Published : Apr 4, 2024, 10:10 PM IST
தேனியில் மு.க.ஸ்டாலின் போல் மிமிக்கிரி செய்து வாக்கு சேகரித்த அதிமுக பேச்சாளர் காளிதாஸ்! - lok sabha election 2024
தேனி: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேனி பெரியகுளம் பகுதியில் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் நாராயணசாமியை ஆதரித்து அதிமுக கட்சியின் தலைமை கழக பேச்சாளர் கோவை காளிதாஸ் பரப்புரை மேற்கொண்டார்.
இந்த பரப்புரையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்களை அவரது மறைவிற்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி அந்த திட்டங்களைத் தொடர்ந்தார். ஆனால் மு.க.ஸ்டாலின் அந்த திட்டங்களை அனைத்தையும் முடக்கியதாகக் குற்றம் சாட்டினார். அதேபோல் மு.க.ஸ்டாலின் போல் மிமிக்கிரி செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மேலும், அரசு ஊழியர்களுக்குத் தான் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் எனக் கூறிவிட்டு 3 ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றாத தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி வாக்கு கேட்டு வருகிறார் என கேள்விகளை எழுப்பினார்.
முன்னதாக அதிமுக தலைமைக் கழக பேச்சாளர் வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளர் பெயரை மாற்றிக் கூறினார். அப்பொழுது அதிமுக சார்பில் போட்டியிடும் நாராயணசாமி பெயரைக் குறிப்பிடுவதற்குப் பதிலாக அருணாச்சலம் என குறிப்பிட்ட பின் பெயரைத் தவறாகக் கூறிவிட்டோம் என நினைத்து சாரி எனக்கூறி நாராயணசாமி பெயரைக் குறிப்பிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.