ETV Bharat / bharat

வீடு, பயிர் இழந்த துக்கத்தில் விவசாயி தற்கொலை முயற்சி

author img

By

Published : Jul 19, 2019, 11:03 PM IST

திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக வீடு, பயிர்களை இழந்த விவசாயி ஒருவர் மனமுடைந்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

assam

கனமழை காரணமாக அசாம் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் ஏராளமானோர் தங்களது வீடு, உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அசாமின் காம்ரூப் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் வீடு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அதுமட்டுமின்றி அவர் விளைவித்த காய்கறிகள், பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகின.

இதனால் மனம் நொடிந்துபோன அந்த விவசாயி துயரம் தாங்க முடியாமல் புத்திமாரி நதியில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக் கண்ட கிராம மக்கள் நதிக்கு விரைந்து சென்று அவரை மீட்டனர்.

தற்கொலைக்கு முயன்ற விவசாயியை மீட்கும் கிராம மக்கள்

அக்கிராமத்தைச் சேர்ந்த பெண் இதுகுறித்து கூறுகையில், "அரசாங்கத்திடமிருந்து எங்களுக்கு இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை. கொசு வலை, போர்வை உள்ளிட்ட பொருட்கள் இன்னும் எங்களை வந்தடையவில்லை" என்று தெரிவித்தார்.

கனமழை காரணமாக அசாம் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் ஏராளமானோர் தங்களது வீடு, உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அசாமின் காம்ரூப் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் வீடு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அதுமட்டுமின்றி அவர் விளைவித்த காய்கறிகள், பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகின.

இதனால் மனம் நொடிந்துபோன அந்த விவசாயி துயரம் தாங்க முடியாமல் புத்திமாரி நதியில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக் கண்ட கிராம மக்கள் நதிக்கு விரைந்து சென்று அவரை மீட்டனர்.

தற்கொலைக்கு முயன்ற விவசாயியை மீட்கும் கிராம மக்கள்

அக்கிராமத்தைச் சேர்ந்த பெண் இதுகுறித்து கூறுகையில், "அரசாங்கத்திடமிருந்து எங்களுக்கு இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை. கொசு வலை, போர்வை உள்ளிட்ட பொருட்கள் இன்னும் எங்களை வந்தடையவில்லை" என்று தெரிவித்தார்.

Intro:Body:

sucide attempt by a flood victim 



heartbreaking this scene is from kamalapur area of kamrup district which was devastated by recent assam flood. many people lost their homes and livelihood due to the terrible flood. yesterday one man tried to commit suicide after he lost his home and crops in recent flood. finding no way out he jumped into the puthimari river but later rescued by the local villegers. according to the source the man earns his livlihood by selling vegetable in the market. after the tragic flood destroyed his crops due to endless Anxiety he decided to end his life. 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.