ஆயிரம் சோதனை திறனை உருவாக்கியுள்ளோம். இந்தத் திட்டம் ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதலின்பேரில், நிபுணர் குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் அமைந்துள்ளது. யார் சோதிக்கப்பட வேண்டும் என்பதற்கான தெளிவான ஆலோசனையும் வழிகாட்டுதலும் அதில் உள்ளன.

4) கேள்வி. மத்திய அரசு அல்லது சுகாதார அமைச்சகம் சார்பில் வெளியிடப்படும் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது சில மாநிலங்களால் வழங்கப்படும் புள்ளிவிவரங்களில் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளதே?

பதில்: கோவிட்-19 பாதிப்பாளர்களின் எண்களில் வேறுபாடு இல்லை. இந்தத் தகவல்கள் மாநிலங்கள், ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டம், ஐசிஎம்ஆர் ஆகிய தரவுகளிடம் அடிப்படையில் சுகாதார அமைச்சகத்தால் சேகரிக்கப்படுகின்றன.

மாநில-மத்திய புள்ளி விவர தகவல்கள் வேறுபாடு ஏன்?

ஆனால் பாதிப்புகள் மாறும் தன்மை கொண்டதால் ஒவ்வொரு போர்ட்டல்களில் ஒவ்வொரு விதமாக காணப்படலாம். ஆனால் ஒருங்கிணைந்து அனைத்தையும் சேகரிப்பதில் எந்த முரண்பாடோ, வித்தியாசமோ இல்லை. இதில் முற்றிலும் வெளிப்படைதன்மை கடைப்பிடிக்கப்படுகிறது.

5) கேள்வி. நீங்கள் கவனம் செலுத்தும் தற்போதைய, 'ஹாட்ஸ்பாட்கள்' (நோய் பரப்பும் இடங்கள்) யாவை?

பதில்: முழு நாடும் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. நாட்டை மாவட்டங்களாக வகைப்படுத்தினால், சுமார் 130 மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் மாவட்டங்களாக இருக்கின்றன. ஹாட்ஸ்பாட் அல்லாத 284 மாவட்டங்கள் உள்ளன. மேலும் 319 க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிக்கப்படாமல் உள்ளன. பாதிக்கப்படாத மாவட்டங்களிலும் கவனம் செலுத்துகிறோம்.

நோய் தீவிரமாக அறியப்படும் பகுதிகளும், சிறிய, பெரிய, அதீத பரவல் என்ற அடிப்படை திட்டத்தின் கீழ் வேறுபடுத்தப்பட்டுள்ளது. வீடு வீடாக கணக்கெடுக்கும் பணிகளும் நடந்துவருகின்றன. கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் மைக்ரோ திட்டங்களும் உள்ளன. நிபுணர்களின் வழிகாட்டுதலின் கீழ் பணிகள் விரைந்து செயல்படுகின்றன. இத்தகைய இடங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அரசாங்கம் தெளிவாக உள்ளது.

6) கேள்வி: பொது சுகாதார நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் அழைப்புக்கு மாநிலங்கள் எவ்வாறு பதிலளிக்கின்றன? அதிலுள்ள சவால்கள் என்னென்ன?

பதில்: மத்திய அரசு அவ்வப்போது வழங்கும் வழிகாட்டுதல்களை மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. தவறாமல் நாங்களும் கண்காணித்து வருகிறோம். அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களிடமும் பேசுகிறோம். தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ கிட்கள்), மருந்துகள், என்-95 ரக முகக்கவசங்கள், வென்டிலேட்டர் வசதிகள் போன்றவற்றை வழங்கவும், நிபுணர்களின் ஆலோசனையை கொடுக்கவும், சாத்தியமான அனைத்து வழிகளையும் முயற்சித்துவருகிறோம்.

அதீத பாதிப்பு பகுதிகளில் (ஹாட்ஸ்பார்ட்) கண்காணிப்பு குழுக்களை அனுப்பி மாநிலங்களுக்கு ஆதரவை உறுதி செய்கிறோம். சவால்கள் என்றால் பெரிய நகரங்கள், மக்கள் அதிகம் வசிக்கும் குடிசைப்பகுதிகள், வெளிநாட்டு பயணிகள் வருகை, தகுந்த இடைவெளி கடைப்பிடிப்பு மற்றும் பொதுஅடைப்பு (லாக்டவுன்) உள்ளிட்டவைகள் உள்ளன.

7) கேள்வி: விரைவான சோதனைக் கருவிகளின் தரம் தொடர்பாக சில சிக்கல்கள் எழுப்பப்பட்ட பின்னர் சமீபத்தில் மருத்துவமனைகளில் இருந்து திரும்பப் பெறப்பட்டது. இந்த கருவிகளுக்கு மாற்று வழி என்ன?

பதில்: சோதனை கருவிகளை விரைவான வேகத்தில் வாங்க முயற்சித்தோம். அவை பயனற்றவை என்பதைக் கண்டறிந்ததும், அவற்றின் பயன்பாட்டை உடனடியாக நிராகரித்தோம். இப்போது தற்போதைய நிலைமை என்னவென்றால், நாங்கள் சுதேச சோதனை கருவிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

ரேபிட் கிட் சோதனை கருவிகளுக்கு மாற்று என்ன?

ஐ.சி.எம்.ஆர் எலிசா டெஸ்ட் கிட்டையும் உருவாக்கியுள்ளது. இது ஆன்டிபாடி டெஸ்ட் கிட்களுக்கு மாற்றாக அல்லது கூடுதலாக இருக்கும். ஆன்டிபாடி குறித்த சோதனையையும் செய்துவருகிறோம். அதற்கான முயற்சிகளும் நடந்துவருகிறது.

இவ்வாறு ஈடிவி பாரத் ஆசிரியரின் கேள்விக்கு மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பதிலளித்தார்.

இதையும் படிங்க: தேசிய தொழில்நுட்ப தினம்: தொழில்நுட்ப பாதையில் பயணிக்கும் இந்தியா!

Last Updated : May 11, 2020, 10:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.