கொல்கத்தா (மேற்கு வங்கம்): வருகின்ற மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் அறிக்கையினை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மார்ச் 21ஆம் தேதி வெளியிடுவார் என பாரதிய ஜனதா கட்சியின் (பிஜேபி) தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்ஜியா தெரிவித்தார்.
இத்தேர்தலுக்காக மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவிற்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையில் கடும்போட்டி, உருவாகியிருக்கிறது.
294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல், வரும் மார்ச் 27 தொடங்கி எட்டு கட்டங்களாகப் பிரித்து நடத்தப்பட்டு ஏப்ரல் 29ஆம் தேதி இறுதிச்சுற்று வாக்களிப்புடன் முடிவடைகிறது.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறுகிறது.
இதையும் படிங்க: என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்