ETV Bharat / bharat

'ஊடரங்கு உத்தரவை மீறினால் துப்பாக்கிச் சூடு...!'

author img

By

Published : Mar 25, 2020, 10:29 AM IST

டெல்லி: இரவு ஊரடங்கை மக்கள் பின்பற்றவில்லையெனில், துப்பாக்கிச் சூட்டிற்கு அனுமதி வழங்கப்படும் என முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்
முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்

கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலைத் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி அடுத்த 21 நாள்களுக்கு நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளார். இதையடுத்து, இன்றுமுதல் இரவு ஊரடங்கு அமலுக்கு வருமென தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, மாலை 7 மணி முதல் காலை 6 மணி வரை மக்கள் தேவையில்லாமல் வெளியில் வரக் கூடாது. ஏதேனும் தேவையிருந்தால் 100-க்கு அழைத்து பிரச்னையை தெரிவித்தால், வாகனம் வீடு தேடிவரும் எனத் தெரிவித்தார். ஊடரங்கு பிறப்பித்த பின்னரும், மக்களில் சிலர் வெளியில் தேவையின்றி நடமாடுகின்றனர்.

அதுபோன்று சுற்றித் திரிபவர்களால் கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலாம். இதனால், தேவையின்றி சுற்றித்திரிபவர்களைக் கட்டுப்படுத்த அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டியிருக்கும். இந்த நிலைமையை மக்கள் ஏற்படுத்தாமலிருக்க வேண்டும் என வேண்டுகோள்விடுத்தார். தேவைப்பட்டால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தை அழைக்கவுள்ளதாகவும் கடுமையாக எச்சரித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட வெளிநாட்டுப் பயணிகள் தப்பித்தால் கடவுச்சீட்டு பறிமுதல்செய்யப்படும். மூன்று முறைக்கு மேலாக இத்தவறை செய்தால், அவர்களின் கடவுச்சீட்டு முடக்கப்படும், வணிகர்களின் உரிமம் ரத்துசெய்யப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதில் சிக்கல் இருக்காது எனத் தெரிவித்த அவர், அதிக விலைக்கு அவற்றை விற்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

தற்போதுவரை தெலங்கானாவில் 36 பேர் கரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளார். 19 ஆயிரத்து 313 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அதில், 114 பேருக்கு கரோனா பெருந்தொற்றின் அறிகுறிகள் உள்ளன.

இதையும் படிங்க: அறமற்ற அலட்சியத்தால் பாமரர்களைப் படுகுழியில் தள்ளாதீர்கள்

கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலைத் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி அடுத்த 21 நாள்களுக்கு நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளார். இதையடுத்து, இன்றுமுதல் இரவு ஊரடங்கு அமலுக்கு வருமென தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, மாலை 7 மணி முதல் காலை 6 மணி வரை மக்கள் தேவையில்லாமல் வெளியில் வரக் கூடாது. ஏதேனும் தேவையிருந்தால் 100-க்கு அழைத்து பிரச்னையை தெரிவித்தால், வாகனம் வீடு தேடிவரும் எனத் தெரிவித்தார். ஊடரங்கு பிறப்பித்த பின்னரும், மக்களில் சிலர் வெளியில் தேவையின்றி நடமாடுகின்றனர்.

அதுபோன்று சுற்றித் திரிபவர்களால் கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலாம். இதனால், தேவையின்றி சுற்றித்திரிபவர்களைக் கட்டுப்படுத்த அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டியிருக்கும். இந்த நிலைமையை மக்கள் ஏற்படுத்தாமலிருக்க வேண்டும் என வேண்டுகோள்விடுத்தார். தேவைப்பட்டால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தை அழைக்கவுள்ளதாகவும் கடுமையாக எச்சரித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட வெளிநாட்டுப் பயணிகள் தப்பித்தால் கடவுச்சீட்டு பறிமுதல்செய்யப்படும். மூன்று முறைக்கு மேலாக இத்தவறை செய்தால், அவர்களின் கடவுச்சீட்டு முடக்கப்படும், வணிகர்களின் உரிமம் ரத்துசெய்யப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதில் சிக்கல் இருக்காது எனத் தெரிவித்த அவர், அதிக விலைக்கு அவற்றை விற்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

தற்போதுவரை தெலங்கானாவில் 36 பேர் கரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளார். 19 ஆயிரத்து 313 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அதில், 114 பேருக்கு கரோனா பெருந்தொற்றின் அறிகுறிகள் உள்ளன.

இதையும் படிங்க: அறமற்ற அலட்சியத்தால் பாமரர்களைப் படுகுழியில் தள்ளாதீர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.