thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 20, 2024, 7:29 PM IST

ETV Bharat / Videos

டீ குடிக்க 10 நிமிசம் பஸ் நின்னாலும் கொஞ்சம் யோசிங்க பாஸ்.. மோட்டலில் நின்ற பேருந்தில் லேப்டாப் அபேஸ்! - THEFT IN OMNI BUS

கோயம்புத்தூர்: கோவை முதல் பெங்களூர் வரை நாள்தோறும் இரவு நேரங்களில் அரசு மற்றும் பல்வேறு தனியார் சொகுசு பேருந்துகள் இயங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பெங்களூரில் இருந்து கோவைக்கு படுக்கை வசதியுடன் கூடிய ஆம்னி பேருந்து வந்து கொண்டு இருந்தது. அப்பொழுது, தேநீர் அருந்துவதற்காக வரும் வழியில் பேருந்துகள் நின்று செல்லும் இரவு நேர உணவகங்களின் ஒன்றில் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அப்போது, இளைஞர் ஒருவர் ஏறி, அங்கு பயணிகளின் படுக்கை அறைகளை ஒவ்வொன்றாக தேடி, அதில் ஒரு பயணியின் படுக்கையில் வைத்து இருந்த லேப்டாப் பேக்குகளை எடுத்து மாட்டிக் கொண்டு அந்தப் பேருந்தில் இருந்து இறங்கி சென்றுள்ளார். இந்தக் காட்சி அந்த பேருந்தில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ள நிலையில், தற்போது அந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி, இரவு நேர சொகுசுப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.