ETV Bharat / entertainment

திரைப்பட புரொமோஷனுக்கு வர மறுக்கும் நடிகர்கள்; புலம்பும் தயாரிப்பாளர்கள்! - Tamil actors movie promotions issue

author img

By ETV Bharat Entertainment Team

Published : Jul 31, 2024, 1:55 PM IST

Tamil actors movie promotions issue: தமிழ் சினிமாவில் சமீபகாலமாக வளர்ந்து வரும் நடிகர்கள் அவர்கள் நடித்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாதது குறித்து தயாரிப்பாளர்கள் வெளிப்படையாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

நடிகர் அசோக் செல்வன், நடிகை அபர்ணதி
நடிகர் அசோக் செல்வன், நடிகை அபர்ணதி (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழ் சினிமாவில் சமீபகாலமாக படத்தின் புரொமோஷனுக்கு நடிகர், நடிகைகள் வருவது குறைந்துள்ளதாகவும், நடிகர்கள் தயாரிப்பாளருக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்ற அதிருப்தி குரலும் ஓங்கி ஒலித்து வருகின்றது.

தயாரிப்பாளர் திருமலை (Video Credit - ETV Bharat Tamilnadu)

கோலிவுட்டில் உச்சநட்சத்திரமாக இருக்கும் நடிகர் அஜித் ஆரம்பத்தில் இருந்தே எந்தவித பட‌ புரமோஷனுக்கும் வருவதில்லை. அதேபோல் நயன்தாராவும் அவர் நடித்த படத்தின் புரொமோஷனுக்கு வருவதை குறைத்துக் கொண்டார். ஆனால் சமீபத்தில் விஷ்ணுவர்தன் இயக்கிய ‘நேசிப்பாயா’ படத்தின் விழாவில் கலந்து கொண்ட நயன்தாரா, 'நான் எந்த படத்திற்கும் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை, ஆனால் விஷ்ணுவர்தன் எனது நண்பர்; அவரது அழைப்பை மறுக்க முடியவில்லை' என்றார்.

இந்நிலையில், தற்போது வளர்ந்துவரும் நடிகர்‌, நடிகைகளும் புரொமோஷனுக்கு வருவதில்லை என்ற முடிவில் உள்ளதாக அதிருப்தி குரல்கள் ஒலிக்க துவங்கி உள்ளன. சமீபகாலமாக இந்த விவகாரம் கோலிவுட்டில் பெரிதாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு அப்படத்தின் ஹீரோ அசோக் செல்வன் வரவில்லை.

இதுகுறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் திருமலை மேடையிலேயே தனது ஆதங்கத்தை காட்டமாக வெளிப்படுத்தினார். அதேபோல் நேற்று நடைபெற்ற 'நாற்கரப்போர்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், அப்படத்தின் நாயகி அபர்ணதி கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, "புரொமோஷனுக்கு நாயகி அபர்ணதி தனியாக 3 லட்சம் ரூபாய் கேட்டார்" என்று மேடையிலேயே கூறினார்.

மேலும், "மேடையில் தன்னுடன் எந்த நடிகைகள் அமர வேண்டும் என்று நிபந்தனையிட்டார். இப்படி வளர்ந்து வரும் நடிகர்கள் ஏதோ தன்னால் தான் படம் ஓடுவது போல் புரொமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். தமிழ் சினிமா தற்போதுள்ள சூழலில் நடிகர்களின் இந்த செயல் அவர்களுக்கே ஆபத்தாக சென்று முடிய வாய்ப்புள்ளது" என்று சுரேஷ் காமாட்சி எச்சரித்தார்.

இந்த விவகாரம் குறித்து 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்' தயாரிப்பாளர் திருமலை பேசுகையில், "எமக்குத் தொழில் ரொமான்ஸ் படம் இந்தாண்டின் நல்ல படமாக இருக்கும். ஒரே குறை அசோக் செல்வன் இப்படத்தின் புரொமோஷனுக்கு வராதது தான். முழு பணமும் வாங்கிக் கொண்டு டப்பிங் முடித்துக் கொடுத்தார்.

புரொமோஷனுக்கு வர வேண்டும் என கேட்டபோது போன் எடுக்கவில்லை. அவரது படத்தின் புரொமோஷனுக்கு வர மறுக்கிறார். ரஜினிகாந்த் தொடங்கி தனுஷ் வரை தங்களது அனைத்து படத்தின் புரொமோஷனுக்கும் வந்து ஒத்துழைப்பு தருகின்றனர். ஆனால் வளர்ந்து வரும் நடிகரான அசோக் செல்வன் இப்படி செய்கிறார். சூரியின் கருடன் படத்திற்கு சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்டோரும் புரொமோஷனுக்கு வந்தனர். எமக்குத் தொழில் ரொமான்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆர்யா, விஜய் சேதுபதி ஆகியோர் வெளியிட்டனர்.

படத்திற்கு சம்பந்தம் இல்லாத அவர்களே இப்படத்திற்கு ஒத்துழைக்கும்போது கதாநாயகன் அசோக் செல்வன் எந்தளவிற்கு ஒத்துழைப்பு அளித்திருக்க வேண்டும். அவருக்கு சம்பளம் பாக்கி இல்லை. முழு பணமும் வாங்கிக் கொண்டு தான் நடித்தார். என் படத்திற்கு மட்டும் இல்லை, அனைத்து படங்களின் புரொமோஷனுக்கு வர வேண்டியது அந்தந்த நடிகர்களின் கடமை.

