ETV Bharat / state

அமைச்சர்கள் சொத்து குவிப்பு வழக்கு: உயர் நீதிமன்றம் கூறப்போகும் தீர்ப்பு என்ன? - MINISTERS CASE JUDGEMENT

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 20, 2024, 7:26 PM IST

MINISTERS COURT CASES: அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிராக சொத்து குவிப்பு வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம் (PHOTO CREDITS- ETV Bharat Tamil Nadu)

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் மேல் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறையினர், தாக்கல் செய்த அறிக்கைகளின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து சிறப்பு நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதேபோல், முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை திரும்பப் பெற அனுமதி அளித்து, வழக்கில் இருந்து அவர்களை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவுகளை மறுஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

கடந்த மார்ச் மாதம் இந்த வழக்குகளில் இறுதி விசாரணை துவங்கியது. இந்நிலையில் மூன்று வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பிலும், லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பிலும் வாதங்கள் முடிவடைந்தன. அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்ததை அடுத்து, இந்த மூன்று வழக்குகளின் தீர்ப்பை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றத்தில் முறையீடு!

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் மேல் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறையினர், தாக்கல் செய்த அறிக்கைகளின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து சிறப்பு நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதேபோல், முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை திரும்பப் பெற அனுமதி அளித்து, வழக்கில் இருந்து அவர்களை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவுகளை மறுஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

கடந்த மார்ச் மாதம் இந்த வழக்குகளில் இறுதி விசாரணை துவங்கியது. இந்நிலையில் மூன்று வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பிலும், லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பிலும் வாதங்கள் முடிவடைந்தன. அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்ததை அடுத்து, இந்த மூன்று வழக்குகளின் தீர்ப்பை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றத்தில் முறையீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.