தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலிருந்து டெல்லி செல்லும் தெலங்கானா விரைவு ரயிலில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ஹரியானா மாநிலம் அசோட்டி-பாலாகார் இடையே செல்லும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
குளிர்சாதன வகுப்பு பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.