ETV Bharat / bharat

ஆளுநரின் அரசியல் வார்த்தைகளுக்கு தேசாபிமானி நாளேடு கண்டனம்

author img

By

Published : Jan 19, 2020, 9:36 AM IST

திருவனந்தபுரம்: கேரள ஆளுநருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான தேசாபிமானி கண்டனம் தெரிவித்துள்ளது.

CPI(M) mouthpiece slams Kerala Governor for "anti-govt" stand
CPI(M) mouthpiece slams Kerala Governor for "anti-govt" stand

கேரள மாநில அரசுக்கும் அம்மாநில ஆளுநர் ஆரீப் முகமது கானுக்கும் இடையே வார்த்தை மோதல் உச்சமடைந்துவருகிறது. இந்நிலையில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இதுதொடர்பாக மாநில ஆளுநரிடம், பினராயி விஜயன் அரசு எவ்வித முன்அனுமதியும் கோரவில்லை. இது குறித்து ஆளுநருக்கு எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மீண்டும் மோதல் போக்கு உச்சம் பெற்றது.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆளுநர் ஆரீப் முகமது கான், “குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்க மாநில அரசுக்கு உரிமை உண்டு. எனினும், அரசியலமைப்புச் சட்டத்தை மாநில அரசும் முதலமைச்சரும் மீறக்கூடாது” என அறிவுறுத்தினார். ஆளுநரின் இந்தப் பேட்டி கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதற்குப் பதிலளிக்கும் விதமாக, கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான தேசாபிமானியில் தலையங்கம் ஒன்று வெளியாகியுள்ளது.

'ஆளுநரின் அரசியல் விளையாட்டு' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அந்தத் தலையங்கத்தில், “அரசியலமைப்புக்குட்பட்டு ஆளுநர் தனிநபர் விருப்புவெறுப்பின்றி செயல்பட வேண்டும். ஆளுநரின் அரசியல் வார்த்தைகளும் கடின மொழிகளும் நாட்டை அச்சுறுத்துகின்றன. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்க மாநில அரசுக்கு உரிமை உண்டு. ஆனால் அரசுக்கென்று சுயஅதிகாரம் இல்லை. மாநில அரசு ஆளுநரை சார்ந்திருக்க வேண்டும் என்பதை நிறுவுவதற்கே இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மாநில அரசின் அதிகாரம் வரையறுக்கப்பட்டுள்ளது. மாநில அரசு தனது ஒவ்வொரு முடிவையும் ஆளுநருக்குத் தெரிவிக்க வேண்டிய கட்டாயமில்லை. இது அரசியலமைப்பின் 167ஆவது பிரிவு தெளிவாக கூறுகிறது. மேலும் மாநில அமைச்சரவையின் முடிவுகளை நிறைவேற்றும் கடமை முதலமைச்சருக்கு உண்டு. குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு சட்ட நடவடிக்கை கோரப்பட்டுள்ளது. இதுதொடர்பான தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்னர் ஆளுநருக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயமில்லை” எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சி.ஏ.ஏ.வை எதிர்த்தாலும் சட்டத்தை மீறக் கூடாது' - பினராயி விஜயனுக்கு ஆளுநர் அறிவுரை

கேரள மாநில அரசுக்கும் அம்மாநில ஆளுநர் ஆரீப் முகமது கானுக்கும் இடையே வார்த்தை மோதல் உச்சமடைந்துவருகிறது. இந்நிலையில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இதுதொடர்பாக மாநில ஆளுநரிடம், பினராயி விஜயன் அரசு எவ்வித முன்அனுமதியும் கோரவில்லை. இது குறித்து ஆளுநருக்கு எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மீண்டும் மோதல் போக்கு உச்சம் பெற்றது.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆளுநர் ஆரீப் முகமது கான், “குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்க மாநில அரசுக்கு உரிமை உண்டு. எனினும், அரசியலமைப்புச் சட்டத்தை மாநில அரசும் முதலமைச்சரும் மீறக்கூடாது” என அறிவுறுத்தினார். ஆளுநரின் இந்தப் பேட்டி கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதற்குப் பதிலளிக்கும் விதமாக, கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான தேசாபிமானியில் தலையங்கம் ஒன்று வெளியாகியுள்ளது.

'ஆளுநரின் அரசியல் விளையாட்டு' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அந்தத் தலையங்கத்தில், “அரசியலமைப்புக்குட்பட்டு ஆளுநர் தனிநபர் விருப்புவெறுப்பின்றி செயல்பட வேண்டும். ஆளுநரின் அரசியல் வார்த்தைகளும் கடின மொழிகளும் நாட்டை அச்சுறுத்துகின்றன. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்க மாநில அரசுக்கு உரிமை உண்டு. ஆனால் அரசுக்கென்று சுயஅதிகாரம் இல்லை. மாநில அரசு ஆளுநரை சார்ந்திருக்க வேண்டும் என்பதை நிறுவுவதற்கே இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மாநில அரசின் அதிகாரம் வரையறுக்கப்பட்டுள்ளது. மாநில அரசு தனது ஒவ்வொரு முடிவையும் ஆளுநருக்குத் தெரிவிக்க வேண்டிய கட்டாயமில்லை. இது அரசியலமைப்பின் 167ஆவது பிரிவு தெளிவாக கூறுகிறது. மேலும் மாநில அமைச்சரவையின் முடிவுகளை நிறைவேற்றும் கடமை முதலமைச்சருக்கு உண்டு. குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு சட்ட நடவடிக்கை கோரப்பட்டுள்ளது. இதுதொடர்பான தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்னர் ஆளுநருக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயமில்லை” எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சி.ஏ.ஏ.வை எதிர்த்தாலும் சட்டத்தை மீறக் கூடாது' - பினராயி விஜயனுக்கு ஆளுநர் அறிவுரை

ZCZC
PRI GEN NAT
.THIRUVAI MDS1
KL-GOVERNOR-CPM-EDITORIAL
CPI(M) mouthpiece slams Kerala Governor for "anti-govt" stand
Thiruvananthapuram, Jan 18 (PTI) As the war of words
between Kerala Governor Arif Mohammed Khan and the Left
government intensified, the CPI(M) mouthpiece Deshabhimani on
Saturday slammed him for making "political statements" and
alleged he was "threatening" the state in a "tough language".
In a hard-hitting editorial, it said the governor who
spoke to the media here and in Delhi without understanding the
stature of the position being held by him, was making
"political statements".
In a lengthy report titled "Governor's political game",
it said the Governor is a person who should act in accordance
with the Constitution and above personal preferences.
Enraged over the mass participation of people in the
protests against the Citizenship Amendment Act (CAA) in
kerala, Khan was "threatening" the state in a "tough
language", it alleged.
The editorial attacked Khan for coming out in public
against the LDF government and Chief Minister Pinarayi Vijayan
for not informing him before moving the apex court against the
CAA and for not signing the ordinance regarding the local self
government ward delimitation.
"The attempt is to establish a precedence that the state
has no independent power and it should await the Governor's
permission even for constitutionally guaranteed rights," it
said.
The Constitution does not mandate the state government to
inform every decision to the Governor.
This is evident in Article 167 of the Constitution, the
editorial pointed out.
The Chief Minister has only the constitutional obligation
to inform the decisions of the state cabinet, and not the
daily decisions of the government, the daily stated.
Justifying the anti-CAA resolution passed by the Kerala
Assembly, the newspaper said it was "legal" and "passed in
accordance with the rules and regulations.
There is no need to inform the governor in advance before
the resolution is passed," it added. PTI LGK UD
ROH
ROH
01181250
NNNN
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.