ETV Bharat / state

“பொது அமைதி சீர்குலைக்கப்படுவது முளையிலேயே கிள்ளி எறியப்படும்” - காவல்துறை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்!

காவல்துறை மாநாட்டில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், இணையவழி குற்றங்கள் போன்ற தீவிர குற்றச் சம்பவங்களில் இருந்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை கிண்டியில் 2024ஆம் ஆண்டிற்கான தென் மாநிலங்களின் காவல்துறை இயக்குநர்கள் ஒருங்கிணைப்பு மாநாட்டை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்து காவல்துறை இயக்குனர்களுக்கு நினைவு சின்னத்தை வழங்கினார். இதன் பின்னர் இந்நிகழ்வில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், “சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு நீர் மேலாண்மை போன்ற பல்வேறு அடிப்படையில் தென்மாநிலங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நாம் செயல்பட்டு வருகிறோம்.

பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: அந்தவகையில் மிகமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளான போதைப்பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், மாநிலங்களுக்கிடையேயான குற்றச்செயல்கள், இணையவழி குற்றங்கள் போன்ற தீவிர குற்றச்சம்பவங்களில் இருந்து, நம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற பொதுவான குறிக்கோளை அடைவதற்கு இங்கு நாம் கூடியிருக்கிறோம். இத்தகைய குற்றங்களை எதிர்கொள்வதில் தமிழ்நாடு காவல்துறை பல்வேறு முன்னற்றங்களை அடைந்திருக்கிறது.

காவல்துறை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்
காவல்துறை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் (Credits - ETV Bharat Tamil Nadu)

கஞ்சா பயிரிடுவது தடுக்கப்பட்டுள்ளது: தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு காவல்துறையும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. போதைப்பொருள் விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தமிழ்நாடு காவல்துறையின் தொடர் முயற்சிகளின் பலனாக, மாநிலத்தில் கஞ்சா பயிரிடப்படுவது தடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு வியூகங்களை நாங்கள் கையாண்டு வருகிறோம்.

போதை இல்லா மாநிலம்: ஒன்று, கைது செய்வதோடு மட்டுமின்றி சொத்து பறிமுதல், வங்கி கணக்கு முடக்கம், கடைகளுக்கு சீல், கடுமையான அபராதம், கடும் சிறைத்தண்டனை பெற்றுத்தருவது உள்ளிட்ட தீவிர சட்ட அமலாக்கம் மூலமாக போதைப்பொருள்களை ஒழிப்பது, இரண்டாவது, போதைப்பொருட்களின் தீமைகளை மாணவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வது, கல்வி நிலையங்கள் அருகில் போதைப் பொருள் விற்பனையைத் தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் இவை மிக நல்ல பலன்களை கொடுத்திருக்கிறது.

உயர் அதிகாரிகளுடன் நடத்தப்படும் தொடர் ஆய்வுக் கூட்டங்கள் மூலம் தமிழ்நாட்டை போதைப்பொருட்கள் இல்லாத மாநிலமாக உருவாக்கும் சரியான பாதையில் செல்வது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. போதைப்பொருள் குற்றவாளிகளின் மீது பொருளாதார நடவடிக்கைகள் எடுப்பதில் தமிழ்நாடு காவல்துறை முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. இதன் மூலம் குற்றவாளிகளின் பொருளாதார பலம் தகர்க்கப்பட்டிருக்கிறது.

ஏ.டி.எம். கும்பல் கைது: ஆனாலும், போதைப்பொருள் குற்றவாளிகளின் தொடர்பு மற்றும் அவர்களது சொத்துகள் பல மாநிலங்களில் பரவி கிடக்கிறது. போதைப் பொருட்களை ஒழிக்க, ஒன்றிணைந்த முயற்சிகள் தேவைப்படுகிறது என்பதால்தான், நாம் எல்லாம் இன்றைக்கு ஒன்று கூடியிருக்கிறோம். குற்றவாளிகளை கைது செய்வதற்கும், விசாரணை மேற்கொள்ளவும், உங்கள் மாநிலத்திற்கு வருகை தரும் தமிழ்நாடு காவல்துறையினருக்கு உங்கள் ஒத்துழைப்பு மிகவும் தேவை.

அதை வழங்குமாறு நான் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். குறிப்பாக, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் தமிழ்நாட்டிற்குள் வருவதை தடுக்க, தமிழ்நாடு காவல்துறையினரும், அண்டை மாநில காவல்துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சமீபத்தில், கேரள காவல்துறையினர் கொடுத்த தகவலை கொண்டு ஏ.டி.எம். பணத்தை கொள்ளையடிக்கும் கொடுங்கும்பலை தமிழ்நாடு காவல்துறையினர் நாமக்கல் மாவட்டத்தில் வைத்து வெற்றிகரமாக கைது செய்தார்கள்.

போலி மதுபானம் தயாரிக்கும் ஆலை மூடல்: இவர்கள் கேரளாவில் வெவ்வேறு இடங்களில் ஏ.டி.எம் கொள்ளைச் சம்பவத்தை நடத்திக்கொண்டு, திருச்சூரில் இருந்து தப்பித்திருக்கிறார்கள். இந்த கும்பல் பல்வேறு மாநிலங்களிலும் இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்ததது. தமிழ்நாடு காவல்துறை உடனடியாக சம்பந்தப்பட்ட மாநிலங்களை உஷார்படுத்தியது. இந்த பாராட்டுக்குரிய பணியை இணைந்து நிறைவேற்றிய தமிழ்நாடு மற்றும் கேரள காவல்துறையினரை இந்த நேரத்தில் வாழ்த்துகிறேன்.

இது போன்ற ஒருங்கிணைப்புகளை நாம் அனைவருக்குள்ளும் முன்னெடுப்பதுதான் இதுபோன்ற கூட்டங்களின் நோக்கம். அண்மையில், பிற மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் எரிசாராயத்தை வைத்து, சட்டவிரோதமாக போலி மதுபானம் தயாரிக்கும் ஆலையை தமிழ்நாடு காவல்துறையினர் கண்டுபிடித்தார்கள். இந்தச் சட்டவிரோத எரிசாராய கும்பல்கள் பெரும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது.

இதையும் படிங்க: திமுகவில் துணைக்கு மட்டும்தான் துரைமுருகன்.. துணை முதல்வராக முடியாது.. - ஆர்.பி. உதயகுமார் பொளேர்!

தமிழகத்தில் உடனுக்குடன் நடவடிக்கை: இத்தகைய தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மாநிலத்துக்குள் நுழைவதை தடுக்க, மாநில எல்லைகளில் கடுமையான சோதனைகளை மேற்கொள்ள வேண்டியது அவசரத் தேவையாக இருக்கிறது. ANPR (தானியங்கி வாகன எண் கண்டறியும்) கேமராக்கள், அதிநவீன ஸ்கேனர்கள் போன்ற நவீன தொழில்நுட்பங்களை எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் பயன்படுத்துவது மூலம் தடைசெய்யப்பட்ட பொருட்கள், ஏற்கெனவே, குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட வாகனங்கள் மற்றும் குற்றவாளிகளை கண்டறியும் திறனை நாம் மேம்படுத்த இயலும்.

இணையவழி குற்றம் என்பது எந்தவித எல்லையும் இல்லாமல், சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, பெருகிவரக்கூடிய மிகவும் சிக்கலான ஒரு பிரச்சினை. புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதில் நாட்டிலேயே தமிழ்நாடு இன்றைக்கு சிறப்பான வகையில் முதன்மை மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலும், இணையவழி குற்றவாளிகளை பிடிக்க ஒரு மாநிலத்தின் காவல்துறை மற்றொரு மாநிலத்துக்குச் செல்லவேண்டிய நிலையில், அவர்கள் பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

சைபர் அடிமைத்தனம்: ஆகவே, இணையவழிக் குற்றங்களை தடுப்பதிலும் நாம் இணைந்து செயல்படவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். 2023ஆம் ஆண்டில் மட்டும், 1 ஆயிரத்து 390 வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள், பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும், பலர் தமிழ்நாட்டுக்கு வெளியில் கைது செய்யப்பட்டிருப்பதும் நமக்குள்ளே ஒருங்கிணைந்து செயல்படவேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. படித்து முடித்துவிட்டு, வெளிநாட்டில் வேலை தேடும் இளைஞர்களை குறிவைத்து, அவர்களை அடிமைகளாக, கணினிசார் குற்றங்களில் ஈடுபடுத்தும் Cyber Slavery பிரச்சினை தற்போது பெரிய அளவில் உருவெடுத்திருக்கிறது.

