ETV Bharat / state

ஆம்ஸ்ட்ராங் கொலை அரசியல் பழிவாங்கல் இல்லை; வேறு சிலர் மீது சந்தேகம் உள்ளது: சந்தீப் ராய் ரத்தோர் தகவல் - armstrong murder case

ARMSTRONG MURDER CASE: சென்னையில் நேற்று இரவு கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மரணத்திற்கு அரசியல் பழிவாங்கல் காரணமில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறியுள்ள சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், மேலும் சிலர் மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 6, 2024, 2:39 PM IST

Updated : Jul 6, 2024, 4:32 PM IST

சென்னை மாநகர காவல் ஆணையர் சத்தீப் ராய் ரத்தோர்
சென்னை மாநகர காவல் ஆணையர் சத்தீப் ராய் ரத்தோர் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பெரியமேட்டில் மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

அப்போது பேசிய அவர், "படுகொலை நடந்த மூன்று மணிநேரத்தில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆம்ஸ்ட்ராங் உடன் வீட்டின் வெளியில் நின்று பேசிக்கொண்டிருந்த நபர்கள் படுகாயத்துடன் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல் கட்ட விசாரணையின் படி, இந்த கொலை அரசியல் பழிவாங்கலுக்காக நடந்தது போல் தெரியவில்லை. எந்த வாகனத்தில் வந்தார்கள், எம்மாதிரியான ஆயுதங்களை பயன்படுத்தினார்கள் என்பது குறித்த விசாரணை நடைபெறுகிறது.

மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பொன்னை பாலுவின் அண்ணன் ஆற்காடு சுரேஷ் சிறையில் இருக்கும் போது என்ன நடந்தது என விசாரித்து, அதற்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இருகிறதா என்ற கோணத்தில் விசாரிக்க வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட பொன்னை பாலு மீது 4 வழக்கு, மணிவண்ணன் மீது 4 வழக்கு என ஒருவர் தவிர மற்றவர்கள் மீது வழக்குகள் உள்ளது.

இதுவரை பிடிப்பட்டவர்களில் தென்மாவட்ட குற்றவாளிகள் இல்லை. பாலு வேலூர் மாவட்டம், மணிவண்ணன் திருவள்ளுர், திருமலை பெரம்பலூர். கடந்த ஓராண்டு காலமாக ஆயிரத்து 192 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் போடப்படுள்ளது. இதனால் அனைத்து ரவுடிகள் மீதும் இப்போது தீவிர கண்காணிப்பு உள்ளது. தற்பொழுது கூடுதல் கண்காணிப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங்கிற்கு நேரடியாக மிரட்டல் இருந்ததாக தகவல் இல்லை. அவர் அரசியலில் உள்ளதால் இதுகுறித்து உளவுத்துறை கண்காணிப்பில் கூட இதுமாதிரியான தகவல் வரவில்லை. ஆம்ஸ்ட்ராங் மீது 7 வழக்குகள் இருந்தது. அவை அனைத்தும் முடிவடைந்தது.

ஆம்ஸ்ட்ராங் அவரது அரசு அனுமதி பெற்ற கைத்துப்பாக்கியை தேர்தல் நடத்தை விதிகள் முடிவுற்ற பின், அவர் பெற்றுள்ளார். அது அவரிடம் தான் உள்ளது. செம்பியம் காவல் நிலைய பகுதியில் பந்தர் கார்டன் பள்ளி மைதானத்திற்கு இப்போது அனைவரும் செல்கிறார்கள். இறுதிச்சடங்கு செய்யும் இடம் குறித்து இப்போது தகவல் இல்லை.

இப்போது போக்குவரத்து நிலைமை சீராக உள்ளது. காலை முதல் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ராஜீவ் காந்தி மருத்துவமனை அருகில் பாதுகாப்பு பணியில் உள்ளனர். மேலும், நாளை நடைபெறும் இறுதிச்சடங்கு வரை முக்கியமான இடங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 63 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் இது 58-வது கொலை” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "மனைவியால் மன உளைச்சல்".. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல்!

சென்னை: சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பெரியமேட்டில் மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

அப்போது பேசிய அவர், "படுகொலை நடந்த மூன்று மணிநேரத்தில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆம்ஸ்ட்ராங் உடன் வீட்டின் வெளியில் நின்று பேசிக்கொண்டிருந்த நபர்கள் படுகாயத்துடன் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல் கட்ட விசாரணையின் படி, இந்த கொலை அரசியல் பழிவாங்கலுக்காக நடந்தது போல் தெரியவில்லை. எந்த வாகனத்தில் வந்தார்கள், எம்மாதிரியான ஆயுதங்களை பயன்படுத்தினார்கள் என்பது குறித்த விசாரணை நடைபெறுகிறது.

மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பொன்னை பாலுவின் அண்ணன் ஆற்காடு சுரேஷ் சிறையில் இருக்கும் போது என்ன நடந்தது என விசாரித்து, அதற்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இருகிறதா என்ற கோணத்தில் விசாரிக்க வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட பொன்னை பாலு மீது 4 வழக்கு, மணிவண்ணன் மீது 4 வழக்கு என ஒருவர் தவிர மற்றவர்கள் மீது வழக்குகள் உள்ளது.

இதுவரை பிடிப்பட்டவர்களில் தென்மாவட்ட குற்றவாளிகள் இல்லை. பாலு வேலூர் மாவட்டம், மணிவண்ணன் திருவள்ளுர், திருமலை பெரம்பலூர். கடந்த ஓராண்டு காலமாக ஆயிரத்து 192 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் போடப்படுள்ளது. இதனால் அனைத்து ரவுடிகள் மீதும் இப்போது தீவிர கண்காணிப்பு உள்ளது. தற்பொழுது கூடுதல் கண்காணிப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங்கிற்கு நேரடியாக மிரட்டல் இருந்ததாக தகவல் இல்லை. அவர் அரசியலில் உள்ளதால் இதுகுறித்து உளவுத்துறை கண்காணிப்பில் கூட இதுமாதிரியான தகவல் வரவில்லை. ஆம்ஸ்ட்ராங் மீது 7 வழக்குகள் இருந்தது. அவை அனைத்தும் முடிவடைந்தது.

ஆம்ஸ்ட்ராங் அவரது அரசு அனுமதி பெற்ற கைத்துப்பாக்கியை தேர்தல் நடத்தை விதிகள் முடிவுற்ற பின், அவர் பெற்றுள்ளார். அது அவரிடம் தான் உள்ளது. செம்பியம் காவல் நிலைய பகுதியில் பந்தர் கார்டன் பள்ளி மைதானத்திற்கு இப்போது அனைவரும் செல்கிறார்கள். இறுதிச்சடங்கு செய்யும் இடம் குறித்து இப்போது தகவல் இல்லை.

இப்போது போக்குவரத்து நிலைமை சீராக உள்ளது. காலை முதல் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ராஜீவ் காந்தி மருத்துவமனை அருகில் பாதுகாப்பு பணியில் உள்ளனர். மேலும், நாளை நடைபெறும் இறுதிச்சடங்கு வரை முக்கியமான இடங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 63 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் இது 58-வது கொலை” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "மனைவியால் மன உளைச்சல்".. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல்!

Last Updated : Jul 6, 2024, 4:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.