கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் முதுநிலை காவலராக பணிபுரிந்து வருபவர் மனோகரன். இவருக்கு மகன், மகள் என இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், பிப்ரவரி 4ஆம் தேதியன்று காவல் நிலையத்தில் இரவு பணியில் இருந்த மனோகரனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அப்போது அவருடன் பணியில் இருந்து சக காவலர்கள், மனோகரனை கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், நிலைமை கவலைக்கிடமாக உள்ளது எனவும், மேல் சிகிச்சைக்கு பாண்டிச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறும் கூறினர்.
பின்னர், மனோகரன் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு ஆஞ்சியோ செய்ய வேண்டும் என கூறினர்.
இதைத்தொடர்ந்து உடனடியாக ஆஞ்சியோ செய்யப்பட்டது. பின்பு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மற்றொரு ரத்த குழாயில் அடைப்பு உள்ளதாக தெரிவித்தனர். அதனை சரிசெய்ய ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் ஆகும் எனவும் கூறினர்.