தமிழ்நாட்டில் வரும் 2021ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒவ்வொரு கட்சிகயும் தங்களை தயார்ப்படுத்திக்கொண்டுவருகின்றன. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துவருகின்றனர். இதற்கிடையில், ரஜினிகாந்த் உடல்நிலை குறித்தும், அரசியல் நிலைப்பாடு குறித்தும் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை தன்னுடையது அல்ல என்றும், ஆனால், தன்னுடைய உடல்நிலை குறித்து வெளிவந்த தகவல்கள் அனைத்தும் உண்மை எனவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து விரைவில் முடிவெடுப்பதாகவும் அறிவித்திருந்தார். இதையடுத்து அவரது ரசிகர்கள் அவரது அரசியல் பிரவேசத்திற்கு ஆதரவு தெரிவித்து, பல்வேறு மாவட்டங்களில் சுவரொட்டிகளை ஒட்டி வந்தனர்.
மேலும், விஜயதசமி நாளன்று கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்த்த ரஜினி ரசிகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது.