ETV Bharat / bharat

கொரோனா: இந்தியாவுக்குள் நுழைய தடை!

author img

By

Published : Mar 17, 2020, 12:29 PM IST

புதுடெல்லி: கோவிட்- 19 பரவலைத் தடுக்கும் விதமாக ஆப்கானிஸ்தான், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பயணிகள் இந்தியாவுக்குள் நுழையை தடை விதித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

கோவிட்- 19 தொற்று  இந்தியாவுக்குள் நுழையத் தடை  Government of India prohibits travel of passenger  covid  coromo fear
ஆப்கானிஸ்தான், மலேசியா நாடுகளில் இருந்து பயணிகள் இந்தியாவுக்குள் நுழையத் தடை

உலகம் முழுவதுமுள்ள பல்வேறு நாடுகளில் கோவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், பல்வேறு உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இதுவரை சுமார் ஒரு லட்சத்து 68 ஆயிரம் பேருக்கு கோவிட்-19 தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பெருந்தொற்றால் இதுவரை ஆறாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை 126 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒவ்வொரு நாடும் இந்த வைரஸை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுபோல், இந்தியாவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்கிது.

அதன்படி கோவிட் தொற்று அதிகம் உள்ள ஐரோப்பிய ஒன்றியம், துருக்கி போன்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகள் மார்ச் 31ஆம் தேதி வரை இந்தியாவுக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்திய குடியுரிமை பெற்றவர்களாக இருந்தாலும் இந்த தடை உத்தரவு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கர்நாடகாவில் மருத்துவருக்கு கொரோனா...

உலகம் முழுவதுமுள்ள பல்வேறு நாடுகளில் கோவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், பல்வேறு உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இதுவரை சுமார் ஒரு லட்சத்து 68 ஆயிரம் பேருக்கு கோவிட்-19 தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பெருந்தொற்றால் இதுவரை ஆறாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை 126 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒவ்வொரு நாடும் இந்த வைரஸை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுபோல், இந்தியாவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்கிது.

அதன்படி கோவிட் தொற்று அதிகம் உள்ள ஐரோப்பிய ஒன்றியம், துருக்கி போன்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகள் மார்ச் 31ஆம் தேதி வரை இந்தியாவுக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்திய குடியுரிமை பெற்றவர்களாக இருந்தாலும் இந்த தடை உத்தரவு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கர்நாடகாவில் மருத்துவருக்கு கொரோனா...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.