சில தென்கிழக்கு நாடுகளை அடிப்படையாக வைத்து செயல்படும் குற்றவாளிகளின் பிடியில் சிக்கி, நம்முடைய இளைஞர்கள் பலர் மனரீதியாவும், உடல்ரீதியாவும் துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். இதுபோன்று வளர்ந்துவரும் அச்சுறுத்தல்களை போக்குவதற்கு நமக்குள்ளே இருக்கின்ற ஒருங்கிணைப்பை பலப்படுத்தவேண்டும். தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை கையாளுதல் உள்ளிட்ட உள்நாட்டுப் பாதுகாப்பின் முக்கியக்கூறுகள் குறித்து விவாதிக்க, இந்த மன்றம் வழிவகுக்கிறது.

தமிழ்நாடு அமைதியான மாநிலம்: எந்தவித தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதமாக இருந்தாலும், அவற்றைக் கட்டுப்படுத்தி தடுக்க, முழு ஒத்துழைப்பையும், ஒருங்கிணைப்பையும் பலப்படுத்துமாறு இங்கே கூடியிருக்கின்ற மூத்த காவல்துறை அதிகாரிகளை நான் வலியுறுத்துகிறேன். இன்றைக்கு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு சமூகவலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள் பெரும் பிரச்சினையாக இருந்து கொண்டிருக்கிறது. அவற்றின் மூலம் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களை நாம் பார்க்க முடிகிறது.

ஏன், தமிழ்நாட்டிலேயே அப்படியொரு முயற்சியை மேற்கொண்டு, பொது அமைதியை சீர்குலைக்க முயன்றதை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பல மாநிலங்களில் இருந்து வதந்தி பரப்பியவர்களை தேடிக் கண்டுபிடித்து, அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்தது என்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். தமிழ்நாடு அமைதியான மாநிலம்.

அங்கே அமைதியின்மையை உருவாக்க ஏதாவது பரப்புவீர்களா என யூடியூபர் ஒருவரது வழக்கில் சமூகவலைதளங்களின் பாதிப்பு பற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடுமையாக சாடியதை இந்தநேரத்தில் குறிப்பிட விரும்புகிறேன். ஆகவே, சமூக வலைதளங்களில் வரும் வதந்திகள் பற்றியும் நாம் மிகுந்த கண்காணிப்புடன் இருந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு நம் மாநில மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். அதற்கான ஆலோசனைகளையும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்த மாநாட்டை முன்னின்று நடத்தும் தமிழ்நாடு காவல்துறையானது, அனைத்து தளங்களிலும் சட்ட அமலாக்கத்திற்கு, குறிப்பாக போதைப்பொருட்கள், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், மாநிலங்களுக்கிடையே செயல்படும் குற்றவாளி கும்பல்கள் மற்றும் கணினிசார் குற்றங்கள், சமூக வலைதள வதந்திகள் ஆகியவற்றின் மீதான தீவிர சட்ட நடவடிக்கைக்கு மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை உறுதிபடுத்துகின்ற வகையில், மற்ற மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும் பொறுப்பை ஏற்றிருக்கிறது.

அத்தகைய பலமான ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் பரிமாற்றம் மூலம் எத்தகைய சட்டம் ஒழுங்கு, பொது அமைதி, உள்நாட்டு பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தையும் சமாளித்து, நம் குடிமக்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய நாம் கடமையாற்றுவோம். ஒருங்கிணைந்து செயலாற்றுவோம். போதைப்பொருட்களாக இருந்தாலும், குற்றங்களாக இருந்தாலும், இணையவழி குற்றங்களாக இருந்தாலும், அதை தடுக்க நம்முடைய ஒருங்கிணைந்த முயற்சிதான் தேவைப்படுகிறது.

இவ்வாறு நாம் சேர்ந்து பணியாற்றுவதன் மூலம், நம்முடைய குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களை காப்பதோடு, அனைவருக்கும் ஒரு பாதுகாப்பான எதிர்காலத்தையும், நம் மாநிலங்களின் முன்னேற்றத்தையும் உறுதி செய்யலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். இந்நிகழ்வில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், காவல்துறை உயர் அதிகாரிகளான தமிழ்நாடு மாநிலத்தின் சங்கர் ஜிவால், கர்நாடகா மாநிலத்தின் அலோக் மோகன், கேரள மாநிலத்தின் சேக் தர்வேஷ் சாகேப், புதுச்சேரி மாநிலத்தின் ஷாலினி சிங், ஆந்திர மாநிலத்தின் துவாரகா திருமல ராவ் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

