ETV Bharat / technology

தண்டவாளத்தில் செல்லும் சொகுசு ஹோட்டல்.. மோடி சென்ற Rail Force One ஸ்பெஷல் என்ன? - Highlights Of Rail Force One

author img

By ETV Bharat Tech Team

Published : Aug 24, 2024, 3:20 PM IST

Rail Force One: பிரதமர் நரேந்திர மோடி போலந்தில் இருந்து ரயில் ஃபோர்ஸ் ஒன் என்ற சிறப்பு ரயிலில் பயணம் செய்து உக்ரைனுக்குச் சென்றுள்ளார். இந்த ரயிலின் சிறப்பம்சங்கள் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ரயில் ஃபோர்ஸ் ஒனில் பயணம் செய்த பிரதமர் மோடி
ரயில் ஃபோர்ஸ் ஒனில் பயணம் செய்த பிரதமர் மோடி (Credits - Narendra Modi's 'X' Page)

ஹைதராபாத்: வழக்கமாக பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்குச் செல்லும் போது விமானம் மூலமாகவே செல்வார். ஆனால், இந்த முறை வழக்கத்திற்கு மாறாக போலந்தில் இருந்து 'ரயில் ஃபோர்ஸ் ஒன்' (Rail Force One) என்ற சிறப்பு ரயிலில் சுமார் 10 மணி நேரம் பயணம் செய்து உக்ரைனுக்குச் சென்றுள்ளார். உக்ரைன் தலைநகரான கீவ் நகரில் சுமார் ஏழு மணி நேரம் மட்டுமே இருக்கப் போகும் பிரதமர் மோடி, இந்த 20 மணி நேர ரயில் பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்றால் அதற்கான காரணம் இருக்கிறது.

மோடியின் ரயில் பயணத்திற்கான காரணம்: ரஷ்யா உடனான போர் காரணமாக உக்ரைனில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் விமானம் இயக்கப்பட்டால் அது பாதுகாப்பானதாக இருக்காது என்ற காரணத்தாலேயே பிரதமர் மோடி ரயில் மூலம் உக்ரைன் சென்றுள்ளார். மேலும், இந்த 'ரயில் ஃபோர்ஸ் ஒன்' பிற ரயில்களைப் போல சாதாரணமான ரயில் அல்ல. இது ஆடம்பர வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த சேவைக்கு பெயர் பெற்ற டீசல் என்ஜின் கொண்ட ரயிலாகும்.

ரயில் போர்ஸ் ஒன்: இந்த ரயில் முதலில் கிரிமியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால், கிரிமியாவை ரஷ்யா இணைத்த பிறகு, தற்போது அவை உலகத் தலைவர்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. உக்ரைனுக்குச் செல்லும் பெரும்பாலான உலகத் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் தூதர்கள் இந்த ரயில் ஃபோர்ஸ் ஒன் மூலம் மட்டுமே பயணம் செய்கிறார்கள்.

தண்டவாளத்தில் செல்லும் சொகுசு ஹோட்டல்: இந்த ரயில் ஃபோர்ஸ் ஒன் இரவில் மட்டுமே இயக்கப்படும், மெதுவாக செல்லக்கூடிய சொகுசு ரயிலாகும். போலந்திலிருந்து கீவ் வரையிலான 600 கி.மீ தூரத்தைக் கடக்க 10 மணி நேரம் ஆகும். இதன் உள்ளே இருக்கும் வசதிகளைப் பார்க்கும் போது இதை ரயில் என நம்புவதே கடினம். ஏனெனில், இந்த ரயில் தண்டவாளத்தில் நகர்ந்து செல்லும் சொகுசு ஹோட்டல் போல் உள்ளது.

மேலும், ரயிலில் அழகான மற்றும் நவீனமயமான உட்புறத் தோற்றத்தை காண்கையில், கிட்டத்தட்ட நட்சத்திர ஹோட்டலுக்கு இணையான வசதிகளைக் கொண்டதாக உள்ளது. இதுமட்டுமல்லாது மற்ற வசதிகளைப் பொறுத்தவரையில், முக்கியமான கூட்டங்களை நடத்த தேவையான பெரிய அளவிலான மீட்டிங் ஹால், ஆடம்பரமான ஷோபா, சுவர் தொலைக்காட்சிகள் (Wall TV), ஓய்வெடுக்க வசதியான அறை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.

புல்லட் புரூஃப் ரயில் (Bullet proof train): இந்த ரயிலில் பயணிக்கக்கூடிய முக்கிய நபர்களைப் பாதுகாக்க பல பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன. அதன் அடிப்படையில், இதன் ரயிலின் ஜன்னல் கண்ணாடிகள் குண்டு துளைக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், எதிர்பாராத விதமான பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதனைக் கையாள தேவையான அனைத்து வசதிகள், பாதுகாப்பான தகவல் தொடர்பு நெட்வொர்க் மற்றும் பிரத்யேக பாதுகாப்புப் பணியாளர்கள் குழுவும் நிறுவப்பட்டுள்ளன.

