ETV Bharat / state

4 பெண்களுடன் தொடர்பு.. ஐந்தாவதாக 17 வயது சிறுமியை கடத்திச் சென்ற நபர் போக்சோவில் கைது! - Tirupathur POCSO arrest

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 29, 2024, 7:50 PM IST

POCSO case: திருப்பத்தூர் அருகே நான்கு பெண்களுடன் தொடர்பிலிருந்து ஐந்தாவதாக 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்ற நபரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

File Image
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருப்பத்தூர்: திருப்பத்தூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (35). இவரது முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில், ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், கிருஷ்ணமூர்த்தி 4க்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, கூலி வேலைக்கு வந்த இடத்தில், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். பின்னர், சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றுள்ளார். சிறுமி வீட்டில் இருந்து மாயமானதால் அவரது தந்தை கடந்த மாதம் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் தனது மகள் காணவில்லை என புகார் அளித்துள்ளார்.

அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசாருக்கு, கிருஷ்ணகிரியில் கிருஷ்ணமூர்த்தியும், 17 வயது சிறுமியும் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அங்கு சென்று போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

அங்கு நடத்தப்பட்ட விசாரணையில், கிருஷ்ணமூர்த்தி 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரிய வந்தது. இதனால், கிருஷ்ணமூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்த காவல் துறையினர், அவரை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், 17 வயது சிறுமிக்கு போலீசார் பல்வேறு அறிவுரைகளை வழங்கி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: “பரோல் காலத்தில் தப்பித்தார் என்பதற்காக விடுதலை செய்ய மறுக்க முடியாது” - சென்னை உயர் நீதிமன்றம்!

திருப்பத்தூர்: திருப்பத்தூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (35). இவரது முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில், ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், கிருஷ்ணமூர்த்தி 4க்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, கூலி வேலைக்கு வந்த இடத்தில், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். பின்னர், சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றுள்ளார். சிறுமி வீட்டில் இருந்து மாயமானதால் அவரது தந்தை கடந்த மாதம் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் தனது மகள் காணவில்லை என புகார் அளித்துள்ளார்.

அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசாருக்கு, கிருஷ்ணகிரியில் கிருஷ்ணமூர்த்தியும், 17 வயது சிறுமியும் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அங்கு சென்று போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

அங்கு நடத்தப்பட்ட விசாரணையில், கிருஷ்ணமூர்த்தி 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரிய வந்தது. இதனால், கிருஷ்ணமூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்த காவல் துறையினர், அவரை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், 17 வயது சிறுமிக்கு போலீசார் பல்வேறு அறிவுரைகளை வழங்கி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: “பரோல் காலத்தில் தப்பித்தார் என்பதற்காக விடுதலை செய்ய மறுக்க முடியாது” - சென்னை உயர் நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.