திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மேல்கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள கங்கை அம்மன் திருக்கோயிலில் மார்கழி திருத்தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. நேற்று காலை 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனையும், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதையடுத்து, இன்று காலை அம்மனுக்கு சிறப்பு, அபிஷேக அலங்கார ஆராதனை; திருத்தேர் அலங்காரம், கலச ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் 'கோவிந்தா' என்ற கோஷத்துடன் தேரினை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். தேரானது மாட வீதி வழியாக வந்து ஆலயத்தை சென்றடைந்தது. பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக் கடன், சிதறு தேங்காய் உடைத்தல், திருத்தேர் மீது மிளகு உப்பு எறிந்து தங்களுடைய பிரார்த்தனையை நிறைவேற்றினர்.