ETV Bharat / bharat

யானை லட்சுமியை மீண்டும் பண்னைக்கு அனுப்ப கோரிய வழக்கில் இடைக்கால தடை விதிக்க மறுப்பு

சென்னை: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமியை மீண்டும் பண்ணைக்கு அனுப்ப வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது

author img

By

Published : Aug 13, 2020, 10:19 PM IST

Puducherry temple elephant lakshmi
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி

புதுச்சேரியில் பிரசித்திப் பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் லட்சுமி என்ற பெண் யானை உள்ளது. அந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த லட்சுமி யானையை கொடுமைப்படுத்துவதாக பீட்டா அமைப்பு அளித்த புகாரின் பேரில், யானையை புதுச்சேரி குருமாம்பேட்டில் உள்ள காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய வளாகத்திலுள்ள பண்ணைக்கு வனத்துறையினர் கொண்டுச் சென்றனர்.

இதற்கு பக்தர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மீண்டும் அந்த யானையை கோயிலுக்கு அனுப்ப உத்தரவிட்டார். பின்னர், மீண்டும் யானை லட்சுமி கோயில் வளாகத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கில், யானையை மீண்டும் பண்ணைக்கு திரும்பி அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ், நீதிபதி ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கில் தற்போது இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என தெரிவித்தனர்.

மேலும், யானை லட்சுமிக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ சிகிச்சைகளை வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். அத்துடன் செப்டம்பர் 3ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து, இது குறித்து புதுச்சேரி அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: குற்றவாளிகள் அரசியலில் நுழைவது வேதனை அளிக்கிறது - சென்னை உயர் நீதிமன்றம்!

புதுச்சேரியில் பிரசித்திப் பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் லட்சுமி என்ற பெண் யானை உள்ளது. அந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த லட்சுமி யானையை கொடுமைப்படுத்துவதாக பீட்டா அமைப்பு அளித்த புகாரின் பேரில், யானையை புதுச்சேரி குருமாம்பேட்டில் உள்ள காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய வளாகத்திலுள்ள பண்ணைக்கு வனத்துறையினர் கொண்டுச் சென்றனர்.

இதற்கு பக்தர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மீண்டும் அந்த யானையை கோயிலுக்கு அனுப்ப உத்தரவிட்டார். பின்னர், மீண்டும் யானை லட்சுமி கோயில் வளாகத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கில், யானையை மீண்டும் பண்ணைக்கு திரும்பி அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ், நீதிபதி ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கில் தற்போது இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என தெரிவித்தனர்.

மேலும், யானை லட்சுமிக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ சிகிச்சைகளை வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். அத்துடன் செப்டம்பர் 3ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து, இது குறித்து புதுச்சேரி அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: குற்றவாளிகள் அரசியலில் நுழைவது வேதனை அளிக்கிறது - சென்னை உயர் நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.