சென்னை: சென்னை கிண்டியில் 2024ஆம் ஆண்டிற்கான தென் மாநிலங்களின் காவல்துறை இயக்குநர்கள் ஒருங்கிணைப்பு மாநாட்டை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்து காவல்துறை இயக்குனர்களுக்கு நினைவு சின்னத்தை வழங்கினார். இதன் பின்னர் இந்நிகழ்வில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், “சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு நீர் மேலாண்மை போன்ற பல்வேறு அடிப்படையில் தென்மாநிலங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நாம் செயல்பட்டு வருகிறோம்.

பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: அந்தவகையில் மிகமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளான போதைப்பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், மாநிலங்களுக்கிடையேயான குற்றச்செயல்கள், இணையவழி குற்றங்கள் போன்ற தீவிர குற்றச்சம்பவங்களில் இருந்து, நம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற பொதுவான குறிக்கோளை அடைவதற்கு இங்கு நாம் கூடியிருக்கிறோம். இத்தகைய குற்றங்களை எதிர்கொள்வதில் தமிழ்நாடு காவல்துறை பல்வேறு முன்னற்றங்களை அடைந்திருக்கிறது.

காவல்துறை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்
காவல்துறை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் (Credits - ETV Bharat Tamil Nadu)

கஞ்சா பயிரிடுவது தடுக்கப்பட்டுள்ளது: தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு காவல்துறையும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. போதைப்பொருள் விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தமிழ்நாடு காவல்துறையின் தொடர் முயற்சிகளின் பலனாக, மாநிலத்தில் கஞ்சா பயிரிடப்படுவது தடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு வியூகங்களை நாங்கள் கையாண்டு வருகிறோம்.

போதை இல்லா மாநிலம்: ஒன்று, கைது செய்வதோடு மட்டுமின்றி சொத்து பறிமுதல், வங்கி கணக்கு முடக்கம், கடைகளுக்கு சீல், கடுமையான அபராதம், கடும் சிறைத்தண்டனை பெற்றுத்தருவது உள்ளிட்ட தீவிர சட்ட அமலாக்கம் மூலமாக போதைப்பொருள்களை ஒழிப்பது, இரண்டாவது, போதைப்பொருட்களின் தீமைகளை மாணவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வது, கல்வி நிலையங்கள் அருகில் போதைப் பொருள் விற்பனையைத் தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் இவை மிக நல்ல பலன்களை கொடுத்திருக்கிறது.

உயர் அதிகாரிகளுடன் நடத்தப்படும் தொடர் ஆய்வுக் கூட்டங்கள் மூலம் தமிழ்நாட்டை போதைப்பொருட்கள் இல்லாத மாநிலமாக உருவாக்கும் சரியான பாதையில் செல்வது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. போதைப்பொருள் குற்றவாளிகளின் மீது பொருளாதார நடவடிக்கைகள் எடுப்பதில் தமிழ்நாடு காவல்துறை முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. இதன் மூலம் குற்றவாளிகளின் பொருளாதார பலம் தகர்க்கப்பட்டிருக்கிறது.

ஏ.டி.எம். கும்பல் கைது: ஆனாலும், போதைப்பொருள் குற்றவாளிகளின் தொடர்பு மற்றும் அவர்களது சொத்துகள் பல மாநிலங்களில் பரவி கிடக்கிறது. போதைப் பொருட்களை ஒழிக்க, ஒன்றிணைந்த முயற்சிகள் தேவைப்படுகிறது என்பதால்தான், நாம் எல்லாம் இன்றைக்கு ஒன்று கூடியிருக்கிறோம். குற்றவாளிகளை கைது செய்வதற்கும், விசாரணை மேற்கொள்ளவும், உங்கள் மாநிலத்திற்கு வருகை தரும் தமிழ்நாடு காவல்துறையினருக்கு உங்கள் ஒத்துழைப்பு மிகவும் தேவை.

அதை வழங்குமாறு நான் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். குறிப்பாக, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் தமிழ்நாட்டிற்குள் வருவதை தடுக்க, தமிழ்நாடு காவல்துறையினரும், அண்டை மாநில காவல்துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சமீபத்தில், கேரள காவல்துறையினர் கொடுத்த தகவலை கொண்டு ஏ.டி.எம். பணத்தை கொள்ளையடிக்கும் கொடுங்கும்பலை தமிழ்நாடு காவல்துறையினர் நாமக்கல் மாவட்டத்தில் வைத்து வெற்றிகரமாக கைது செய்தார்கள்.

