ETV Bharat / state

இ-சேவை மையத்தை மறைத்து பிளக்ஸ் பேனர் - காவல்துறை பதிலளிக்க மதுரைக்கிளை உத்தரவு!

Flex Banner issue: பிளக்ஸ் பேனர் விவகாரத்தில் காவல் துறையினர் சட்டத்திற்கு உட்பட்டே செயல்பட வேண்டும் என கருத்து கூறிய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 17, 2024, 1:36 PM IST

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரை: மதுரை பேரையூரைச் சேர்ந்த வாசுமதி என்பவர் தாக்கல் செய்த மனுவில், “நான் தமிழ்நாடு அரசின் முறையான அனுமதியோடு கிராம மக்களின் தேவைகளை நிறைவேற்றும் விதம், கடந்த ஒரு வருடத்திற்கு மேல் பேரையூர் சூலப்புரம் பகுதியில் வாடகை கட்டடத்தில் இ-சேவை மையம் நடத்தி வருகிறேன். இந்த நிலையில், சிலர் எனது இ-சேவை மையத்தின் முன்பு, கட்டடத்தை மறைக்கும் வகையில் பிளக்ஸ் போர்டு வைத்தனர்.

இதனால் நாங்கள் பிளக்ஸ் போர்டை சிறிது நகற்றி மாற்றம் செய்ததற்காக, தேவையற்ற பிரச்னையை எழுப்பி, என் மீதும், எனது குடும்பத்தினர் மீது டி.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து காவல்துறை விசாரணை செய்து, பின் மீண்டும் இ-சேவை மையத்தை மறைக்கும் வகையில் பிளக்ஸ் போர்டை மாற்றி வைத்தனர். இது குறித்து மீண்டும் எனது குடும்பத்தினர் கேள்வி எழுப்பியபோது, எனது மாமியார் மற்றும் மாமனாரை கடுமையாக தாக்கி, இழிவான வார்த்தைகளால் பேசினர்.

ஏற்கனவே அனுமதியற்ற பிளக்ஸ் போர்டுகளை வைக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ள நிலையில், சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், பொதுமக்கள் பயன்படுத்தும் இ-சேவை மையத்தை மறைத்து, அனுமதியின்றி சட்ட விரோதமாக குறிப்பிட்ட சமூகத்தினர் வைத்துள்ள பிளக்ஸ் போர்டை அகற்ற வேண்டும். மேலும், கொலை மிரட்டல் விடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு உயர் நீதிமன்றக்கிளை நீதிபதி சக்தி சுகுமார குரூப் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் குறிப்பிடும் இடத்தில் 10 வருடங்களுக்கு மேலாக பிளக்ஸ் பேனர் உள்ளது என்று கூறப்பட்டதை அடுத்து, 10 வருடம் எவ்வாறு பிளக்ஸ் பேனர் உள்ளது என்றும், அதற்கு உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், காவல் துறையினர் சட்டத்திற்கு உட்பட்டுதான் செயல்பட வேண்டும் என்று கூறி, மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மீண்டும் ஜாமீன் கோரி வழக்கு.. லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவு!

மதுரை: மதுரை பேரையூரைச் சேர்ந்த வாசுமதி என்பவர் தாக்கல் செய்த மனுவில், “நான் தமிழ்நாடு அரசின் முறையான அனுமதியோடு கிராம மக்களின் தேவைகளை நிறைவேற்றும் விதம், கடந்த ஒரு வருடத்திற்கு மேல் பேரையூர் சூலப்புரம் பகுதியில் வாடகை கட்டடத்தில் இ-சேவை மையம் நடத்தி வருகிறேன். இந்த நிலையில், சிலர் எனது இ-சேவை மையத்தின் முன்பு, கட்டடத்தை மறைக்கும் வகையில் பிளக்ஸ் போர்டு வைத்தனர்.

இதனால் நாங்கள் பிளக்ஸ் போர்டை சிறிது நகற்றி மாற்றம் செய்ததற்காக, தேவையற்ற பிரச்னையை எழுப்பி, என் மீதும், எனது குடும்பத்தினர் மீது டி.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து காவல்துறை விசாரணை செய்து, பின் மீண்டும் இ-சேவை மையத்தை மறைக்கும் வகையில் பிளக்ஸ் போர்டை மாற்றி வைத்தனர். இது குறித்து மீண்டும் எனது குடும்பத்தினர் கேள்வி எழுப்பியபோது, எனது மாமியார் மற்றும் மாமனாரை கடுமையாக தாக்கி, இழிவான வார்த்தைகளால் பேசினர்.

ஏற்கனவே அனுமதியற்ற பிளக்ஸ் போர்டுகளை வைக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ள நிலையில், சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், பொதுமக்கள் பயன்படுத்தும் இ-சேவை மையத்தை மறைத்து, அனுமதியின்றி சட்ட விரோதமாக குறிப்பிட்ட சமூகத்தினர் வைத்துள்ள பிளக்ஸ் போர்டை அகற்ற வேண்டும். மேலும், கொலை மிரட்டல் விடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு உயர் நீதிமன்றக்கிளை நீதிபதி சக்தி சுகுமார குரூப் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் குறிப்பிடும் இடத்தில் 10 வருடங்களுக்கு மேலாக பிளக்ஸ் பேனர் உள்ளது என்று கூறப்பட்டதை அடுத்து, 10 வருடம் எவ்வாறு பிளக்ஸ் பேனர் உள்ளது என்றும், அதற்கு உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், காவல் துறையினர் சட்டத்திற்கு உட்பட்டுதான் செயல்பட வேண்டும் என்று கூறி, மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மீண்டும் ஜாமீன் கோரி வழக்கு.. லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.