ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தின் 13வது முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இன்று (ஜூலை.4) மாலை பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சராக ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
#WATCH | JMM executive president and former CM Hemant Soren takes oath as the Chief Minister of Jharkhand, at Raj Bhavan in Ranchi.
— ANI (@ANI) July 4, 2024
Governor CP Radhakrishnan administers him the oath to office. pic.twitter.com/b0LydgYuxb
முன்னதாக நேற்று (ஜூன்.4) மாலை சம்பை சோரன் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கினார். சம்பை சோரனின் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஏற்றுக் கொண்ட நிலையில், இன்று முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவியேற்றுக் கொண்டார்.
முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இருந்த போது ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் 8.5 ஏக்கா் நிலத்தைப் பெற போலி ஆவணங்கள் தயாரித்து தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக அவா் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. விசாரணைக்குப் பிறகு ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கடந்த ஜனவரி 31ஆம் தேதி கைது செய்தது.