thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 26, 2024, 7:20 AM IST

ETV Bharat / Videos

அண்ணாமலையார் கோயிலில் ரூ.3.58 கோடியைத் தாண்டிய உண்டியல் காணிக்கை! - Annamalaiyar temple

திருவண்ணாமலை: பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை ஸ்ரீ அண்ணாமலையார் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இவ்வாறு வருகிற பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை கோயில் பகுதியில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டிருக்கும் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்துகின்றனர். 

தற்போது ஆனி மாதம் பௌர்ணமி நிறைவடைந்துள்ள நிலையில், அதற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று காலை முதல் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்று வந்தது. அதில், அண்ணாமலையார் கோயில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். மேலும், அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் உள்ள உண்டியல் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கத்தில் வைக்கப்பட்ட உண்டியல்கள் என அனைத்து உண்டியல்கள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. 

ஆனி மாதம் பௌர்ணமி கிரிவலம் மேற்கொண்ட பக்தர்கள் அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் உள்ள உண்டியல் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள உண்டியலில் ரூ.3 கோடியே 57 லட்சத்து 98 ஆயிரம் 915 மற்றும் தங்கம் 181 கிராம், வெள்ளி 1,465 கிலோ கிராம் ஆகியவற்றை காணிக்கை செலுத்தி இருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.