ETV Bharat / state

"சித்தா படித்த மருத்துவர்கள் அலோபதி மருத்துவம் செய்ய எந்த தடையும்" - சென்னை உயர்நீதிமன்றம்

தமிழ்நாட்டில் சித்தா படித்த மருத்துவர்கள் அலோபதி மருத்துவம் செய்ய எந்த தடையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம்
சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சித்த மருத்துவர் எஸ்.சிந்து என்பவரின் மருத்துவமனையில், கடந்த 2017 பிப்ரவரி 28ஆம் தேதி ஆய்வு செய்த மருந்துக் கட்டுப்பாட்டு உதவி இயக்குநர், அலுவலக அதிகாரி, மருத்துவர் சிந்து அலோபதி மருந்துகளை வைத்திருந்ததாகக் கூறி வழக்குப்பதிவு செய்துள்ளார்.

அதைத் தொடர்ந்து மருந்து கட்டுப்பாட்டுத்துறையின் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, சித்த மருத்துவர் எஸ்.சிந்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், உரிமம் இன்றி மருந்துகளை வைத்திருந்ததற்காகவே நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், உரிமம் இல்லாமல் மருந்துகளைப் பதுக்கி வைத்திருந்ததாகவும், விற்பனை செய்ததாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும் உத்தரவிட்டார்.

மேலும், வழக்கை சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விரைந்து விசாரித்து முடிக்கவும் உத்தரவிட்டார். அதே சமயம், சித்த மருத்துவர்கள், அலோபதி மருத்துவம் செய்ய எந்த தடையும் இல்லை என்று தெரிவித்த நீதிபதி, அதற்காக அளவுக்கு அதிகமாக அலோபதி மருத்துகளை வைத்திருக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
மேலும், இது வழக்கு தொடர்பாக தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை பிறப்பித்த அரசு உத்தரவையும் சுட்டிக்காட்டி உள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டர் நடைமுறைகளுக்கு தடை!

சென்னை: சித்த மருத்துவர் எஸ்.சிந்து என்பவரின் மருத்துவமனையில், கடந்த 2017 பிப்ரவரி 28ஆம் தேதி ஆய்வு செய்த மருந்துக் கட்டுப்பாட்டு உதவி இயக்குநர், அலுவலக அதிகாரி, மருத்துவர் சிந்து அலோபதி மருந்துகளை வைத்திருந்ததாகக் கூறி வழக்குப்பதிவு செய்துள்ளார்.

அதைத் தொடர்ந்து மருந்து கட்டுப்பாட்டுத்துறையின் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, சித்த மருத்துவர் எஸ்.சிந்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், உரிமம் இன்றி மருந்துகளை வைத்திருந்ததற்காகவே நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், உரிமம் இல்லாமல் மருந்துகளைப் பதுக்கி வைத்திருந்ததாகவும், விற்பனை செய்ததாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும் உத்தரவிட்டார்.

மேலும், வழக்கை சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விரைந்து விசாரித்து முடிக்கவும் உத்தரவிட்டார். அதே சமயம், சித்த மருத்துவர்கள், அலோபதி மருத்துவம் செய்ய எந்த தடையும் இல்லை என்று தெரிவித்த நீதிபதி, அதற்காக அளவுக்கு அதிகமாக அலோபதி மருத்துகளை வைத்திருக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
மேலும், இது வழக்கு தொடர்பாக தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை பிறப்பித்த அரசு உத்தரவையும் சுட்டிக்காட்டி உள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டர் நடைமுறைகளுக்கு தடை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.