தமிழ்நாடு

tamil nadu

வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட 50 வயது அங்கன்வாடி பணியாளர்

By

Published : Jan 6, 2021, 12:26 PM IST

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 50 வயது அங்கன்வாடி பெண் பணியாளர் ஒருவர் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

50-year-old Anganwadi worker raped, murdered in UP's Budaun
50-year-old Anganwadi worker raped, murdered in UP's Budaun

லக்னோ:உத்தரப் பிரதேச மாநிலம் பதாவும் மாவட்டம் உகைதி பகுதியைச் சேர்ந்தவர் 50 வயது அங்கன்வாடி பெண் பணியாளர். இவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக உகைதி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தலைமை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இதில், சிலரால் அவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், உடற்கூராய்வின் தகவலின்படியும், உறவினர்களின் புகார் அடிப்படையிலும் மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இவர்களை கைது செய்ய நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

விரைவில் குற்றவாளிகளை கைது செய்வதாகவும், இந்த கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம் எனவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: இயற்கை உபாதை கழிக்கச் சென்ற பட்டியலினப் பெண் பாலியல் வன்புணர்வு - இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details