ETV Bharat / bharat

மணிப்பூரில் இணைய சேவைக்கு தடை! - internet service ban in manipur

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 10, 2024, 7:47 PM IST

மணிப்பூரில் இரு குழுக்களுக்கிடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளதால் மாநிலம் முழுவதும் செப்டம்பர் 15 வரை இணைய சேவைக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (credit - ETV Bharat Tamil Nadu)

இம்பால்: மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்தி இரு குழுக்களிடைய கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வன்முறை சம்பவம் நாட்டையே உலுக்கியது. வன்முறையாளர்கள் மற்றொரு தரப்பை சார்ந்த இரு பெண்களை நிர்வாணமாக சிறைபிடித்து ஊர்வலமாக அழைத்து சென்றதாக வெளியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி காண்போரை பதைபதைக்க வைத்தது.

இதனால், மணிப்பூரில் உள்ள பதட்டமான பகுதிகளை பாதுகாப்பு படையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு குக்கி இனத்தை சேர்ந்தவர்கள் ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்கள் மீது ராக்கெட் வெடிகுண்டுகளை ஏவி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். மேலும், பயங்கரவாதிகள் அதிநவீன ஆயுதங்களை தாக்குதலுக்கு பயன்படுத்தி வருவதை அறிந்த காவல்துறை, கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த சூழலில், மணிப்பூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் செப்.,15 வரை இணைய சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது; பொது அவசரநிலை மற்றும் பொது பாதுகாப்பு விதிகள் 2017இன், 2 ஆவது விதியின் கீழ் இந்த அறிவிப்பானது வெளியிடப்படுகிறது.

இதையும் படிங்க: புற்றுநோயாளிகளுக்கு ஆறுதல் செய்தி.. இந்தியாவில் புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி 12% லிருந்து 5% ஆக குறைப்பு

மணிப்பூர் வன்முறை குறித்து வாட்சப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம். மெசேஜ் சேவைகள், மொபைல் சேவைகள் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்கள் மூலம் தவறான வதந்திகளை பரவுவதை தடுக்க இணைய தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு செப்டம்பர் 10 ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் செப்டம்பர் 15 பிற்பகல் 3 மணி வரை 5 நாட்களுக்கு அமலில் இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சில தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட ராக்கெட் மற்றும் ட்ரோன் குண்டு வெடிப்பு குறித்த விசாரணையில் கிடைத்துள்ள அனைத்து ஆதாரங்களும் மத்திய புலனாய்வு அமைப்பிடம் கொடுக்கப்படும். பல்வேறு ஆதாரங்களை சேகரித்து வருகிறோம் என்றும் அதுகுறித்து விசாரிக்கப்படும் எனவும் மணிப்பூர் காவல்துறை அதிகாரி ஐ.கே. முவியா தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamilnadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

இம்பால்: மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்தி இரு குழுக்களிடைய கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வன்முறை சம்பவம் நாட்டையே உலுக்கியது. வன்முறையாளர்கள் மற்றொரு தரப்பை சார்ந்த இரு பெண்களை நிர்வாணமாக சிறைபிடித்து ஊர்வலமாக அழைத்து சென்றதாக வெளியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி காண்போரை பதைபதைக்க வைத்தது.

இதனால், மணிப்பூரில் உள்ள பதட்டமான பகுதிகளை பாதுகாப்பு படையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு குக்கி இனத்தை சேர்ந்தவர்கள் ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்கள் மீது ராக்கெட் வெடிகுண்டுகளை ஏவி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். மேலும், பயங்கரவாதிகள் அதிநவீன ஆயுதங்களை தாக்குதலுக்கு பயன்படுத்தி வருவதை அறிந்த காவல்துறை, கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த சூழலில், மணிப்பூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் செப்.,15 வரை இணைய சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது; பொது அவசரநிலை மற்றும் பொது பாதுகாப்பு விதிகள் 2017இன், 2 ஆவது விதியின் கீழ் இந்த அறிவிப்பானது வெளியிடப்படுகிறது.

இதையும் படிங்க: புற்றுநோயாளிகளுக்கு ஆறுதல் செய்தி.. இந்தியாவில் புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி 12% லிருந்து 5% ஆக குறைப்பு

மணிப்பூர் வன்முறை குறித்து வாட்சப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம். மெசேஜ் சேவைகள், மொபைல் சேவைகள் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்கள் மூலம் தவறான வதந்திகளை பரவுவதை தடுக்க இணைய தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு செப்டம்பர் 10 ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் செப்டம்பர் 15 பிற்பகல் 3 மணி வரை 5 நாட்களுக்கு அமலில் இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சில தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட ராக்கெட் மற்றும் ட்ரோன் குண்டு வெடிப்பு குறித்த விசாரணையில் கிடைத்துள்ள அனைத்து ஆதாரங்களும் மத்திய புலனாய்வு அமைப்பிடம் கொடுக்கப்படும். பல்வேறு ஆதாரங்களை சேகரித்து வருகிறோம் என்றும் அதுகுறித்து விசாரிக்கப்படும் எனவும் மணிப்பூர் காவல்துறை அதிகாரி ஐ.கே. முவியா தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamilnadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.