ETV Bharat / state

மைவி3 ஆட்ஸ் நிறுவன சக்தி ஆனந்தன் ஜாமீன் மனு தள்ளுபடி! - Myv3 Ads sakthi anandhan

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 19, 2024, 6:40 PM IST

Myv3 Ads: மைவி3 ஆட்ஸ் செயலி நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சக்தி ஆனந்தன்
சக்தி ஆனந்தன் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: மைவி3 ஆட்ஸ் செயலியில் வீடியோ பார்த்தால் ரூ.5 முதல் ரூ.1,500 வரை வரும் எனக் கூறி வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்ததாக, மைவி3 ஆட்ஸ் நிறுவனம் மீது கோவை சைபர் க்ரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் சென்னை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், செயலி நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், சென்னை நிதிநிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சக்தி ஆனந்தன் சென்னை நிதிநிறுவன மோசடி வழக்ககளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன் கடந்த 5ஆம் தேதி சரணடைந்தார். அவரை ஜூலை 19ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி சக்தி ஆனந்தன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி மலர் வாலண்டினா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பிலும் வழக்கறிஞர்கள் ஆஜராகி தங்களது வாதங்களை முன் வைத்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சக்தி ஆனந்தனுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாக கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ் ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. சாதியப் பெயரோடு வந்த கடிதத்தால் பரபரப்பு! - EGMORE RAILWAY STATION BOMB THREAT

சென்னை: மைவி3 ஆட்ஸ் செயலியில் வீடியோ பார்த்தால் ரூ.5 முதல் ரூ.1,500 வரை வரும் எனக் கூறி வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்ததாக, மைவி3 ஆட்ஸ் நிறுவனம் மீது கோவை சைபர் க்ரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் சென்னை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், செயலி நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், சென்னை நிதிநிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சக்தி ஆனந்தன் சென்னை நிதிநிறுவன மோசடி வழக்ககளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன் கடந்த 5ஆம் தேதி சரணடைந்தார். அவரை ஜூலை 19ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி சக்தி ஆனந்தன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி மலர் வாலண்டினா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பிலும் வழக்கறிஞர்கள் ஆஜராகி தங்களது வாதங்களை முன் வைத்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சக்தி ஆனந்தனுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாக கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ் ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. சாதியப் பெயரோடு வந்த கடிதத்தால் பரபரப்பு! - EGMORE RAILWAY STATION BOMB THREAT

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.