ETV Bharat / state

"மகாராஜா படத்தில் கதை என்னுடையது" - விஜய்சேதுபதி படத்திற்கு எதிராக தயாரிப்பாளர் திடீர் புகார்! - maharaja story theft complaint

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 25, 2024, 2:07 PM IST

Updated : Jun 25, 2024, 2:32 PM IST

Maharaja story theft complaint: விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் திரையங்குகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் மகாராஜா கதை தன்னிடம் இருந்து திருடப்பட்டதாக பழனியை சேர்ந்த தயாரிப்பாளர் புகார் அளித்துள்ளார்.

தயாரிப்பாளர் மருதமுத்து செய்தியாளர் சந்திப்பு
தயாரிப்பாளர் மருதமுத்து செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

திண்டுக்கல்: பழனியைச் சேர்ந்தவர் நாகன் என்கிற மருதமுத்து, கந்தவேல் என்கிற திரைப்படத்தை தயாரித்து பல்வேறு காரணங்களால் வெளியிடாமல் வைத்துள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள மகாராஜா திரைப்படத்தின் கதை திருடப்பட்டது என்றும், தான் முறையாக பதிவு செய்து வைத்துள்ள கதையை திருடி படமாக்கி உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

தயாரிப்பாளர் மருதமுத்து செய்தியாளர் சந்திப்பு வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மருதமுத்து, "பழனி அருகே உள்ள மானூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ஒரு கதையை எழுதி என்னிடம் கூறினார். கதை நன்றாக இருந்ததால் அதனை 10 லட்சம் ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கினேன். அக்கதையை அத்தியாயம் ஒன்று என பெயரிட்டு 2020ஆம் ஆண்டே முறையாக பதிவு செய்து வைத்துள்ளேன். இந்நிலையில் அத்தியாயம் என்ற கதையை குறும்படமாக எடுத்து, அதனை எடிட்டிங் செய்வதற்காக சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் கொடுத்தேன்.

பின்பு அத்தியாயம் ஒன்று திரைக்கதையை திரைப்படமாக்க முடிவு செய்து, கடந்த ஆண்டு பிரபல திரைப்பட இயக்குநர் கே‌.எஸ்.ரவிக்குமார், நடிகர் சார்லி மற்றும் நடிகை ரக்ஷனா ஆகியோரிடம் கதையை கூறி, 5.5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பழனியில் படப்பிடிப்பு நடத்த நடவடிக்கை மேற்கொண்டதாகவும், படப்பிடிப்பு துவங்கிய நேரத்தில் பழனியில் கனமழை பெய்ததால், படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்ததாகவும் கூறினார்.

இதனிடையே விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா என்ற திரைப்படம் வெளியானது. அந்த படத்தை பார்த்த போது, தான் முறையாக பதிவு செய்திருந்த அத்தியாயம் ஒன்று திரைக்கதையை அப்படியே படமாக்கி உள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

இதுகுறித்து விசாரித்ததில் மகாராஜா திரைக்கதையை தயாரிப்பாளர் சங்கத்தில் முறையாக பதிவு செய்யவில்லை என்பது தெரியவந்தது. மேலும் தனது கதையை குறும்படமாக எடுத்து எடிட்டிங் செய்ய கொடுத்த இடத்தில் இருந்து கதையை திருடி இருக்க வாய்ப்பு உள்ளது என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் இயக்குநர்கள் பாக்யராஜ் மற்றும் பாரதிராஜா ஆகியோரிடம் புகார் தெரிவித்தும், இதுவரை தனக்கு சரியான நியாயம் கிடைக்கவில்லை. மேலும் தமிழ் திரையரகில் சிறு திரைப்பட தயாரிப்பாளர்கள் யாரும் பிழைக்க முடியாத நிலையில் தானும் ஒருவனாக மாறியுள்ளது வேதனையாக உள்ளது. இதன்மூலம் தனக்கு 2 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

எனவே தன்னுடைய புகாரை முறையாக விசாரித்து தனக்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்ய வேண்டும், இதுபோல் இனி சிறு திரைப்பட தயாரிப்பாளர் எவரும் பாதிக்கக் கூடாது. இந்த விவகாரம் குறித்து சட்ட நடவடிக்கை மேற்கொள்வேன்” என தெரிவித்துள்ளார்.

நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடித்து, திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படத்தின் கதை திருடப்பட்டது என்று தயாரிப்பாளர் ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சோனியா அகர்வால் நடிக்கும் 7ஜி - ரிலீஸ் தேதி அறிவிப்பு! - Sonia Agarwal movie 7G release date

திண்டுக்கல்: பழனியைச் சேர்ந்தவர் நாகன் என்கிற மருதமுத்து, கந்தவேல் என்கிற திரைப்படத்தை தயாரித்து பல்வேறு காரணங்களால் வெளியிடாமல் வைத்துள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள மகாராஜா திரைப்படத்தின் கதை திருடப்பட்டது என்றும், தான் முறையாக பதிவு செய்து வைத்துள்ள கதையை திருடி படமாக்கி உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

தயாரிப்பாளர் மருதமுத்து செய்தியாளர் சந்திப்பு வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மருதமுத்து, "பழனி அருகே உள்ள மானூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ஒரு கதையை எழுதி என்னிடம் கூறினார். கதை நன்றாக இருந்ததால் அதனை 10 லட்சம் ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கினேன். அக்கதையை அத்தியாயம் ஒன்று என பெயரிட்டு 2020ஆம் ஆண்டே முறையாக பதிவு செய்து வைத்துள்ளேன். இந்நிலையில் அத்தியாயம் என்ற கதையை குறும்படமாக எடுத்து, அதனை எடிட்டிங் செய்வதற்காக சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் கொடுத்தேன்.

பின்பு அத்தியாயம் ஒன்று திரைக்கதையை திரைப்படமாக்க முடிவு செய்து, கடந்த ஆண்டு பிரபல திரைப்பட இயக்குநர் கே‌.எஸ்.ரவிக்குமார், நடிகர் சார்லி மற்றும் நடிகை ரக்ஷனா ஆகியோரிடம் கதையை கூறி, 5.5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பழனியில் படப்பிடிப்பு நடத்த நடவடிக்கை மேற்கொண்டதாகவும், படப்பிடிப்பு துவங்கிய நேரத்தில் பழனியில் கனமழை பெய்ததால், படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்ததாகவும் கூறினார்.

இதனிடையே விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா என்ற திரைப்படம் வெளியானது. அந்த படத்தை பார்த்த போது, தான் முறையாக பதிவு செய்திருந்த அத்தியாயம் ஒன்று திரைக்கதையை அப்படியே படமாக்கி உள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

இதுகுறித்து விசாரித்ததில் மகாராஜா திரைக்கதையை தயாரிப்பாளர் சங்கத்தில் முறையாக பதிவு செய்யவில்லை என்பது தெரியவந்தது. மேலும் தனது கதையை குறும்படமாக எடுத்து எடிட்டிங் செய்ய கொடுத்த இடத்தில் இருந்து கதையை திருடி இருக்க வாய்ப்பு உள்ளது என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் இயக்குநர்கள் பாக்யராஜ் மற்றும் பாரதிராஜா ஆகியோரிடம் புகார் தெரிவித்தும், இதுவரை தனக்கு சரியான நியாயம் கிடைக்கவில்லை. மேலும் தமிழ் திரையரகில் சிறு திரைப்பட தயாரிப்பாளர்கள் யாரும் பிழைக்க முடியாத நிலையில் தானும் ஒருவனாக மாறியுள்ளது வேதனையாக உள்ளது. இதன்மூலம் தனக்கு 2 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

எனவே தன்னுடைய புகாரை முறையாக விசாரித்து தனக்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்ய வேண்டும், இதுபோல் இனி சிறு திரைப்பட தயாரிப்பாளர் எவரும் பாதிக்கக் கூடாது. இந்த விவகாரம் குறித்து சட்ட நடவடிக்கை மேற்கொள்வேன்” என தெரிவித்துள்ளார்.

நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடித்து, திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படத்தின் கதை திருடப்பட்டது என்று தயாரிப்பாளர் ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சோனியா அகர்வால் நடிக்கும் 7ஜி - ரிலீஸ் தேதி அறிவிப்பு! - Sonia Agarwal movie 7G release date

Last Updated : Jun 25, 2024, 2:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.