அநீதிக்கு எதிராக ரத்தம் சிந்தாமல் யுத்தம் நடத்துவதற்காக, சத்தியாகிரகம் என்ற புதுமையான யுக்தியை மகாத்மா காந்தி கண்டுபிடித்தார். காந்தி நடத்திய அகிம்சை வழி போராட்டமானது இந்திய விடுதலைக்கு முக்கிய பங்காற்றியது. சத்தியாகிரக போராட்டம் வழியாக கிடைத்த தன்னம்பிக்கையில் ஒட்டுமொத்த இந்தியர்களும், நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்திய ஆங்கிலேயர்களைப் பார்த்து வெள்ளையனே வெளியேறு என்று குரல் கொடுத்தனர்.
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக இந்தியாவில் பல புரட்சிகளும் கலகங்களும் முன்னெடுக்கப்பட்டன. 1857ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சிப்பாய் கலகமானது சிறிது நாட்களிலேயே ஆங்கிலேய ராணுவத்தால் ஒடுக்கப்பட்டது. மேலும், முகலாயப் பேரரசின் கடைசி மன்னரான பகதூர் ஷா சாபர் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார். அதன் பின்னரும், குர்திராம் போஸ் போன்ற தனிப்புரட்சியாளர்களும் உருவெடுத்தனர். இருப்பினும், வெகுஜன மக்கள் அவர்கள் பின்னர் நிற்க முன்வரவில்லை.
தென்னாப்பிரிக்காவில் அகிம்சை போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டி, 1915ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய காந்தி கோடிக்கணக்கான இந்திய மக்களை ஆயுதமின்றி போராட பயிற்றுவித்தார். 1917ஆம் ஆண்டு பீகார் மாநிலம் சம்பரன் கிராமத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக தனது முதல் இந்திய சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்தினார் காந்தி.
காந்தி 150: சத்தியசோதனை மூலம் சத்தியாகிரகம் நடத்திய காந்தி
மகாத்மா காந்தியின் 150ஆவது ஆண்டு பிறந்தநாள் விழாவையொட்டி, அவரின் பண்பு நலன்கள் குறித்து பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் நமது 'ஈடிவி பாரத்' செய்திகளுக்கு சிறப்பு கட்டுரைகளை வழங்கிவருகின்றனர். . . காந்தியின் அகிம்சை போராட்டமான சத்தியாகிரகம் குறித்து, மூத்த செய்தியாசிரியர் நசிகேதா தேசாய் நமக்கு பிரத்யேகமாக எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு இதோ...
அநீதிக்கு எதிராக ரத்தம் சிந்தாமல் யுத்தம் நடத்துவதற்காக, சத்தியாகிரகம் என்ற புதுமையான யுக்தியை மகாத்மா காந்தி கண்டுபிடித்தார். காந்தி நடத்திய அகிம்சை வழி போராட்டமானது இந்திய விடுதலைக்கு முக்கிய பங்காற்றியது. சத்தியாகிரக போராட்டம் வழியாக கிடைத்த தன்னம்பிக்கையில் ஒட்டுமொத்த இந்தியர்களும், நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்திய ஆங்கிலேயர்களைப் பார்த்து வெள்ளையனே வெளியேறு என்று குரல் கொடுத்தனர்.
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக இந்தியாவில் பல புரட்சிகளும் கலகங்களும் முன்னெடுக்கப்பட்டன. 1857ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சிப்பாய் கலகமானது சிறிது நாட்களிலேயே ஆங்கிலேய ராணுவத்தால் ஒடுக்கப்பட்டது. மேலும், முகலாயப் பேரரசின் கடைசி மன்னரான பகதூர் ஷா சாபர் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார். அதன் பின்னரும், குர்திராம் போஸ் போன்ற தனிப்புரட்சியாளர்களும் உருவெடுத்தனர். இருப்பினும், வெகுஜன மக்கள் அவர்கள் பின்னர் நிற்க முன்வரவில்லை.
தென்னாப்பிரிக்காவில் அகிம்சை போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டி, 1915ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய காந்தி கோடிக்கணக்கான இந்திய மக்களை ஆயுதமின்றி போராட பயிற்றுவித்தார். 1917ஆம் ஆண்டு பீகார் மாநிலம் சம்பரன் கிராமத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக தனது முதல் இந்திய சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்தினார் காந்தி.
Gandhi's life's experiment with truth
Conclusion: