ETV Bharat / state

சென்னை ஐஐடியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு நிர்வாக எம்பிஏ படிப்பு - Executive MBA course In IIT Madras

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2024, 5:19 PM IST

Executive MBA Course In IIT Madras: காவல் பணிகள் மற்றும் அரசின் இதர துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு சமகால தொழில்நுட்பம் பற்றிய ஆழமான புரிதலை ஏற்படுத்த இந்த படிப்பு உதவியாக இருக்கும் என சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி கூறியுள்ளார்.

தேசிய பாதுகாப்புக் கல்லூரி குழுவுடன் இணைந்து சென்னை ஐஐடி குழுவினர்
தேசிய பாதுகாப்புக் கல்லூரி குழுவுடன் இணைந்து சென்னை ஐஐடி குழுவினர் (Credits- ETV Bharat Tamil Nadu)

சென்னை: பாதுகாப்பு சேவைகளுக்கான உயர்மட்டப் பயிற்சி நிறுவனமான தேசிய பாதுகாப்புக் கல்லூரியுடன் இணைந்து சென்னை ஐஐடி "உத்திசார் தலைமைத்துவம் மற்றும் பொதுக்கொள்கை" பாடத்திட்டத்தில் 'நிர்வாக எம்பிஏ' என்னும் ஓராண்டு கால படிப்பை துவங்கி வைத்துள்ளது. இந்த பாடப்பிரிவின் வகுப்புகள் விரிவுரை அடிப்படையிலான பாடங்கள், சோதனைத் தொகுப்புகள், ஆய்வறிக்கை ஆகியவற்றுடன் 48 வாரங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த படிப்பை இந்தியா மற்றும் நட்புறவு கொண்ட வெளிநாடுகளின் ஆயுதப் படை பணியாளர்கள், அரசின் குடிமைப்பணி சேவை பணியாளர்கள் என ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், டிஆர்டிஓ பதவியில் இருப்பவர்கள் என தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த அதிகாரிகளை உயர் தலைமைப் பதவிகளுக்குத் தயார்படுத்தும் விதமாக அறிவுசார் வளர்ச்சி, உத்திசார் திறமைகளை வளர்ப்பதே இப்பாடத்திட்டத்தின் நோக்கமாகும்.

இந்நிலையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி கையெழுத்தானது. இதில் சென்னை ஐஐடி மேலாண்மைக் கல்வித்துறை தலைவர் தேன்மொழி, தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் செயலாளர் பிரிகேடியர் ராஜேஷ் ராமன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். மேலும் சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, பாதுகாப்பு அமைச்சக கூடுதல் செயலாளர் தீப்தி மொஹில் சாவ்லா ஆகியோர் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இந்த பாடத்திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி கூறுகையில், "வரும் தலைமுறையினரை காக்க அதிகாரிகளுக்கு சமகால தொழில்நுட்பத்தை பற்றிய ஆழமான புரிதல் தேவைபடுகிறது. இதற்குத் தீர்வுகாணும் விதமாகவே இந்த எம்பிஏ படிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படிப்பை ஐஐடியில் உள்ள மேலாண்மைக் கல்வி, விண்வெளித் துறை மற்றும் இதர துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் என்டிசியின் ஆசிரியர்கள், பாடப்பொருள் வல்லுநர்கள், தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் வகுப்புகளை நடத்துவர். இந்திய ஆயுதப் படைகள், இந்திய குடிமைப் பணிகள், இந்திய காவல் பணிகள், அரசின் இதர துறைகளைச் சேர்ந்த 120 பேர் இந்தப் படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

இதற்கான தேர்வு நடைமுறைகள் கடுமையாக இருக்கும். நட்புறவு கொண்ட வெளிநாடுகளின் அதிகாரிகளும் இப்படிப்பில் இடம்பெறலாம். பாதுகாப்புத் துறையில் பிரிகேடியர் அல்லது அதற்குச் சமமான அந்தஸ்தில் இருப்பவர்கள், இந்திய அரசின் குடிமை மற்றும் தூதரகப் பணி அதிகாரிகளில் இயக்குநர், இணைச் செயலாளர் அந்தஸ்து உடையவர்கள் இப்பாடத்திட்டத்தில் சேரத் தகுதி உடையவர் ஆவார்கள்.

