ETV Bharat / state

புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திண்டுக்கல் வழக்கறிஞர்கள் போராட்டம்! - Dindigul Advocates Protest

Dindigul Advocates Protest: பாஜக அரசு கொண்டு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், இதனை கண்டித்து திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மூன்றாவது நாட்களாக தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 3, 2024, 5:55 PM IST

போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்
போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

திண்டுக்கல்: இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய மூன்று சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் சா சன்ஹிதா 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா அதினியம் 2023 ஆகிய 3 சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய சட்டங்கள் நாடு முழுவதும் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த சட்டங்கள் அமல்படுத்தியதை கண்டித்தும், இதனை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல்லில் இம்மூன்று சட்டங்களை அமல்படுத்திய ஜூலை 1ம் தேதியை வழக்கறிஞர்கள் கருப்பு நாளாக அனுசரித்தனர். மேலும் அன்றைய தினம் நீதிமன்ற வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரண்டாம் நாளான நேற்று நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மூன்றாம் தேதியான இன்று திண்டுக்கல் பழைய நீதிமன்ற வளாகத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பேரணியாக கிளம்பி, பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் வழியாக பேரணியாக சென்று திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேரணியில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், மூன்று சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்திய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி, கோஷங்கள் எழுப்பினர். இதன் காரணமாக நீதிமன்றத்தில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆர்பாட்டம் குறித்து வழக்கறிஞர் ஜெயபாலன் பேசுகையில், "திண்டுகல்லில் வழக்கறிஞர்களின் போராட்டம் மூன்று நாட்களாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த மூன்று மக்கள் விரோத சட்டங்கள், இந்தியாவில் இருக்கக்கூடாது என வழக்கறிஞர்கள் அத்தனை பேரும் இங்கு போராடி கொண்டிருக்கிறோம். மக்களையும், வழக்கறிஞர்களையும், நீதிபதிகளையும் பாதிக்கும் இந்த சட்டத்தை எதிர்த்து எங்களது போராட்டம் தொடரும். இந்த சட்டத்தை ஒழிக்கும் வரை எங்களது போராட்டம் ஓயாது” என்று ஜெயபாலன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: “25 ஆண்டுகள் கழித்தும் நீதி வழங்காவிட்டால் நீதிமன்றம் மீது அதிருப்தி ஏற்படும்” - உயர் நீதிமன்றக்கிளை கருத்து! - Madurai Bench of MHC

திண்டுக்கல்: இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய மூன்று சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் சா சன்ஹிதா 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா அதினியம் 2023 ஆகிய 3 சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய சட்டங்கள் நாடு முழுவதும் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த சட்டங்கள் அமல்படுத்தியதை கண்டித்தும், இதனை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல்லில் இம்மூன்று சட்டங்களை அமல்படுத்திய ஜூலை 1ம் தேதியை வழக்கறிஞர்கள் கருப்பு நாளாக அனுசரித்தனர். மேலும் அன்றைய தினம் நீதிமன்ற வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரண்டாம் நாளான நேற்று நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மூன்றாம் தேதியான இன்று திண்டுக்கல் பழைய நீதிமன்ற வளாகத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பேரணியாக கிளம்பி, பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் வழியாக பேரணியாக சென்று திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேரணியில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், மூன்று சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்திய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி, கோஷங்கள் எழுப்பினர். இதன் காரணமாக நீதிமன்றத்தில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆர்பாட்டம் குறித்து வழக்கறிஞர் ஜெயபாலன் பேசுகையில், "திண்டுகல்லில் வழக்கறிஞர்களின் போராட்டம் மூன்று நாட்களாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த மூன்று மக்கள் விரோத சட்டங்கள், இந்தியாவில் இருக்கக்கூடாது என வழக்கறிஞர்கள் அத்தனை பேரும் இங்கு போராடி கொண்டிருக்கிறோம். மக்களையும், வழக்கறிஞர்களையும், நீதிபதிகளையும் பாதிக்கும் இந்த சட்டத்தை எதிர்த்து எங்களது போராட்டம் தொடரும். இந்த சட்டத்தை ஒழிக்கும் வரை எங்களது போராட்டம் ஓயாது” என்று ஜெயபாலன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: “25 ஆண்டுகள் கழித்தும் நீதி வழங்காவிட்டால் நீதிமன்றம் மீது அதிருப்தி ஏற்படும்” - உயர் நீதிமன்றக்கிளை கருத்து! - Madurai Bench of MHC

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.