கன்னியாகுமரி மாவட்டம், அழகியபாண்டிபுரம் எட்டாமடை பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியமுத்து. இவரது கணவர் ராஜரத்தினம் மறைவுக்குப் பிறகு கிடைத்த பணத்தை பாக்கியமுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு அழகிய பாண்டிபுரத்தில் உள்ள தேசிய வங்கியில் முதலீடு செய்ய சென்றுள்ளார்.
அப்போது, அங்கிருந்த ஒரு தனியார் நிதிநிறுவன ஊழியர் எங்கள் வங்கியில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறியுள்ளார். அவர்களின் பேச்சை நம்பிய பாக்கியமுத்து 13 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்தார். இதேபோல், அவர், அவரது மகன் செல்வக்குமார் ஆகியோர் நான்கு தவணைகளாக ரூபாய் 9 லட்ச ரூபாய் டெபாசிட் செய்தனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை பல தவணையாக தனியார் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தப்பட்டது. இந்தப் பணத்திற்கு உண்டான ரசீதுகளை நிதி நிறுவனத்தினர் கொடுத்துள்ளார். ஆனால், பாண்ட் எதுவும் கொடுக்கவில்லை. அதைக்கேட்ட போது தலைமை அலுவலகத்திலிருந்து வந்ததும் தருகிறோம் என்று கூறினர்.