தொழில்நுட்ப அடிப்படையிலான தலைமைத்துவம், நடைமுறையில் உள்ள கொள்கைச் சிக்கல்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்தல், செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு தொடர்பான திறமைகளைக் கொண்ட எதிர்கால வழிநடத்துநர்களை உருவாக்குதல், உத்திசார் முடிவெடுப்பதில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப பயன்பாடுகள் ஆகியவை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்களாகும்" எனக் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: மெட்ராஸ் டூ ரோபர்.. BS Data Science மாணவர்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பா? சென்னை ஐஐடி முக்கிய ஒப்பந்தம்!

சென்னை: பாதுகாப்பு சேவைகளுக்கான உயர்மட்டப் பயிற்சி நிறுவனமான தேசிய பாதுகாப்புக் கல்லூரியுடன் இணைந்து சென்னை ஐஐடி "உத்திசார் தலைமைத்துவம் மற்றும் பொதுக்கொள்கை" பாடத்திட்டத்தில் 'நிர்வாக எம்பிஏ' என்னும் ஓராண்டு கால படிப்பை துவங்கி வைத்துள்ளது. இந்த பாடப்பிரிவின் வகுப்புகள் விரிவுரை அடிப்படையிலான பாடங்கள், சோதனைத் தொகுப்புகள், ஆய்வறிக்கை ஆகியவற்றுடன் 48 வாரங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த படிப்பை இந்தியா மற்றும் நட்புறவு கொண்ட வெளிநாடுகளின் ஆயுதப் படை பணியாளர்கள், அரசின் குடிமைப்பணி சேவை பணியாளர்கள் என ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், டிஆர்டிஓ பதவியில் இருப்பவர்கள் என தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த அதிகாரிகளை உயர் தலைமைப் பதவிகளுக்குத் தயார்படுத்தும் விதமாக அறிவுசார் வளர்ச்சி, உத்திசார் திறமைகளை வளர்ப்பதே இப்பாடத்திட்டத்தின் நோக்கமாகும்.

இந்நிலையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி கையெழுத்தானது. இதில் சென்னை ஐஐடி மேலாண்மைக் கல்வித்துறை தலைவர் தேன்மொழி, தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் செயலாளர் பிரிகேடியர் ராஜேஷ் ராமன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். மேலும் சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, பாதுகாப்பு அமைச்சக கூடுதல் செயலாளர் தீப்தி மொஹில் சாவ்லா ஆகியோர் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இந்த பாடத்திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி கூறுகையில், "வரும் தலைமுறையினரை காக்க அதிகாரிகளுக்கு சமகால தொழில்நுட்பத்தை பற்றிய ஆழமான புரிதல் தேவைபடுகிறது. இதற்குத் தீர்வுகாணும் விதமாகவே இந்த எம்பிஏ படிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படிப்பை ஐஐடியில் உள்ள மேலாண்மைக் கல்வி, விண்வெளித் துறை மற்றும் இதர துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் என்டிசியின் ஆசிரியர்கள், பாடப்பொருள் வல்லுநர்கள், தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் வகுப்புகளை நடத்துவர். இந்திய ஆயுதப் படைகள், இந்திய குடிமைப் பணிகள், இந்திய காவல் பணிகள், அரசின் இதர துறைகளைச் சேர்ந்த 120 பேர் இந்தப் படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

இதற்கான தேர்வு நடைமுறைகள் கடுமையாக இருக்கும். நட்புறவு கொண்ட வெளிநாடுகளின் அதிகாரிகளும் இப்படிப்பில் இடம்பெறலாம். பாதுகாப்புத் துறையில் பிரிகேடியர் அல்லது அதற்குச் சமமான அந்தஸ்தில் இருப்பவர்கள், இந்திய அரசின் குடிமை மற்றும் தூதரகப் பணி அதிகாரிகளில் இயக்குநர், இணைச் செயலாளர் அந்தஸ்து உடையவர்கள் இப்பாடத்திட்டத்தில் சேரத் தகுதி உடையவர் ஆவார்கள்.

தொழில்நுட்ப அடிப்படையிலான தலைமைத்துவம், நடைமுறையில் உள்ள கொள்கைச் சிக்கல்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்தல், செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு தொடர்பான திறமைகளைக் கொண்ட எதிர்கால வழிநடத்துநர்களை உருவாக்குதல், உத்திசார் முடிவெடுப்பதில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப பயன்பாடுகள் ஆகியவை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்களாகும்" எனக் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: மெட்ராஸ் டூ ரோபர்.. BS Data Science மாணவர்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பா? சென்னை ஐஐடி முக்கிய ஒப்பந்தம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.