ஊட்டி தாவரவியல் பூங்காவில் கருஞ்சிறுத்தை நடமாட்டம்.. அச்சத்தில் மக்கள்! - Black Panther in Ooty botanical Garden - BLACK PANTHER IN OOTY BOTANICAL GARDEN
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/05-06-2024/640-480-21646663-thumbnail-16x9-black.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Jun 5, 2024, 10:57 PM IST
நீலகிரி: மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் வனப்பகுதி கொண்ட மாவட்டம் ஆகும். இங்கு யானை, காட்டெருமை, கரடி, மான், புலி, சிறுத்தை மற்றும் காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன.
இந்த நிலையில், வனவிலங்குகள் வனத்தை விட்டு உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு சமீப காலமாக வரத் தொடங்கி உள்ளன. அந்த வகையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகையின் உலகப் புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் கருஞ்சிறுத்தை ஒன்று உலா வந்துள்ளது.
மேலும், இந்த காட்சியானது அங்கு பொருத்தப்பட்டு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த நிலையில், தற்பொழுது அந்த சிசிடிவி காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் பூங்கா ஊழியர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும், உடனடியாக வனத்துறையினர் கருஞ்சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என சுற்றுலாப் பயணிகள், பூங்கா ஊழியர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.