சக்கரபாணி சுவாமி கோயில் மாசிமக பெருவிழா.. 4ஆம் நாளில் தங்க கருட வாகனத்தில் பெருமாள் காட்சி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 20, 2024, 12:06 PM IST

thumbnail

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற வைணவத் தலங்களில் ஒன்றான சுதர்சனவள்ளி, விஜயவள்ளி தாயார் சமேத சக்கரபாணி சுவாமி திருக்கோயிலின் மாசிமக பெருவிழாவின் 4ஆம் நாளான நேற்று (பிப்.19), உற்சவர் பெருமாள், தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

சக்கரபாணி சுவாமி திருக்கோயிலின், மாசிமக பெருவிழா கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், நேற்று இரவு நடைபெற்ற விழாவில், உற்சவர் பெருமாளுக்கு செவ்வரளி, செம்பருத்தி, வில்வம், வன்னி, துளசி, குங்குமம் ஆகிய பொருட்கள் கொண்டு அர்ச்சனை செய்யப்பட்டு, வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஓலை சப்பரம் மற்றும் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து, 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவின், முக்கிய நிகழ்ச்சியான மாசி மக தேரோட்டம் மற்றும் தீர்த்தவாரி உற்சவம் பிப்ரவரி 24ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.