ETV Bharat / snippets

1 கி.மீ தூரம் உள்வாங்கிய திருப்பாலைக்குடி கடல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

உள்வாங்கிய திருப்பாலைக்குடி கடல்
உள்வாங்கிய திருப்பாலைக்குடி கடல் (Credits - ETV Bharat Tamil Nadu)

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், கிழக்கு கடற்கரை கடலோரப் பகுதியான திருப்பாலைக்குடியில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை கடல் உள்வாங்கியது. இதனால் நங்கூரமிட்டு நின்ற 100க்கும் மேற்பட்ட படகுகள் தரை தட்டி நின்றன. மேலும், கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரைக்கு வர முடியாமல் அவதி அடைந்தனர்.

அதேநேரம், காற்றின் சுழற்சி காரணமாக செப்டம்பர் முதல் டிசம்பர் மாதம் வரை கடல் உள்வாங்குவதும், பின்பு இயல்பு நிலைக்குத் திரும்புவதும் அவ்வப்போது நடக்கும் நிகழ்வு என மீனவர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், இன்று திருப்பாலைக்குடியில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை கடல் உள்வாங்கியதால் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள் படகுகளை கரைக்கு கொண்டு வர முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், கிழக்கு கடற்கரை கடலோரப் பகுதியான திருப்பாலைக்குடியில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை கடல் உள்வாங்கியது. இதனால் நங்கூரமிட்டு நின்ற 100க்கும் மேற்பட்ட படகுகள் தரை தட்டி நின்றன. மேலும், கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரைக்கு வர முடியாமல் அவதி அடைந்தனர்.

அதேநேரம், காற்றின் சுழற்சி காரணமாக செப்டம்பர் முதல் டிசம்பர் மாதம் வரை கடல் உள்வாங்குவதும், பின்பு இயல்பு நிலைக்குத் திரும்புவதும் அவ்வப்போது நடக்கும் நிகழ்வு என மீனவர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், இன்று திருப்பாலைக்குடியில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை கடல் உள்வாங்கியதால் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள் படகுகளை கரைக்கு கொண்டு வர முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.