ETV Bharat / sports

ரூ.5 கோடி பணம், சொகுசு வீடு.. நிபந்தனை போடும் பாரீஸ் ஒலிம்பிக் வீரரின் தந்தை!

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற தனது மகனுக்கு 5 கோடி ரூபாய் பணம், புனேவில் சொந்த வீடு வழங்க வேண்டும் என அவரது தந்தை மாநில அரசிடம் முறையிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

author img

By ETV Bharat Sports Team

Published : 5 hours ago

Etv Bharat
Swapnil Kusalae (IANS Photo)

ஐதராபாத்: ஆகஸ்ட் மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் ஆடவர் துப்பாக்கிச் சுடுதலில், மூன்று நிலை பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசலே வெண்கலம் வென்றார். பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசலேவின் சொந்த மாநிலமான மகாராஷ்டிரா அரசு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்தது.

மேலும் அவர் மத்திய ரயில்வே பணியாளராக பதவி உயர்வு பெற்று சிறப்புப் பணி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற தனது மகனுக்கு மகாராஷ்டிர அரசு 2 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியதற்கு அவரது தந்தை சுரேஷ் குசலே அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய சுரேஷ் குசலே, ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற தனது மகன் ஸ்வப்னில் குசலேவுக்கு 5 கோடி ரூபாய் பரிசுத் தொகை மற்றும் புனே, பலேவாடி பகுதியில் உள்ள சத்திரபதி சிவாஜி மகராஷ் விளையாட்டு மையத்தின் அருகே சொகுதி வீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு அரியானா அரசு அதிக தொகை பரிசாக வழங்குவதாகவும் மகாராஷ்டிர மாநில அரசு மிகக் குறைவாக வழங்கி உள்ளதாக அவர் தெரிவித்தார். அரியானா அரசு பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு 5 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்குகிறது என்றார்.

மகாராஷ்டிர அரசின் புதிய கொள்கையின் படி ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றவருக்கு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும், அரசு ஏன் இது போன்ற அளவு கோலை உருவாக்கி உள்ளது என்றும் அவர் கூறினார். மேலும், கடந்த 72 ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டியில் மகராஷ்டிர அரசு தரப்பில் பதக்கம் வென்ற முதல் தனிநபர் ஸ்வப்னில் சுரேஷ் என்றும் அவர் தெரிவித்தார்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 5 தனிநபர்கள் பதக்கம் வென்ற நிலையில், அவர்களில் 4 பேர் அரியானாவை சேர்ந்தவர்கள், ஸ்வப்னில் சுரேஷ் மட்டுமே மகாராஷ்டிராவை சேர்ந்தவர் என்றார். மேலும் மகாராஷ்டிர மாநிலத்துடன் ஒப்பிடும் போது அரியானா மிகவும் சிறிய மாநிலம் என்ற நிலையில் அங்கு வீரர், வீராங்கனைகளுக்கு அதிகளவில் பரிசுத் தொகை வழங்கப்படுவதாக சுரேஷ் குசலே தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இரண்டு பேர் மட்டுமே இதுவரை பதக்கம் வென்று உள்ள நிலையில், தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு 5 கோடி ரூபாயும், வெள்ளி வென்றவர்களுக்கு 3 கோடி ரூபாயும், வெண்கலம் வென்றோருக்கு 2 கோடி ரூபாய் என அரசு எவ்வாறு பரிசுத் தொகையை நிர்ணயித்தது என்று சுரேஷ் குசலே கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: அரியானா சட்டப்பேரவை தேர்தலில் வினேஷ் போகத் முன்னிலை!

ஐதராபாத்: ஆகஸ்ட் மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் ஆடவர் துப்பாக்கிச் சுடுதலில், மூன்று நிலை பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசலே வெண்கலம் வென்றார். பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசலேவின் சொந்த மாநிலமான மகாராஷ்டிரா அரசு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்தது.

மேலும் அவர் மத்திய ரயில்வே பணியாளராக பதவி உயர்வு பெற்று சிறப்புப் பணி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற தனது மகனுக்கு மகாராஷ்டிர அரசு 2 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியதற்கு அவரது தந்தை சுரேஷ் குசலே அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய சுரேஷ் குசலே, ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற தனது மகன் ஸ்வப்னில் குசலேவுக்கு 5 கோடி ரூபாய் பரிசுத் தொகை மற்றும் புனே, பலேவாடி பகுதியில் உள்ள சத்திரபதி சிவாஜி மகராஷ் விளையாட்டு மையத்தின் அருகே சொகுதி வீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு அரியானா அரசு அதிக தொகை பரிசாக வழங்குவதாகவும் மகாராஷ்டிர மாநில அரசு மிகக் குறைவாக வழங்கி உள்ளதாக அவர் தெரிவித்தார். அரியானா அரசு பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு 5 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்குகிறது என்றார்.

மகாராஷ்டிர அரசின் புதிய கொள்கையின் படி ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றவருக்கு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும், அரசு ஏன் இது போன்ற அளவு கோலை உருவாக்கி உள்ளது என்றும் அவர் கூறினார். மேலும், கடந்த 72 ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டியில் மகராஷ்டிர அரசு தரப்பில் பதக்கம் வென்ற முதல் தனிநபர் ஸ்வப்னில் சுரேஷ் என்றும் அவர் தெரிவித்தார்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 5 தனிநபர்கள் பதக்கம் வென்ற நிலையில், அவர்களில் 4 பேர் அரியானாவை சேர்ந்தவர்கள், ஸ்வப்னில் சுரேஷ் மட்டுமே மகாராஷ்டிராவை சேர்ந்தவர் என்றார். மேலும் மகாராஷ்டிர மாநிலத்துடன் ஒப்பிடும் போது அரியானா மிகவும் சிறிய மாநிலம் என்ற நிலையில் அங்கு வீரர், வீராங்கனைகளுக்கு அதிகளவில் பரிசுத் தொகை வழங்கப்படுவதாக சுரேஷ் குசலே தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இரண்டு பேர் மட்டுமே இதுவரை பதக்கம் வென்று உள்ள நிலையில், தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு 5 கோடி ரூபாயும், வெள்ளி வென்றவர்களுக்கு 3 கோடி ரூபாயும், வெண்கலம் வென்றோருக்கு 2 கோடி ரூபாய் என அரசு எவ்வாறு பரிசுத் தொகையை நிர்ணயித்தது என்று சுரேஷ் குசலே கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: அரியானா சட்டப்பேரவை தேர்தலில் வினேஷ் போகத் முன்னிலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.