ETV Bharat / state

தமிழ்நாடு வக்ஃபு வாரிய புதிய தலைவர் நவாஸ் கனி முதல்வரிடம் வாழ்த்து! - MP NAVASKANI waqf new chairman

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 7 hours ago

MP NAVASKANI WAQF New Chairman: இராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் நவாஸ் கனி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தபோது
தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் நவாஸ் கனி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தபோது (Credits- ETV Bharat Tamil Nadu)

சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே. நவாஸ் கனி வக்ஃபு வாரிய புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பின்னர் சிறுபான்மை நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானை சந்திதார். இது குறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனை பேரில் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்திற்கு புதிய தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் ஏக மனதாக தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினரும், வக்ஃபு வாரிய தலைவருமான நவாஸ் கனி கூறுகையில், “வக்ஃபு வாரிய அலுவலகத்தில் இன்று வக்ஃபு வாரிய சிறப்பு கூட்டம் நடைபெற்றது . சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முன்னிலையில் வக்ஃபு வாரிய தலைவராக என்னை தேர்ந்தெடுத்தார்கள். முக்கிய கால கட்டத்தில் என் மீது நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "பள்ளிகளில் ஆன்மிகம், நீதி போதனைகள்" - ஹெச்.ராஜா வலியுறுத்தல்!

தமிழக முதலமைச்சருக்கும், சிறுபான்மை நலத்துறை அமைச்சருக்கும் என் இதயபூர்வ நன்றி, பரிந்துரை செய்த தேசிய தலைவர் காதர் மொய்தீனுக்கும் நன்றி. வக்ஃபு வாரியம் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், வளர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உறுப்பினர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நடவடிக்கை எடுப்போம்.

வக்ஃபு வாரிய நிலங்களை பாதுகாப்பது, இருக்கும் நிலங்களை முறையாக பயன்படுத்துவது உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபடுவோம். ஏற்கனவே இருந்த நடைமுறையில் எளிதாக சொத்துக்களை பத்திரப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான இடங்கள் முறையாக அடையாளம் காணப்படும்” என்றார்.

சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே. நவாஸ் கனி வக்ஃபு வாரிய புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பின்னர் சிறுபான்மை நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானை சந்திதார். இது குறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனை பேரில் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்திற்கு புதிய தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் ஏக மனதாக தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினரும், வக்ஃபு வாரிய தலைவருமான நவாஸ் கனி கூறுகையில், “வக்ஃபு வாரிய அலுவலகத்தில் இன்று வக்ஃபு வாரிய சிறப்பு கூட்டம் நடைபெற்றது . சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முன்னிலையில் வக்ஃபு வாரிய தலைவராக என்னை தேர்ந்தெடுத்தார்கள். முக்கிய கால கட்டத்தில் என் மீது நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "பள்ளிகளில் ஆன்மிகம், நீதி போதனைகள்" - ஹெச்.ராஜா வலியுறுத்தல்!

தமிழக முதலமைச்சருக்கும், சிறுபான்மை நலத்துறை அமைச்சருக்கும் என் இதயபூர்வ நன்றி, பரிந்துரை செய்த தேசிய தலைவர் காதர் மொய்தீனுக்கும் நன்றி. வக்ஃபு வாரியம் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், வளர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உறுப்பினர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நடவடிக்கை எடுப்போம்.

வக்ஃபு வாரிய நிலங்களை பாதுகாப்பது, இருக்கும் நிலங்களை முறையாக பயன்படுத்துவது உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபடுவோம். ஏற்கனவே இருந்த நடைமுறையில் எளிதாக சொத்துக்களை பத்திரப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான இடங்கள் முறையாக அடையாளம் காணப்படும்” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.