ETV Bharat / bharat

சமுதாய நலக்கூடம் சூறையாடல்: காவல்நிலையம் முற்றுகை

author img

By

Published : Dec 11, 2019, 7:36 AM IST

புதுச்சேரி: சமுதாய நலக்கூடத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமுதாய நலக்கூடத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சமுதாய நலக்கூடத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

புதுச்சேரி நகரப்பகுதியில் அமைந்துள்ள கோவிந்த சாலை அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இரு சமுதாயங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கிடையே ஏற்கனவே பிரச்னை இருந்துவந்துள்ளது.

இந்நிலையில் அங்குள்ள சமுதாயக் கூடத்தில் இருந்த விளையாட்டு சாதனங்களை ஒரு தரப்பினர் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், மதுபோதையில் அவர்கள் அப்பகுதி வழியாக பள்ளிக்குச் செல்லும் மாணவிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாகவும் புகார் எழுந்தது.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்த போது அதனை காவலர்கள் ஏற்க மறுத்ததால் ஒரு தரப்பு மக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமுதாய நலக்கூடத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இதையடுத்து தக்க நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதியளித்தன் பேரில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: காவல் நிலையத்திலிருந்து தப்பி ஓடிய போக்சோ குற்றவாளி !

புதுச்சேரி நகரப்பகுதியில் அமைந்துள்ள கோவிந்த சாலை அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இரு சமுதாயங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கிடையே ஏற்கனவே பிரச்னை இருந்துவந்துள்ளது.

இந்நிலையில் அங்குள்ள சமுதாயக் கூடத்தில் இருந்த விளையாட்டு சாதனங்களை ஒரு தரப்பினர் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், மதுபோதையில் அவர்கள் அப்பகுதி வழியாக பள்ளிக்குச் செல்லும் மாணவிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாகவும் புகார் எழுந்தது.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்த போது அதனை காவலர்கள் ஏற்க மறுத்ததால் ஒரு தரப்பு மக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமுதாய நலக்கூடத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இதையடுத்து தக்க நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதியளித்தன் பேரில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: காவல் நிலையத்திலிருந்து தப்பி ஓடிய போக்சோ குற்றவாளி !

Intro:புதுச்சேரியில் சமுதாய நலகூடத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையம் பொது மக்கள் முற்றுகை.Body:புதுச்சேரியில் சமுதாய நலகூடத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையம் பொது மக்கள் முற்றுகை.


புதுச்சேரி நகரப்பகுதியில் அமைந்துள்ள கோவிந்த சாலை அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் உள்ள மக்கள் இருபிரிவினராக செயல்பட்டு வந்துள்ளனர் இவர்களுக்கிடையே ஏற்கனவே பிரச்சினை இருந்து வந்துள்ளது

இந்த நிலையில் அங்குள்ள சமுதாயக் கூடத்தில் இருந்த விளையாட்டு சாதனங்களை ஒரு தரப்பினர் சேதப்படுத்தி உள்ளதாகவும்
போதையில் சில இளைஞர்கள் அப்பகுதியாக பள்ளிக்கு செல்லும் பள்ளி மாணவிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி இளைஞர்கள் 5 பேர் தொந்தரவு கொடுத்து வருகின்றனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்த போதும் அதனை காவலர்கள் ஏற்க மறுத்து உள்ளதாகவும் புகார் அளித்தவர்கள் மீது அப்பகுதி இளைஞர்கள் தாக்கினர் என்றும் இதற்கு காவல்துறை உயர் அதிகாரி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஓதியன் சாலை காவல்நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
இதையடுத்து தக்கநடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தன் பேரில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்Conclusion:புதுச்சேரியில் சமுதாய நலகூடத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையம் பொது மக்கள் முற்றுகை.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.