தஞ்சையில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு கோலப்போட்டி.. உணர்வுப்பூர்வ வாசகங்களால் அலங்கரித்த மாணவிகள்! - thanjavur kundavai nachiyar college
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/09-02-2024/640-480-20707568-thumbnail-16x9-kolam.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Feb 9, 2024, 3:22 PM IST
தஞ்சாவூர்: நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் பணிகளைத் துவங்கி உள்ளனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்கு அளிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்கள், இளைஞர்கள், குறிப்பாக 18 வயது நிரம்பிய முதல் கட்ட வாக்காளர்கள் மத்தியில் பல்வேறு அமைப்பினர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில், கல்லூரி நிர்வாகம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து, வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான கோலப்போட்டியை நடத்தியது. இதில் 150க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு, வண்ணக் கோலங்கள் இட்டனர்.
அதில், மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும், வாக்களிப்பது நமது உரிமை, எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல உள்ளிட்ட பல விழிப்புணர்வு வாசகங்களை எழுதி இருந்தனர். இது குறித்து அக்கல்லூரி மாணவி காவியா கூறுகையில், “வரும் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்ய வேண்டும். நம்முடைய வாக்குகளை விற்பனை செய்யக் கூடாது. வாக்களிப்பது நமது கடமை என்றால், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது நமது உரிமை" எனத் தெரிவித்தார்.