போலி மதுபானம் தயாரிக்கும் ஆலை மூடல்: இவர்கள் கேரளாவில் வெவ்வேறு இடங்களில் ஏ.டி.எம் கொள்ளைச் சம்பவத்தை நடத்திக்கொண்டு, திருச்சூரில் இருந்து தப்பித்திருக்கிறார்கள். இந்த கும்பல் பல்வேறு மாநிலங்களிலும் இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்ததது. தமிழ்நாடு காவல்துறை உடனடியாக சம்பந்தப்பட்ட மாநிலங்களை உஷார்படுத்தியது. இந்த பாராட்டுக்குரிய பணியை இணைந்து நிறைவேற்றிய தமிழ்நாடு மற்றும் கேரள காவல்துறையினரை இந்த நேரத்தில் வாழ்த்துகிறேன்.

இது போன்ற ஒருங்கிணைப்புகளை நாம் அனைவருக்குள்ளும் முன்னெடுப்பதுதான் இதுபோன்ற கூட்டங்களின் நோக்கம். அண்மையில், பிற மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் எரிசாராயத்தை வைத்து, சட்டவிரோதமாக போலி மதுபானம் தயாரிக்கும் ஆலையை தமிழ்நாடு காவல்துறையினர் கண்டுபிடித்தார்கள். இந்தச் சட்டவிரோத எரிசாராய கும்பல்கள் பெரும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது.

இதையும் படிங்க: திமுகவில் துணைக்கு மட்டும்தான் துரைமுருகன்.. துணை முதல்வராக முடியாது.. - ஆர்.பி. உதயகுமார் பொளேர்!

தமிழகத்தில் உடனுக்குடன் நடவடிக்கை: இத்தகைய தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மாநிலத்துக்குள் நுழைவதை தடுக்க, மாநில எல்லைகளில் கடுமையான சோதனைகளை மேற்கொள்ள வேண்டியது அவசரத் தேவையாக இருக்கிறது. ANPR (தானியங்கி வாகன எண் கண்டறியும்) கேமராக்கள், அதிநவீன ஸ்கேனர்கள் போன்ற நவீன தொழில்நுட்பங்களை எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் பயன்படுத்துவது மூலம் தடைசெய்யப்பட்ட பொருட்கள், ஏற்கெனவே, குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட வாகனங்கள் மற்றும் குற்றவாளிகளை கண்டறியும் திறனை நாம் மேம்படுத்த இயலும்.

இணையவழி குற்றம் என்பது எந்தவித எல்லையும் இல்லாமல், சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, பெருகிவரக்கூடிய மிகவும் சிக்கலான ஒரு பிரச்சினை. புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதில் நாட்டிலேயே தமிழ்நாடு இன்றைக்கு சிறப்பான வகையில் முதன்மை மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலும், இணையவழி குற்றவாளிகளை பிடிக்க ஒரு மாநிலத்தின் காவல்துறை மற்றொரு மாநிலத்துக்குச் செல்லவேண்டிய நிலையில், அவர்கள் பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

சைபர் அடிமைத்தனம்: ஆகவே, இணையவழிக் குற்றங்களை தடுப்பதிலும் நாம் இணைந்து செயல்படவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். 2023ஆம் ஆண்டில் மட்டும், 1 ஆயிரத்து 390 வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள், பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும், பலர் தமிழ்நாட்டுக்கு வெளியில் கைது செய்யப்பட்டிருப்பதும் நமக்குள்ளே ஒருங்கிணைந்து செயல்படவேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. படித்து முடித்துவிட்டு, வெளிநாட்டில் வேலை தேடும் இளைஞர்களை குறிவைத்து, அவர்களை அடிமைகளாக, கணினிசார் குற்றங்களில் ஈடுபடுத்தும் Cyber Slavery பிரச்சினை தற்போது பெரிய அளவில் உருவெடுத்திருக்கிறது.

