ETV Bharat / bharat

மூணாறு நிலச்சரிவு: உயிரிழப்பு எண்ணிக்கை 58ஆக உயர்வு

author img

By

Published : Aug 16, 2020, 11:37 AM IST

Updated : Aug 16, 2020, 2:39 PM IST

திருவனந்தபுரம்: மூணாறு அருகேயுள்ள பெட்டிமுடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 58ஆக அதிகரித்துள்ளது.

Idukki landslide: Death toll rises to 57
Idukki landslide: Death toll rises to 57

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறில் இருந்து 20 கி.மீ., தொலைவில் உள்ள ராஜமலை - பெட்டிமுடி பகுதியில் ஆகஸ்ட் 6ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட கட்டடம் மண்ணில் புதைந்தது.

இந்த விபத்தில் 80க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியிருக்கலாம் என அறியப்பட்டுள்ள நிலையில், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர், காவல் துறையினர், பேரிடர் மீட்புக் குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று (ஆகஸ்ட் 15) வரை 56 பேர் நிலச்சரிவில் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் இருவரின் சடலத்தை மீட்புப் படையினர் கண்டெடுத்துள்ளனர். இதனால், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 58ஆக அதிகரித்துள்ளது.

இந்த எண்ணிக்கை மேலும் உயரலாம் எனக் கூறப்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும், பேரிடர் மீட்புத் துறையினரும் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இருமடங்கு விலை உயர்ந்தும் உற்பத்தி செய்ய முடியாமல் தவிக்கும் உப்பளத் தொழிலாளர்கள்!

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறில் இருந்து 20 கி.மீ., தொலைவில் உள்ள ராஜமலை - பெட்டிமுடி பகுதியில் ஆகஸ்ட் 6ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட கட்டடம் மண்ணில் புதைந்தது.

இந்த விபத்தில் 80க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியிருக்கலாம் என அறியப்பட்டுள்ள நிலையில், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர், காவல் துறையினர், பேரிடர் மீட்புக் குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று (ஆகஸ்ட் 15) வரை 56 பேர் நிலச்சரிவில் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் இருவரின் சடலத்தை மீட்புப் படையினர் கண்டெடுத்துள்ளனர். இதனால், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 58ஆக அதிகரித்துள்ளது.

இந்த எண்ணிக்கை மேலும் உயரலாம் எனக் கூறப்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும், பேரிடர் மீட்புத் துறையினரும் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இருமடங்கு விலை உயர்ந்தும் உற்பத்தி செய்ய முடியாமல் தவிக்கும் உப்பளத் தொழிலாளர்கள்!

Last Updated : Aug 16, 2020, 2:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.