தற்போதைய சூழலில் தயாரிப்பாளர்களுக்கு மரியாதை இல்லை. நடிகர் கவின் ஒரு பட சம்பளத்தை கேட்டால் பயமாக உள்ளது. சினிமா வியாபாரம் சரியாக இல்லாத இந்நிலையில் நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கும்போது இக்கட்டான சூழலுக்கு தயாரிப்பாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்" என்று திருமலை கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: "தமிழ் சினிமாவுக்கு இப்படிப்பட்ட நடிகை தேவையில்லை" - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆதங்கம்! - Narkarappor trailer Release

சென்னை: தமிழ் சினிமாவில் சமீபகாலமாக படத்தின் புரொமோஷனுக்கு நடிகர், நடிகைகள் வருவது குறைந்துள்ளதாகவும், நடிகர்கள் தயாரிப்பாளருக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்ற அதிருப்தி குரலும் ஓங்கி ஒலித்து வருகின்றது.

தயாரிப்பாளர் திருமலை (Video Credit - ETV Bharat Tamilnadu)

கோலிவுட்டில் உச்சநட்சத்திரமாக இருக்கும் நடிகர் அஜித் ஆரம்பத்தில் இருந்தே எந்தவித பட‌ புரமோஷனுக்கும் வருவதில்லை. அதேபோல் நயன்தாராவும் அவர் நடித்த படத்தின் புரொமோஷனுக்கு வருவதை குறைத்துக் கொண்டார். ஆனால் சமீபத்தில் விஷ்ணுவர்தன் இயக்கிய ‘நேசிப்பாயா’ படத்தின் விழாவில் கலந்து கொண்ட நயன்தாரா, 'நான் எந்த படத்திற்கும் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை, ஆனால் விஷ்ணுவர்தன் எனது நண்பர்; அவரது அழைப்பை மறுக்க முடியவில்லை' என்றார்.

இந்நிலையில், தற்போது வளர்ந்துவரும் நடிகர்‌, நடிகைகளும் புரொமோஷனுக்கு வருவதில்லை என்ற முடிவில் உள்ளதாக அதிருப்தி குரல்கள் ஒலிக்க துவங்கி உள்ளன. சமீபகாலமாக இந்த விவகாரம் கோலிவுட்டில் பெரிதாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு அப்படத்தின் ஹீரோ அசோக் செல்வன் வரவில்லை.

இதுகுறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் திருமலை மேடையிலேயே தனது ஆதங்கத்தை காட்டமாக வெளிப்படுத்தினார். அதேபோல் நேற்று நடைபெற்ற 'நாற்கரப்போர்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், அப்படத்தின் நாயகி அபர்ணதி கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, "புரொமோஷனுக்கு நாயகி அபர்ணதி தனியாக 3 லட்சம் ரூபாய் கேட்டார்" என்று மேடையிலேயே கூறினார்.

மேலும், "மேடையில் தன்னுடன் எந்த நடிகைகள் அமர வேண்டும் என்று நிபந்தனையிட்டார். இப்படி வளர்ந்து வரும் நடிகர்கள் ஏதோ தன்னால் தான் படம் ஓடுவது போல் புரொமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். தமிழ் சினிமா தற்போதுள்ள சூழலில் நடிகர்களின் இந்த செயல் அவர்களுக்கே ஆபத்தாக சென்று முடிய வாய்ப்புள்ளது" என்று சுரேஷ் காமாட்சி எச்சரித்தார்.

இந்த விவகாரம் குறித்து 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்' தயாரிப்பாளர் திருமலை பேசுகையில், "எமக்குத் தொழில் ரொமான்ஸ் படம் இந்தாண்டின் நல்ல படமாக இருக்கும். ஒரே குறை அசோக் செல்வன் இப்படத்தின் புரொமோஷனுக்கு வராதது தான். முழு பணமும் வாங்கிக் கொண்டு டப்பிங் முடித்துக் கொடுத்தார்.

புரொமோஷனுக்கு வர வேண்டும் என கேட்டபோது போன் எடுக்கவில்லை. அவரது படத்தின் புரொமோஷனுக்கு வர மறுக்கிறார். ரஜினிகாந்த் தொடங்கி தனுஷ் வரை தங்களது அனைத்து படத்தின் புரொமோஷனுக்கும் வந்து ஒத்துழைப்பு தருகின்றனர். ஆனால் வளர்ந்து வரும் நடிகரான அசோக் செல்வன் இப்படி செய்கிறார். சூரியின் கருடன் படத்திற்கு சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்டோரும் புரொமோஷனுக்கு வந்தனர். எமக்குத் தொழில் ரொமான்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆர்யா, விஜய் சேதுபதி ஆகியோர் வெளியிட்டனர்.

படத்திற்கு சம்பந்தம் இல்லாத அவர்களே இப்படத்திற்கு ஒத்துழைக்கும்போது கதாநாயகன் அசோக் செல்வன் எந்தளவிற்கு ஒத்துழைப்பு அளித்திருக்க வேண்டும். அவருக்கு சம்பளம் பாக்கி இல்லை. முழு பணமும் வாங்கிக் கொண்டு தான் நடித்தார். என் படத்திற்கு மட்டும் இல்லை, அனைத்து படங்களின் புரொமோஷனுக்கு வர வேண்டியது அந்தந்த நடிகர்களின் கடமை.

தற்போதைய சூழலில் தயாரிப்பாளர்களுக்கு மரியாதை இல்லை. நடிகர் கவின் ஒரு பட சம்பளத்தை கேட்டால் பயமாக உள்ளது. சினிமா வியாபாரம் சரியாக இல்லாத இந்நிலையில் நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கும்போது இக்கட்டான சூழலுக்கு தயாரிப்பாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்" என்று திருமலை கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: "தமிழ் சினிமாவுக்கு இப்படிப்பட்ட நடிகை தேவையில்லை" - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆதங்கம்! - Narkarappor trailer Release

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.