ETV Bharat / state

கோவை மஞ்சபள்ள ஆற்று ஓடை தடுப்பணையில் செத்து மிதக்கும் மீன்கள்.. அதிகாரிகள் ஆய்வு! - Fishes die Manjapalla river

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 17, 2024, 4:32 PM IST

Fishes die in Manjapalla river barrage: கோவை அருகே தடுப்பணையில் மீன்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து வருவாய்த்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

மஞ்ச பள்ள ஆற்று ஓடை தடுப்பணையில் செத்து மிதக்கும் மீன்கள் புகைப்படம்
மஞ்ச பள்ள ஆற்று ஓடை தடுப்பணையில் செத்து மிதக்கும் மீன்கள் புகைப்படம் (credits-ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்: மதுக்கரை நகராட்சிக்குட்பட்ட குரும்பபாளையம் பகுதியில் மஞ்ச பள்ள ஓடை அமைந்துள்ளது. மழைக் காலங்களில் இந்த ஓடையில் வரும் தண்ணீர், வாளையாறு பகுதி வழியாக கேரளாவிற்குச் செல்கிறது. இந்த மஞ்ச பள்ள ஆற்று ஓடை தடுப்பணையில் கட்டப்பட்டுள்ளதால், நீரானது குரும்பபாளையம் பகுதி விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் இந்த தடுப்பணை தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த இரு நாட்களாக இந்த தடுப்பணையில் ஆயிரக்கணக்கான மீன்கள் திடீரென செத்து மிதக்கின்றன. இதன் காரணமாக, அந்தப் பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. இந்நிலையில், அந்தப் பகுதியில் உள்ள தனியார் ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் காரணமாக மீன்கள் இறந்திருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறிப்பாக, மழை பெய்யும் போது மழைத் தண்ணீருடன் ஆலைக்கழிவு நீரையும் கலந்து விடுவதாகவும், இந்த முறையும் மழை பெய்த போது கழிவுநீர் கலந்து விடப்பட்டு இருப்பதாகவும், அதனால் மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இந்நிலையில், தடுப்பணையில் மீன்கள் இறந்தது குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகளும், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் இன்று நேரடியாக தடுப்பணையில் ஆய்வு மேற்கொண்டனர்.

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய டிவிஷனல் இன்ஜினியர் சந்திரசேகர் மற்றும் வருவாய் ஆய்வாளர் மகாலிங்கம் ஆகியோர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டதுடன், இரண்டு இடங்களில் இருந்து தண்ணீர் மாதிரியைச் சேகரித்தனர். பின்பு வழக்கமாக மழைக் காலங்களில் கழிவு நீருடன் மழை தண்ணீரும் சேர்ந்து ஓடையில் கலப்பதால், மீன்கள் உயிரிழக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆலையில் இருந்து ரசாயனக் கழிவுகள் கலந்ததால் மீன்கள் இறந்ததா அல்லது மழை நீரும், கழிவு நீரும் சேர்ந்ததால் மீன்கள் இறந்ததா என்பது குறித்து ஆய்வு முடிவுகள் கிடைத்த பின்னரே தெரியவரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், ஓடையில் செத்துக் கிடக்கும் மீன்களை அகற்றுவதற்கு நகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், இறந்த மீன்களை உடனடியாக அகற்றி ஓடை சுத்தம் செய்யப்படும் எனவும் மதுக்கரை நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க :முதலை கடித்து வண்டலூர் பூங்கா ஊழியர் படுகாயம்! எப்படி நடந்தது? - Crocodile Bit The Zoo Staff

கோயம்புத்தூர்: மதுக்கரை நகராட்சிக்குட்பட்ட குரும்பபாளையம் பகுதியில் மஞ்ச பள்ள ஓடை அமைந்துள்ளது. மழைக் காலங்களில் இந்த ஓடையில் வரும் தண்ணீர், வாளையாறு பகுதி வழியாக கேரளாவிற்குச் செல்கிறது. இந்த மஞ்ச பள்ள ஆற்று ஓடை தடுப்பணையில் கட்டப்பட்டுள்ளதால், நீரானது குரும்பபாளையம் பகுதி விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் இந்த தடுப்பணை தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த இரு நாட்களாக இந்த தடுப்பணையில் ஆயிரக்கணக்கான மீன்கள் திடீரென செத்து மிதக்கின்றன. இதன் காரணமாக, அந்தப் பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. இந்நிலையில், அந்தப் பகுதியில் உள்ள தனியார் ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் காரணமாக மீன்கள் இறந்திருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறிப்பாக, மழை பெய்யும் போது மழைத் தண்ணீருடன் ஆலைக்கழிவு நீரையும் கலந்து விடுவதாகவும், இந்த முறையும் மழை பெய்த போது கழிவுநீர் கலந்து விடப்பட்டு இருப்பதாகவும், அதனால் மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இந்நிலையில், தடுப்பணையில் மீன்கள் இறந்தது குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகளும், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் இன்று நேரடியாக தடுப்பணையில் ஆய்வு மேற்கொண்டனர்.

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய டிவிஷனல் இன்ஜினியர் சந்திரசேகர் மற்றும் வருவாய் ஆய்வாளர் மகாலிங்கம் ஆகியோர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டதுடன், இரண்டு இடங்களில் இருந்து தண்ணீர் மாதிரியைச் சேகரித்தனர். பின்பு வழக்கமாக மழைக் காலங்களில் கழிவு நீருடன் மழை தண்ணீரும் சேர்ந்து ஓடையில் கலப்பதால், மீன்கள் உயிரிழக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆலையில் இருந்து ரசாயனக் கழிவுகள் கலந்ததால் மீன்கள் இறந்ததா அல்லது மழை நீரும், கழிவு நீரும் சேர்ந்ததால் மீன்கள் இறந்ததா என்பது குறித்து ஆய்வு முடிவுகள் கிடைத்த பின்னரே தெரியவரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், ஓடையில் செத்துக் கிடக்கும் மீன்களை அகற்றுவதற்கு நகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், இறந்த மீன்களை உடனடியாக அகற்றி ஓடை சுத்தம் செய்யப்படும் எனவும் மதுக்கரை நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க :முதலை கடித்து வண்டலூர் பூங்கா ஊழியர் படுகாயம்! எப்படி நடந்தது? - Crocodile Bit The Zoo Staff

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.