thumbnail

தஞ்சை பெரிய கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா; மஞ்சள் அலங்காரத்தில் வாராஹி அம்மன்! - Ashadha Navratri festival

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 6, 2024, 10:29 PM IST

தஞ்சாவூர்:  உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் நடைபெற்ற ஆஷாட நவராத்திரி விழாவில், ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் மஞ்சள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தஞ்சாவூர் பெரியகோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இக்கோயிலில் தனி சன்னதியில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் அருள்பாலித்து வருகிறார்.

இந்நிலையில், மஹாவாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரிய கோவிலில் உள்ள ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு மட்டுமே நடைபெறும், வேறு எங்கும் நடைபெறுவது இல்லை என்பது தனித்துவம் வாய்ந்த ஒன்று.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆஷாட நவராத்திரி 21ஆம் ஆண்டு பெருவிழா, கடந்த ஜூலை 5ஆம் தேதி தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். இரண்டாம் நாளான இன்று ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு மஞ்சள் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.