தமிழ்நாடு

tamil nadu

உறையூர் அருகே இளைஞர் ஓட ஓட வெட்டிப் படுகொலை!

By

Published : Jul 16, 2019, 2:39 PM IST

திருச்சி: உறையூர் அருகே இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

youth-murder

திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட உறையூர் காசி செட்டி தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் சபரிகிரி வாசன் (21). இவர் அங்குள்ள அஜந்தா மெஸ் என்னும் உணவகத்தில் பணியாற்றிவருகிறார்.

நேற்றிரவு இவர் வேலை முடித்து வீட்டிற்குச் செல்லும்போது அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.

இளைஞர் ஓட ஓட வெட்டிப் படுகொலை

இது குறித்து தகவலறிந்த உறையூர் காவல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியன், காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த விஜயன் என்பவரது மகன் சரவணன் (எ) காளிமுத்துவுக்கும் இறந்த சபரிகிரி வாசனுக்கும் முன்விரோதம் இருந்துவந்ததாகத் தெரிகிறது.

இதன் காரணமாக சபரிகிரி வாசன் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details