ரயில் போர்ஸ் ஒன் மூலம் பயணித்த தலைவர்கள்: இந்த ரயிலில் பயணம் செய்த முதல் நபர் பிரதமர் மோடி மட்டுமல்ல. இந்த ரயிலில் பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல்வாதிகளும் பயணம் செய்துள்ளனர். அந்த வகையில், பிரதமர் மோடிக்கு முன்பு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன், ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், முன்னாள் இத்தாலி பிரதமர் மரியோ டிராகி என பல சர்வதேச தலைவர்கள் இந்த ரயிலில் பயணம் செய்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: வதந்தியா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா? 120 கோடி தனி விமானத்தின் சூப்பர் வசதிகள்

ஹைதராபாத்: வழக்கமாக பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்குச் செல்லும் போது விமானம் மூலமாகவே செல்வார். ஆனால், இந்த முறை வழக்கத்திற்கு மாறாக போலந்தில் இருந்து 'ரயில் ஃபோர்ஸ் ஒன்' (Rail Force One) என்ற சிறப்பு ரயிலில் சுமார் 10 மணி நேரம் பயணம் செய்து உக்ரைனுக்குச் சென்றுள்ளார். உக்ரைன் தலைநகரான கீவ் நகரில் சுமார் ஏழு மணி நேரம் மட்டுமே இருக்கப் போகும் பிரதமர் மோடி, இந்த 20 மணி நேர ரயில் பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்றால் அதற்கான காரணம் இருக்கிறது.

மோடியின் ரயில் பயணத்திற்கான காரணம்: ரஷ்யா உடனான போர் காரணமாக உக்ரைனில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் விமானம் இயக்கப்பட்டால் அது பாதுகாப்பானதாக இருக்காது என்ற காரணத்தாலேயே பிரதமர் மோடி ரயில் மூலம் உக்ரைன் சென்றுள்ளார். மேலும், இந்த 'ரயில் ஃபோர்ஸ் ஒன்' பிற ரயில்களைப் போல சாதாரணமான ரயில் அல்ல. இது ஆடம்பர வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த சேவைக்கு பெயர் பெற்ற டீசல் என்ஜின் கொண்ட ரயிலாகும்.

ரயில் போர்ஸ் ஒன்: இந்த ரயில் முதலில் கிரிமியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால், கிரிமியாவை ரஷ்யா இணைத்த பிறகு, தற்போது அவை உலகத் தலைவர்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. உக்ரைனுக்குச் செல்லும் பெரும்பாலான உலகத் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் தூதர்கள் இந்த ரயில் ஃபோர்ஸ் ஒன் மூலம் மட்டுமே பயணம் செய்கிறார்கள்.

தண்டவாளத்தில் செல்லும் சொகுசு ஹோட்டல்: இந்த ரயில் ஃபோர்ஸ் ஒன் இரவில் மட்டுமே இயக்கப்படும், மெதுவாக செல்லக்கூடிய சொகுசு ரயிலாகும். போலந்திலிருந்து கீவ் வரையிலான 600 கி.மீ தூரத்தைக் கடக்க 10 மணி நேரம் ஆகும். இதன் உள்ளே இருக்கும் வசதிகளைப் பார்க்கும் போது இதை ரயில் என நம்புவதே கடினம். ஏனெனில், இந்த ரயில் தண்டவாளத்தில் நகர்ந்து செல்லும் சொகுசு ஹோட்டல் போல் உள்ளது.

மேலும், ரயிலில் அழகான மற்றும் நவீனமயமான உட்புறத் தோற்றத்தை காண்கையில், கிட்டத்தட்ட நட்சத்திர ஹோட்டலுக்கு இணையான வசதிகளைக் கொண்டதாக உள்ளது. இதுமட்டுமல்லாது மற்ற வசதிகளைப் பொறுத்தவரையில், முக்கியமான கூட்டங்களை நடத்த தேவையான பெரிய அளவிலான மீட்டிங் ஹால், ஆடம்பரமான ஷோபா, சுவர் தொலைக்காட்சிகள் (Wall TV), ஓய்வெடுக்க வசதியான அறை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.

புல்லட் புரூஃப் ரயில் (Bullet proof train): இந்த ரயிலில் பயணிக்கக்கூடிய முக்கிய நபர்களைப் பாதுகாக்க பல பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன. அதன் அடிப்படையில், இதன் ரயிலின் ஜன்னல் கண்ணாடிகள் குண்டு துளைக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், எதிர்பாராத விதமான பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதனைக் கையாள தேவையான அனைத்து வசதிகள், பாதுகாப்பான தகவல் தொடர்பு நெட்வொர்க் மற்றும் பிரத்யேக பாதுகாப்புப் பணியாளர்கள் குழுவும் நிறுவப்பட்டுள்ளன.

ரயில் போர்ஸ் ஒன் மூலம் பயணித்த தலைவர்கள்: இந்த ரயிலில் பயணம் செய்த முதல் நபர் பிரதமர் மோடி மட்டுமல்ல. இந்த ரயிலில் பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல்வாதிகளும் பயணம் செய்துள்ளனர். அந்த வகையில், பிரதமர் மோடிக்கு முன்பு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன், ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், முன்னாள் இத்தாலி பிரதமர் மரியோ டிராகி என பல சர்வதேச தலைவர்கள் இந்த ரயிலில் பயணம் செய்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: வதந்தியா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா? 120 கோடி தனி விமானத்தின் சூப்பர் வசதிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.