ETV Bharat / state

தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் - எந்தெந்த ஊருக்குத் தெரியும்? - TNSTC arranged Special buses

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2024, 10:03 AM IST

தொடர் விடுமுறைகளான முகூர்த்தம், மிலாடி நபி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கத் திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

சிறப்பு பேருந்து கோப்புப்படம்
சிறப்பு பேருந்து கோப்புப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழ்நாட்டில் வெளியூரில் தங்கிப் படிக்கும், வேலை பார்க்கும் நபர்கள் மற்றும் விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு வருபவர் தொடர் விடுமுறை நாட்களில் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களிலிருந்து படையெடுத்துச் செல்வது வழக்கம். அதனால், பயணிகளின் பாதுகாப்பையும் நலனையும் கருத்தில் கொண்டு போக்குவரத்துக் கழகம், ரயில்வே துறை போன்றவை சிறப்பு பேருந்து ரயிலை இயக்கி வருகிறது. அந்த வகையில், செப்.13, 14, 15 மற்றும் செப்.17 வரை உள்ள தொடர் விடுமுறைக்காகச் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "செப்டம்பர் 13ஆம் தேதி (வெள்ளிக் கிழமை) செப்டம்பர் 14ஆம் தேதி (சனிக்கிழமை), செப்டம்பர் 15ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை முகூர்த்தம்) மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு 13 மற்றும் 14 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு செப்.13 மற்றும் செப்.14 ஆகிய நாட்களில் 955 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு செப்.13 மற்றும் செப்.14 அன்று 190 பேருந்துகளும், மாதாவரத்திலிருந்து 20 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டம்.

இதையும் படிங்க: பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு போறீங்களா?.. இந்த தேதியை நோட் பண்ணிக்கோங்க.. ரயில் முன்பதிவு தொடங்கப்போகுது!

அதனைத் தொடர்ந்து பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்குச் செல்ல 350 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறு முதல் செவ்வாய் வரை சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்குத் திரும்ப வசதியாகப் பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 21,849 பயணிகளும், சனிக்கிழமை அன்று 11,724 பயணிகளும், ஞாயிற்றுக்கிழமை அன்று 14,271 பயணிகளும், திங்கட்கிழமை அன்று 11,710 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்காக டிக்கெட்டை www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி, தங்களது பயணத்தினை பாதுகாப்பாக மேற்கொள்ளவும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் வெளியூரில் தங்கிப் படிக்கும், வேலை பார்க்கும் நபர்கள் மற்றும் விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு வருபவர் தொடர் விடுமுறை நாட்களில் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களிலிருந்து படையெடுத்துச் செல்வது வழக்கம். அதனால், பயணிகளின் பாதுகாப்பையும் நலனையும் கருத்தில் கொண்டு போக்குவரத்துக் கழகம், ரயில்வே துறை போன்றவை சிறப்பு பேருந்து ரயிலை இயக்கி வருகிறது. அந்த வகையில், செப்.13, 14, 15 மற்றும் செப்.17 வரை உள்ள தொடர் விடுமுறைக்காகச் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "செப்டம்பர் 13ஆம் தேதி (வெள்ளிக் கிழமை) செப்டம்பர் 14ஆம் தேதி (சனிக்கிழமை), செப்டம்பர் 15ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை முகூர்த்தம்) மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு 13 மற்றும் 14 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு செப்.13 மற்றும் செப்.14 ஆகிய நாட்களில் 955 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு செப்.13 மற்றும் செப்.14 அன்று 190 பேருந்துகளும், மாதாவரத்திலிருந்து 20 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டம்.

இதையும் படிங்க: பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு போறீங்களா?.. இந்த தேதியை நோட் பண்ணிக்கோங்க.. ரயில் முன்பதிவு தொடங்கப்போகுது!

அதனைத் தொடர்ந்து பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்குச் செல்ல 350 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறு முதல் செவ்வாய் வரை சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்குத் திரும்ப வசதியாகப் பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 21,849 பயணிகளும், சனிக்கிழமை அன்று 11,724 பயணிகளும், ஞாயிற்றுக்கிழமை அன்று 14,271 பயணிகளும், திங்கட்கிழமை அன்று 11,710 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்காக டிக்கெட்டை www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி, தங்களது பயணத்தினை பாதுகாப்பாக மேற்கொள்ளவும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.