சில தென்கிழக்கு நாடுகளை அடிப்படையாக வைத்து செயல்படும் குற்றவாளிகளின் பிடியில் சிக்கி, நம்முடைய இளைஞர்கள் பலர் மனரீதியாவும், உடல்ரீதியாவும் துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். இதுபோன்று வளர்ந்துவரும் அச்சுறுத்தல்களை போக்குவதற்கு நமக்குள்ளே இருக்கின்ற ஒருங்கிணைப்பை பலப்படுத்தவேண்டும். தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை கையாளுதல் உள்ளிட்ட உள்நாட்டுப் பாதுகாப்பின் முக்கியக்கூறுகள் குறித்து விவாதிக்க, இந்த மன்றம் வழிவகுக்கிறது.

தமிழ்நாடு அமைதியான மாநிலம்: எந்தவித தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதமாக இருந்தாலும், அவற்றைக் கட்டுப்படுத்தி தடுக்க, முழு ஒத்துழைப்பையும், ஒருங்கிணைப்பையும் பலப்படுத்துமாறு இங்கே கூடியிருக்கின்ற மூத்த காவல்துறை அதிகாரிகளை நான் வலியுறுத்துகிறேன். இன்றைக்கு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு சமூகவலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள் பெரும் பிரச்சினையாக இருந்து கொண்டிருக்கிறது. அவற்றின் மூலம் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களை நாம் பார்க்க முடிகிறது.

ஏன், தமிழ்நாட்டிலேயே அப்படியொரு முயற்சியை மேற்கொண்டு, பொது அமைதியை சீர்குலைக்க முயன்றதை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பல மாநிலங்களில் இருந்து வதந்தி பரப்பியவர்களை தேடிக் கண்டுபிடித்து, அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்தது என்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். தமிழ்நாடு அமைதியான மாநிலம்.

அங்கே அமைதியின்மையை உருவாக்க ஏதாவது பரப்புவீர்களா என யூடியூபர் ஒருவரது வழக்கில் சமூகவலைதளங்களின் பாதிப்பு பற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடுமையாக சாடியதை இந்தநேரத்தில் குறிப்பிட விரும்புகிறேன். ஆகவே, சமூக வலைதளங்களில் வரும் வதந்திகள் பற்றியும் நாம் மிகுந்த கண்காணிப்புடன் இருந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு நம் மாநில மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். அதற்கான ஆலோசனைகளையும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்த மாநாட்டை முன்னின்று நடத்தும் தமிழ்நாடு காவல்துறையானது, அனைத்து தளங்களிலும் சட்ட அமலாக்கத்திற்கு, குறிப்பாக போதைப்பொருட்கள், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், மாநிலங்களுக்கிடையே செயல்படும் குற்றவாளி கும்பல்கள் மற்றும் கணினிசார் குற்றங்கள், சமூக வலைதள வதந்திகள் ஆகியவற்றின் மீதான தீவிர சட்ட நடவடிக்கைக்கு மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை உறுதிபடுத்துகின்ற வகையில், மற்ற மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும் பொறுப்பை ஏற்றிருக்கிறது.

அத்தகைய பலமான ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் பரிமாற்றம் மூலம் எத்தகைய சட்டம் ஒழுங்கு, பொது அமைதி, உள்நாட்டு பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தையும் சமாளித்து, நம் குடிமக்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய நாம் கடமையாற்றுவோம். ஒருங்கிணைந்து செயலாற்றுவோம். போதைப்பொருட்களாக இருந்தாலும், குற்றங்களாக இருந்தாலும், இணையவழி குற்றங்களாக இருந்தாலும், அதை தடுக்க நம்முடைய ஒருங்கிணைந்த முயற்சிதான் தேவைப்படுகிறது.

இவ்வாறு நாம் சேர்ந்து பணியாற்றுவதன் மூலம், நம்முடைய குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களை காப்பதோடு, அனைவருக்கும் ஒரு பாதுகாப்பான எதிர்காலத்தையும், நம் மாநிலங்களின் முன்னேற்றத்தையும் உறுதி செய்யலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். இந்நிகழ்வில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், காவல்துறை உயர் அதிகாரிகளான தமிழ்நாடு மாநிலத்தின் சங்கர் ஜிவால், கர்நாடகா மாநிலத்தின் அலோக் மோகன், கேரள மாநிலத்தின் சேக் தர்வேஷ் சாகேப், புதுச்சேரி மாநிலத்தின் ஷாலினி சிங், ஆந்திர மாநிலத்தின் துவாரகா திருமல ராவ் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.