தமிழ்நாடு

tamil nadu

மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு!

By

Published : Jun 7, 2020, 4:31 AM IST

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவமனை ஊழியர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த இருவர் கைது
மருத்துவமனையில் பெண்ணிற்கு பாலியல் வன்புணர்வு

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரு பெண் தீவிர சிக்கிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் பணியாற்றிய ஊழியர்கள் இருவர் அப்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

இது குறித்து அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவர்கள் இருவரையும் கைதுசெய்தனர்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை மோசமான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்றுவருகிறார். இந்நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர் சைலேஷ் பாண்டே பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

மேலும், குற்றவாளிகள் மீது கடும் தண்டனை எடுக்கும்படி வலியுறுத்துவதாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து மாநில சுகாதார அமைச்சர் சிங் தியோலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் நிவாரண உதவிகள் வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details